Saturday, 17 February 2018

வெல்லும் தமிழீழம்

தமிழர்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிப் போன அதே நேரம் பலரும் அதிகம் பேசாத வார்த்தை தமிழீழம்!

எப்படி உருவானது தமிழீழம் என்ற வார்த்தை!?

  தற்போதைய இலங்கையின் முதற் பெயர்  வரலாற்று ரீதியாக தூய தமிழில் ஈழம் தான்! தமிழர்கள் தங்களுக்கான நிலப் பரப்புக்கும் வாழ்வாதாரப் பகுதிக்கு மட்டுமே சுதந்திரம் கேட்டு போராடியதால் அதை தமிழ் ஈழம் என்று அழைத்தனர்!

ஏன் தேவைப் பட்டது சுதந்திர தமிழீழம்!?

  இலங்கை-யில் வேலைக்கு தானே போனார்கள் தமிழர்கள் அங்கே போய் நாடு கேட்கலாமா என்று பலர் என்னை கேட்டது உண்டு!
 
  உண்மையில் அம் மண்ணின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான்!
அசோகர் மற்றும் அவரின் மகள் சுமத்திரை யின் வருகைக்கு பிறகு தான் அங்கே பௌத்தம் வளர்க்கப் பட்டு பின்னாளில் சிங்கள இனமாக மாற்றம் கண்டது!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதில் 19-ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழர்களே மிக மூர்க்கமாக எதிர்த்தனர்!
இரு சமூக மக்களும் சமயத்தில் இணைந்து எதிர்த்து நிற்கும் போது தங்களால் நினைத்த வியாபாரத்தை செய்ய இயலாமல் திணறியது குறிப்பிட தக்கது!

அப்போது தான் மக்களை எவ்வாறு பிரித்து ஆள்வது என யோசிக்க துவங்கியது பிரிட்டிஷ்!

   அதன் முதற் படியாக, இரு மக்களுக்கும் இடையே இன வெறுப்பை விதைக்க மஹாவம்சம் என்ற சிங்கள இன வரலாறாக கூறப்படும் நூல் ஒன்றை பாலி மொழியில் இருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த்து தந்தது சிங்கள மத குருமார்களையும் மக்களின் மனதில் மெல்ல மெல்ல வன்மத்தை விதைக்க துவங்கினர்!

இதன் தொடர்ச்சியாக சிறு சிறு இனவெறி பிரச்சனைகள் துவங்கி நாடு விடுதலை அடையும் சமயத்தில் " ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்ததும் தமிழர்கள் தமிழ்நாட்டோடு போய் சேர்ந்து விடுவார்கள் " என்று பௌத்த தலைவர்கள் கூறும் அளவுக்கு நிலைமை போனது!

     1944 ல் பிரிட்டன் ஓர் கமிஷனை நியமித்தது! இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன் அது!
   அப்போது தமிழர்கள் முன் வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும் மீத முள்ள 50% உரிமை பூர்வ குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே!  இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது!

   இது தான் தமிழர்களின் மீதான அடக்குமுறை க்கு பெரிதும் வசதியாகிப் போனது!

1959 செப் 25 அப்போதைய பிரதமர் சாலமன் பண்டார நாயகே ஓர் புத்த பிக்கு வால் சுட்டுக் கொல்லப் பட்டார்!  
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 2500 வது புத்த ஜெயந்தியில் சிலோனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக அறிக்க தாங்கள் உத்தரவிட்டதை இந்த பிரதமர் நிறைவேற்றவில்லை என்பது தான்!

     இது, அங்கே வளர்த்தெடுக்கப் பட்ட சிங்கள இனவெறி க்கு ஓர் சிறு உதாரணமே! 

1951 ல் தொடங்கி சிறு சிறு உரிமைகளுக்காக கோரிக்கை வைத்தவர் போராடியவர்கள் என அனைவரும் தாக்கப் பட்டார்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்புகள் ஆளும் கட்சி எதிர் கட்சி என மாறி மாறி கூட்டணி வைத்தும் ஏதேதோ ஒப்பந்தங்கள் போட்டும் தேர்தலில் போட்டி இட்டு ஆயிற்று!
ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் வைத்த கோரிக்கையை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்!

1958 ல் நடந்த வன்முறை தான் மிகப் பெரிய அளவில் தமிழர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது! குழந்தைகள் வரை எரியும் தீக்கு இரையாக்கப் பட்டனர்!
அதே அளவுக்கு 1983 ல் நடந்த கருப்பு ஜூலை தமிழர்கள் வாழ்வை புரட்டி போட்டது!

1970 களின் மத்தியில் ஆசிரியர் நவரத்தினம் உள்ளிட்டோரின் முயற்சியில் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது!

அதே கால கட்டங்களில் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்த அன்னியம் ஆனார்கள் என்பது வரலாற்று பதிவு!

   ஈழ இனப்படுகொலை-யில் சர்வதேசத்தின் பங்கு ஏன் வந்தது எதற்காக?!

     தமிழீழம் பற்றி பேசும் போது புவிசார் அரசியலை (Geo Politics)  பற்றி பேசியே ஆக வேண்டியது அவசியமாகிறது!

   தமிழர்களை கொன்றதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது! அதை புவிசார் அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.,  அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்!

அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில்,  
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது! அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடத்தில் இருப்பது  மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!   எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது!
அச் சமயம்  இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!
       - இது தான் அந்த அறிக்கை! 
     
    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்த துவங்கி இருந்தது!  ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை!

இதற்கு இடையில் Sri Lanka விற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து தன் பிடிப்பு எப்போதும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 1947 துவங்கி அடுத்த இருபது வருடம் தன் ஆதிக்கத்தை செலுத்தியது British.  அதனை இரட்டை ஜனநாயகம் என அப்போது அழைத்தனர்!
   
  இங்கிலாந்து முழுமையாக வெளியேறிய பின்னர் 75-80 களில் அமெரிக்கா தனது வானொலி நிலையமான Voice Of America வை திரிகோணமலையில் அமைக்க Sri Lanka வுடன் ஒப்பந்தம் போட்டது அமெரிக்கா!

அதை மூர்க்கமாக எதிர்த்தவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப் பட்ட அப்போதைய பிரதமர்  இந்திரா காந்தி!
தெற்காசியா-வில் இந்தியா தன் இருப்பை தக்க வைக்க மிக தீவிரமாக இருந்த நாட்கள் அவை!
 
   ஆனால்,
பின்னாளில் LTTE யிடம் இருந்து திரிகோணமலை இலங்கை கைக்கு வந்த பிறகு அந்த இடத்தை அமெரிக்கா வுக்கு தாரை வார்த்தது Sri Lanka.,

  ஆனால் அதுவே பின்னாளில் இலங்கை க்கு பிரச்சனையாக மாறவே VoA 2017 ஜனவரியில் வெளியேற்றப் பட்டது குறிப்பிட தக்கது!

   ஏன் தமிழகம் ஈழத்துக்காக நிற்க வேண்டும்!?

   தெற்காசிய பிராந்தியத்தில் உலகின் முதல் தேசிய இனத்தின் ஓர் இராணுவம் வலுவான அரணாக இருந்ததே இந்தியாவின் முக்கியமாக தமிழகத்தின் பாதுகாப்பாக கருதப் பட்டது சர்வதேச அறிஞர்களால்!
  ஆனால்,
ஒரு போதும் அதை தமிழகமும் சரி இந்தியாவும் சரி அதை ஏற்றுக் கொண்டதே இல்லை!

  அந்த பகுதி எவ்வளவு முக்கியமான ஓர் இடமாக நினைத்திருந்தால் அமெரிக்கா தன் முழு பலத்தையும் ஓர் உள் நாட்டு போரில் காட்ட தயாராககும் என்பதை தமிழர்கள் உணர்வது அவசியம்!

   இன்றைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இதனால் நமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களை பற்றியும் விரிவாக பேச இந்த பிப்.- 18 நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வோம்!

    #வெல்லும்_தமிழீழம் மாநாட்டில் சந்திப்போம்!

Tuesday, 16 January 2018

ஊடகங்களும் , சில பல வர்க்க பேதங்களும்

இன்று தோழர்.ஜிக்னேஷ் மேவானி……பாஜக மற்றும் சங் பரிவாரின் கொள்கை பரப்பு ஊது குழலாக செயல் படும் Republic தொலைக்காட்சி வெளியேறிய பிறகு தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பேன் என கூறியதை சிலர் சர்ச்சை ஆக்கி சுற்றி வருகிறார்கள்!

   உண்மையிலயே தோழர். ஜிக்னேஷ் செய்தது ஊடக தர்மத்திற்கு எதிரானது என தோன்றினாலும் அறம் சார்ந்து  நிற்காமல் ஆட்சியாளர்களின் அட்டூழியங்களையும், அவர்கள் செய்யும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி காவடி தூக்கும் அர்ணாப் போன்ற நச்சுப் பாம்புகளை அடித்து விரட்டுவதில் தவறே இல்லை!

ஊடகம் செய்யும் தவறுக்கு ஊடகத்தில் மாத சம்பளத்துக்கு பணி புரியும் அப்பாவிகள் என்ன செய்வார்கள் என நீங்கள் கேட்கலாம்! இங்கே நிராகரிப்பு செய்யப் பட்டது மதவெறி கூட்டத்தின் ஓர் ஒலிபெருக்கி-யே தவிர அந்த ஒலிப் பெருக்கியை கட்டும் தனிப் பட்ட நபர் அல்ல!

ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியும் தமிழர்களுக்கு எதிராகவும் நின்ற The Hindu, Front line போன்ற ஊடகங்களை மே பதினேழு இயக்கம் நேரடியாகவே அம்பலப்படுத்தி உள்ளோம். பல சமயம் The Hindu ஆங்கில நாளிதழின் நிருபர்கள் எடுக்க வந்த பேட்டியை தீர்க்கமாக புறக்கணிப்பு செய்திருக்கின்றோம்!

நமக்கு ஊடக நட்பு எந்த அளவிற்கு தேவை என நாம் நம்புகிறோமோ……  அதே அளவுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் காலம் கற்றுத் தந்து விடும்!

இன்று, தோழர்.ஜிக்னேஷ் மேவானி கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்து விட்டதாக பெருமை பீத்தும் சில ஆங்கில ஊடகங்கள் தான், H.ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian என்று கூறிய பின்னரும் எச்சை யின் பின்னால் மைக்கை தூக்கி கொண்டு ஓடும் அளவிற்கு தான் இருக்கிறது இவர்களின் அறச்சீற்றம்!

விஜயகாந்த், "என் கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குற நீங்க, ஜெயலலிதா கிட்ட போய் கேக்க முடியுமா …ன்னு கேட்டு, த்தூ💦ன்னு துப்பிய போதும் இவர்களால் விஜயகாந்தை திட்ட முடிந்ததே தவிர ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பேச இயலவில்லை! அவர்களை சொல்லி தப்பில்லை!
இவ்வளவு தான் இவர்களாலும் இயலும்!

இன்றைய தேதியில் யார் பத்திரிகையாளர்களை நயமாக கையாளுகிறார் என்று கேட்டால், TTV என்று தான் பல ஊடவியலாளர்களுரம் கூறுவார்கள். உண்மையில், அவ்வாறு தான் கையாள வேண்டும் என்ற நிர்பந்தம் தினகரனுக்கு உண்டு அதிலும் அதிகார மையத்தை நோக்கி தன்னை நகர்த்தும் ஒருவர் அப்படி இருப்பதும் ஒருவகையில் அவருக்கு தேவையான அனுகுமுறை தான்!
ஆனால்,
வாழ்நாள் முழுதும் அடக்குமுறைக்கு உள்ளான ஓர் சமூகத்திற்காக போராட களத்தில் இறங்குபவனுக்கு யாருக்கும் இறங்கி பேச வேண்டிய தேவையும் இல்லை! ஊடக வெளிச்சத்திற்காக  சமரசமான அனுகுமுறையை காட்ட வேண்டிய தேவையும் இல்லை! வெற்றியோ தோல்வியோ தேவை இல்லை என்பதில் தெளிவாக வும் தன் சமூகம் நிமிர்ந்தால் மட்டுமே தனக்கான விடுதலை அது என்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு எந்த லைம் லைட் பிச்சையும் தேவையில்லை!

   இனி, ஒவ்வொருவரும் ஊடக இயக்கிகளை தோலுரித்து காட்டுவதில் தயங்காமல் இறங்குவோம்!

#StandWithJignesh

Friday, 5 January 2018

ரஜினி, கமல் மற்றும் சில அரைவேக்காடு மதவெறியர்களும்!

கமல் எத்தனை பெரிய நுண்ணரசியல் வாதி என்பது என்னைப் போன்று அவரின் பல வருடமாக தீவிர ரசிகனாக இருந்தவர்களுக்கு தெரியும்!

விடுதலை புலிகளை மறைமுகமாக எதிர்க்க  துவங்கி தமிழ் தேசிய, மார்க்சிய லெனினிய போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் ஈழ இனப்படுகொலையை மறைக்க RAW கொழும்பில்  நடத்திய IIFA அவார்டுக்கு போக முதல் ஆளாய் 2009 -ல் தயார் ஆனதையும் நன்றாகவே அறிந்துள்ளோம்!

அதே போல் ரஜினி 1995-96 ல் சென்னை (DD)  தொலைக்காட்சி க்கு அளித்த நேர்காணலை என் ஊரில் தெருவை அடைத்து மேசை போட்டு கலர் டிவி-யில் ஒளிபரப்பு செய்து புழங்காகிதம் அடைந்த திமுகவினருக்கு சிறிதும் குறைவில்லாதது பாஜக வினரின் இன்றைய "ஆன்மிக அரசியல் '' நாடகம்!

   மு.க - ஜெ. வுக்கு பிறகு நாத்திக இடத்தில் கமலையும் ஆத்திக இடத்தில் ரஜினியையும் எப்படியாவது பொருத்தி விட முடியாதா என்று தான் இந்துத்துவா ஏதேதோ சர்கஸ் செய்து பார்க்கின்றது!

 
   ஆனால்,
அவர்கள் இருவருமே Ball point பேனாவில் சொருக முயற்சிக்கும் Ink Pen மூடி-யை போல  நினைக்கவே கண்றாவியாக இருக்கிறது அந்த  Combination.

    தன்னை ஓர் ஆன்மீகம் செறிந்த அப்பாவியாக காட்ட நினைக்கும் ரஜினி -க்கு வாயிலயே வாஸ்து சரியில்லை!

    * கொள்கை என்ன வென்று கேட்டால் தலை சுற்றுவது!

* போராடுறதுக்கும் அறிக்கை விடறதுக்கும் வேற கூட்டம் இருக்கு!

* Assembly Election வரைக்கும் அரசியல் பேச வேண்டாம்!

   என்பது போன்ற தத்துவ முத்துக்களை உதிர்த்து தான் அடுத்தவனுக்கு கைக் கூலியா தான் இருக்கேன் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிப்பது!
   ஒரு புறம் என்றால் …….,

கமல் தன்னை Intellectual ஆக காட்டுவதாக நினைத்து ட்விட்டரில் மட்டுமே கம்பு சுத்தி கொஞ்ச நாள் சீன் போட்டார் அதையும் சில்லு சில்லாக உடைத்து விட்டார்கள் நெட்டிசன்கள்!

*  தமிழகம் ஊழலில் திளைக்கிறது எல்லோரும் அமைச்சர்களுக்கு இணைய வழியே புகார் அனுப்புங்கள்.

* டீமானிடைசேஷன் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது என்பார்!  ஆனால், FICCI ன் ஊடகத்துறை Chairman என பெருமை பட்டுக்கொள்வார்!

*  தமிழகத்தில் டெங்கு மரணங்களுக்கு காரணமே சுகாதாரமின்மை தான் என மாநில அரசை கண்டித்து ட்விட் போடுவார் கமல்.,
   சுவச் பாரத் -க்கு 0.5% வரியை ஒவ்வொரு தமிழனுக்கு இந்தியாவுக்கு கட்டுகிறான்! இதில் இந்தியாவுக்கு இருக்கும் பங்கை பற்றி பேசவே வாய் வராது கமலுக்கு! இதில் பெரிய வேடிக்கையே தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர் கமல்.!

* தலித் படுகொலைகள், மாட்டின் பெயரில் படுகொலைகள்., GST என எதையும் எதிர்த்து பேசவே நெஞ்சம் நடுங்குவதை தமிழன் கண் கூடாக பலமுறை பார்த்துவிட்டான்!

* NEET -ல் அனிதா படுகொலைக்கு "திருமாவளவன் " தெருவில் இறங்கி போராட வேண்டும் என்பார்!
   ஜெ. வை கொன்ற பிறகு NEET தமிழகத்தில் திணித்த இந்துத்துவா பற்றி கேள்வியே எழுப்பாதவர்.,
   அனிதா கொலைக்கு முக்கியமான காரண கர்த்தாவான "நிர்மலா சீதாராமன் " பற்றி வாயே திறக்க விட வில்லை போல அவரின் 'நூல் பாசம்'

  இப்படி பட்ட தமிழின துரோகிகளை கண்டுணர்ந்து தூரமாக விலக்கி வைப்பதையே முந்தைய தமிழர்களின் வரலாறு!
அதையே தான் நாமும் இப்போது செய்யப் போகிறோம் ………! 

Friday, 22 December 2017

விவசாயிகளும்,WTO-வின் பல ஆண்டு கொலைகளும் ...!

இன்று நடக்கும் விவசாய தற்கொலைகள் அனைத்திற்கும் WTO தான் என காரணம் நம்மால் உறுதியாக கூற முடியும்!
ஆம், இன்று நடக்கும் விவசாய தற்கொலைகளை அன்றே தடுக்க வேண்டி ஒருவர் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார்!
தென் கொரியாவின் தேசிய முற்போக்கு 
விவசாயிகள் சங்கத்தின் தலைவர் இவர். உலகில் எந்த விவசாயி -யின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் நின்றவர்!
1990 உருகுவே நாட்டு விவசாயிகளுக்காக ஜெனீவா - வில் உருகுவே WTO வில் விவசாய உரிமைகளில் கை வைக்கப் போகிறது எனத் தெரிந்ததும் அம் மக்களுக்காக போராடியவர்.
அவர், கொரியா வை சார்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் Lee Kuyng - hae (லீ க்யூன் கை) .
நிற்க, 2002 ம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததாக ஆய்வுகள்உண்மையை வெளிச்சம் போடுகின்றன!
சமீபத்தில்,
2014 - ல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை - 5,650
2015 ல் 8ஆயிரத்தை தாண்டியது!
2016 ஏப்ரல் வரை மஹாராஷ்ட்ரா வில் 400 க்கும் அதிகமான தற்கொலைகள்! அடுத்ததாக தெலுங்கானா , 100க்கும் அதிகமான தற்கொலைகளை மத்திய பிரதேசமும் சட்டீஸ்கரும் பதிவு செய்துள்ளது!


அந்த குறிப்பிட்ட காலங்களில் தமிழக விவசாயிகள் தற்கொலை வடஇந்திய ஊடகங்களில் பெரிதாக இடம் பெற வில்லை என்றே தோன்றுகின்றது! ஒருவேளை இப்போது கணக்கெடுத்தால் மிகவும் மோசமான எண்ணிக்கையை கிடைக்கப் பெறலாம்!
2002 ற்கு பிறகு தான் மத்திய பிரதேசத்தின் விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததாகவும் அதற்கு காரணமாக பருத்தியில் BT விதைகளை இந்திய அரசு திணித்து மேற்குலகிற்கு தரகு வேலை பார்த்தது என்பததன் விளைவு அது!
சரியாக அதே கால கட்டத்தில், பிப்ரவரி - 2003 ல் WTO தலைமை செயலகத்தின் முன்புறம் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார் லீ மூன்றாம் உலக நாடுகளின் மீது உணவு உற்பத்தி கட்டுப்பாட்டை சர்வதேசம் திணிக்க முயல்வதை எதிர்த்து!
இரண்டு மாதம் தொடர்ந்தது அப் போராட்டம்!
2003 ம் ஆண்டு விவசாயத்தை WTO வின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப் போகிறார்கள் என தெரிந்ததும் பல நாடுகளின் விவசாயிகளை திரட்டி போராடத் துவங்கினார் லீ!
ஜப்பான், இத்தாலி என பல நாடுகளை சேர்ந்த விவசாயிகளும் Mexico வின் கான்கூன் -ல் WTO கூட்டம் நடக்கும் அரங்கம் முன்பு குவிந்தனர்.
ஒப்பந்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க போராட்டம் தீவிரம் அடைந்தது! வன்முறை எப்போதும் வெடிக்கலாம் என்ற கொதி நிலை!
ஆனால், கையொப்பம் இடுவதில் அரசுகள் மும்மரமாக இருந்தது!
போராட்டம் வன்முறையாக வெடித்தே விட்டது!
போலீஸ்க்கும் விவசாயிகளுக்கும் தடியடி, கண்ணீர் புகை குண்டு என வரம்பு மீறி சென்றே விட்டது!
தடைகளை தாண்டி உள்ளே குதித்த "லீ " தன் கையில் இருந்த கத்தியை கையில் எடுத்தார்
" என்னை பற்றி கவலைப் படாதீர்கள்! தொடர்ந்து உங்களால் முடிந்த வரை போராடுங்கள் " என்று கூறியவாரே தன் நெஞ்சில் கத்தியை பாய்ச்சினார்!
எத்தனையோ போராடியும் மூன்று மணி நேரத்திற்கு பின் அவரின் உயிர் பிரிந்தது!



இன்று நாம் காணும் எத்தனையோ விவசாய தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டி தான் அவர் தன் உயிரை மாய்த்தார்! அன்றே நாம் விழித்திருந்தால் இன்று இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம்!
பாஜக - காங் என இரு அரசுகளும் தன் மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம் என்பது TFA ல் கையொப்பம் இட்டது தான்!
எனவே இந்த கட்சி / அந்த கட்சி என எதையும் நம்பி பிரயோஜனம் இல்லை!
போராட்டத்தை தவிர நம்மை காக்க வேறு வழி இல்லை!

Saturday, 28 October 2017

Banking Merger -

அரசுத் துறை வங்கிகள் அனைத்தினையும் ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவைக்கு அழுத்தம் கொடுக்கப் படுவதாக தகவல்கள் வருகின்றது!
இதன் மூலம் பொருளாதாரம் உயரும் , எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது போன்ற ஜால வார்த்தைகள் ஆங்கில பத்திரிக்கைகளை நிறைகின்றன !

இது எப்படி பட்ட விளைவினை நம்மை போன்ற சாமானியர்களுக்கு உண்டாக்கும் என்பதை பார்க்கும் முன் ,

ஒரு இரண்டு வருடம் முன்பு அதானி -க்கு SBI வங்கி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்கும் தொழில் செய்ய 6 ஆயிரம் கோடி கடன் கொடுத்ததையும் அது இன்னும் சில மாதங்களில் SBI யினால் Short Close செய்யப் பட போகின்றது என்பதினையும் சில வாரங்கள் முன்பே ஆதாரங்களுடன் நாம் முன் வைத்திருந்தோம் !

அதிக வைப்பு தொகையும் , கையிருப்பும் கடைப்பிடிக்காத விழிம்பு நிலை வங்கிகள் அனைத்தையும் மூடும் வேலையை செய்ய துவங்கி விட்டது இந்திய அரசு ! ( Non-performing assets ) NPA என்ற அடிப்படையில் கிரமப்புறங்களில் சேவை வழங்கி வரும் பல வங்கிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர துடிக்கிறது WTO - தன் தற்போதைய அடிமை பாஜக !

இவர்களின்ஒரே நோக்கம் உழைக்கும் மக்களின் கடைசி சேமிப்பை சிதைப்பதும் ...தனியார் கார்பொரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் சில வருடங்கள் முன்பே Reliance” வங்கி தொடங்க RBI-யிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நினைவு இருக்கிறதா......... ?

இந்தியாவில் Allahabad Bank முதல் , Vijaya Bank வரை SBI தவிர்த்து 20 அரசுக்கு சொந்தமான வாங்கிகள் உள்ளன !

இவை அனைத்தையும் SBI ன் கீழ் இணைத்து விட்டால் இதில் கொடுக்கப் பட்ட கடன்களை பற்றிய விபரங்களையும் மீழ் வசூலையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகிவிடும்!

இந்த அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு ஓடிய (இல்லை இல்லை பாஜக தப்ப வைத்த )  விஜய் மல்லையா மட்டுமே 6400 கோடி தர வேண்டியது உள்ளது ! ( Except  Axis Bank & Other Banks  653Cr.)

விபரம் கீழே:-

According to reports, following is the list of 17 banks which have paid nearly Rs.7,000 crore (excluding interest) to Mallya:-

Bank name
Amount
SBI
Rs.1,600 cr
PNB
Rs.800 cr
IDBI Bank
Rs.800 cr
Bank of India
Rs.650 cr
Bank of Baroda
Rs.550 cr
United Bank of India
Rs.430 cr
Central Bank
Rs.410 cr
UCO Bank
Rs.320cr
Corporation Bank
Rs.310 cr
State Bank of Mysore
Rs.150 cr
Indian Overseas Bank
Rs.140 cr
Federal Bank
Rs.90 cr
Punjab & Sind Bank
Rs.60 cr
Axis Bank
Rs.50 cr
Other banks
Rs.603cr

இந்த நிலையிலும் இவர்கள் இதை நடத்தி முடிக்க வேண்டும் என நினைத்தால் , 1997-ல் வங்கி துறையில் நிகழ்ந்த Asian Economic Crisis யை நினைவு படுத்துவது அவசியமாகிறது !
அப்போது ஆசிய நாடுகள் முழுதும் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நாடுகளும் தள்ளாடியது குறிப்பிட தக்கது அதன் விளைவாக சில நாடுகள் அனைத்து வங்கிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது! அதில் மலேசியா முக்கியமான ஓர் நாடு !

அப்போது கூட இந்திய வங்கிகளை அந்த நெருக்கடி சிறிதும் சீண்ட வில்லை என்பது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று !  மாறாக தனியார் வங்கிகள் துவங்குவதற்கும் அனுமதி அளிக்க துவங்கியது RBI .

வங்கிகளை இணைத்ததால் நாம் சந்தித்த ஓர் பெரும் இழப்பு PNB என அழைக்கப்படும் Punjab  National  Bank உடன் 1993 ல் New Bank of India என்ற வாங்கியுடன் வலுக்கட்டாயமாக இணைத்தது RBI. அதற்கு சொல்லப் பட்டகாரணம்:- இவ் வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாகவும் பண வீக்கத்தை உண்டாக்கவும் செய்யும் என்பதால் வலுவான நிதி நிலை கொண்ட PNB உடன் இணைக்கின்றோம் என்றது RBI.

ஆனால்,
இதன் விளைவு 1996 ல் PUNJAB  NATIONAL  BANK 96 கோடி இழப்பு என கணக்கு காட்டும் அளவுக்கு போனது !
இரண்டு வங்கிகளும் வழங்கிய கடன், Structure Of functioning, Staff Co-operation என 

பலவும் சேர்ந்து அடுத்த 5 வருடங்களுக்கு PNB யை குறிப்பிட தக்கது !



SBI இதற்கு முன்பு இணைத்து கொண்ட வங்கிகளால் நேர்ந்த அவலங்களை நாம் இங்கே காண்பதும் அவசியம் :- 

வங்கிகளில் 7 Sisters என குறிப்பிடப் படும் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு உருவாக்கப் பட்ட வங்கிகளை இணைத்து கொள்ளும் படி 1991 -ல் நரசிம்மன் குழு SBI க்கு அறிவுரை வழங்கியது !

அந்த வங்கிகள் 

1. SBBJ  -  State Bank of Bekaner & Jaipur 

2.Bank of Indor / State Bank Of Indore - இது 1920 ல் மஹாராஜா. Tukoji Rao Holkar வால் துவங்க பட்டது! 

3.State Bank of Saurashtra - 1902 ல் பவன் நகர் வங்கி குழுமத்தால் துவங்கப் பட்டது!


4.State of Hyderabad Nizam's - 1941 ல் துவங்க பட்டது Hyderabad நிஜாம் அவர்களால்,,...
பின்னாளில் இதுவே  State Bank of Hyderabad (SBH) .

இதே வரிசையில் பட்டியாலா , திருவான்கூர் , மைசூர் வங்கிகள் உட்பட..... 

இவற்றிக்கு ஏற்கனவே 1963 முதலே SBI நிதி உதவி அளித்து வருவது குறிப்பிட தக்கது !

ஆயினும் , 2008 , 2010 என பொறுமையாகவே தன்னோடு  இரு வங்கிகளை மட்டுமே இணைத்து கொண்டது SBI . 

மேலும் அரசின் பல கட்ட அழுத்ததிற்கு பின்னரே 2016 ன் மத்திய அரசின் ஆணைப் படி 2017 - மார்ச்-ல் மீதி 5 வங்கிகளையும் தன்னோடு இணைத்து கொண்டது SBI . 

ஏப்ரல் 2017 ல் SBI வெளியிட்ட ஆண்டு அறிக்கை எத்தனை பெரிய சுமையை இந்த கையால் ஆகாத அரசு தன் மேல் சுமத்தி உள்ளது என வெளிக்காட்டியது !

ஆதாரம் கீழே :- 




இந்த அரசு செய்யும் பல முறைக்கேடுகளில் இது மிக முக்கியமாக நாட்டை Zero Balance என்ற நிலையில் நிறுத்தும் ஒன்று !

இதன் மூலம் பல பண முதலைகள் பெற்ற

 கடன்ங்கள் மூடி மறைக்கப் படலாம் ., 

 மொத்தமாக  தள்ளுபடி என்ற பெயரில்........

 அம்பானி, அதானி , வேதாந்தா போன்றோர் வாங்கிய கடன்கள் ஊத்தி மூடப் படலாம் !     

அதோடு நீங்களும் நானும் சிறுக சிறுக சேர்த்த சேமிப்பு மண்ணோடு மண்ணாக போய் விட்டதாகவும் , நாட்டின் நலன்னுக்காக மக்கள் இதை பொறுத்து கொள்ள வேண்டும் என்றும் புரியாத மொழியில் பைஜாமா போட்ட ஒருத்தர் TV -யில் பேசுவார் !

இதை எதிர்த்து வரும் நாட்களில் நீங்களும் நானும் தெருவில் இறங்காமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய இயலாது !

நாம் வேகமாக  எதிர் வினை ஆற்றும் நிலையில் உள்ளோம் என்பதை மறவாதீர்கள் !