Tuesday, 16 January 2018

ஊடகங்களும் , சில பல வர்க்க பேதங்களும்

இன்று தோழர்.ஜிக்னேஷ் மேவானி……பாஜக மற்றும் சங் பரிவாரின் கொள்கை பரப்பு ஊது குழலாக செயல் படும் Republic தொலைக்காட்சி வெளியேறிய பிறகு தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பேன் என கூறியதை சிலர் சர்ச்சை ஆக்கி சுற்றி வருகிறார்கள்!

   உண்மையிலயே தோழர். ஜிக்னேஷ் செய்தது ஊடக தர்மத்திற்கு எதிரானது என தோன்றினாலும் அறம் சார்ந்து  நிற்காமல் ஆட்சியாளர்களின் அட்டூழியங்களையும், அவர்கள் செய்யும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி காவடி தூக்கும் அர்ணாப் போன்ற நச்சுப் பாம்புகளை அடித்து விரட்டுவதில் தவறே இல்லை!

ஊடகம் செய்யும் தவறுக்கு ஊடகத்தில் மாத சம்பளத்துக்கு பணி புரியும் அப்பாவிகள் என்ன செய்வார்கள் என நீங்கள் கேட்கலாம்! இங்கே நிராகரிப்பு செய்யப் பட்டது மதவெறி கூட்டத்தின் ஓர் ஒலிபெருக்கி-யே தவிர அந்த ஒலிப் பெருக்கியை கட்டும் தனிப் பட்ட நபர் அல்ல!

ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியும் தமிழர்களுக்கு எதிராகவும் நின்ற The Hindu, Front line போன்ற ஊடகங்களை மே பதினேழு இயக்கம் நேரடியாகவே அம்பலப்படுத்தி உள்ளோம். பல சமயம் The Hindu ஆங்கில நாளிதழின் நிருபர்கள் எடுக்க வந்த பேட்டியை தீர்க்கமாக புறக்கணிப்பு செய்திருக்கின்றோம்!

நமக்கு ஊடக நட்பு எந்த அளவிற்கு தேவை என நாம் நம்புகிறோமோ……  அதே அளவுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் காலம் கற்றுத் தந்து விடும்!

இன்று, தோழர்.ஜிக்னேஷ் மேவானி கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்து விட்டதாக பெருமை பீத்தும் சில ஆங்கில ஊடகங்கள் தான், H.ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian என்று கூறிய பின்னரும் எச்சை யின் பின்னால் மைக்கை தூக்கி கொண்டு ஓடும் அளவிற்கு தான் இருக்கிறது இவர்களின் அறச்சீற்றம்!

விஜயகாந்த், "என் கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குற நீங்க, ஜெயலலிதா கிட்ட போய் கேக்க முடியுமா …ன்னு கேட்டு, த்தூ💦ன்னு துப்பிய போதும் இவர்களால் விஜயகாந்தை திட்ட முடிந்ததே தவிர ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பேச இயலவில்லை! அவர்களை சொல்லி தப்பில்லை!
இவ்வளவு தான் இவர்களாலும் இயலும்!

இன்றைய தேதியில் யார் பத்திரிகையாளர்களை நயமாக கையாளுகிறார் என்று கேட்டால், TTV என்று தான் பல ஊடவியலாளர்களுரம் கூறுவார்கள். உண்மையில், அவ்வாறு தான் கையாள வேண்டும் என்ற நிர்பந்தம் தினகரனுக்கு உண்டு அதிலும் அதிகார மையத்தை நோக்கி தன்னை நகர்த்தும் ஒருவர் அப்படி இருப்பதும் ஒருவகையில் அவருக்கு தேவையான அனுகுமுறை தான்!
ஆனால்,
வாழ்நாள் முழுதும் அடக்குமுறைக்கு உள்ளான ஓர் சமூகத்திற்காக போராட களத்தில் இறங்குபவனுக்கு யாருக்கும் இறங்கி பேச வேண்டிய தேவையும் இல்லை! ஊடக வெளிச்சத்திற்காக  சமரசமான அனுகுமுறையை காட்ட வேண்டிய தேவையும் இல்லை! வெற்றியோ தோல்வியோ தேவை இல்லை என்பதில் தெளிவாக வும் தன் சமூகம் நிமிர்ந்தால் மட்டுமே தனக்கான விடுதலை அது என்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு எந்த லைம் லைட் பிச்சையும் தேவையில்லை!

   இனி, ஒவ்வொருவரும் ஊடக இயக்கிகளை தோலுரித்து காட்டுவதில் தயங்காமல் இறங்குவோம்!

#StandWithJignesh

Friday, 5 January 2018

ரஜினி, கமல் மற்றும் சில அரைவேக்காடு மதவெறியர்களும்!

கமல் எத்தனை பெரிய நுண்ணரசியல் வாதி என்பது என்னைப் போன்று அவரின் பல வருடமாக தீவிர ரசிகனாக இருந்தவர்களுக்கு தெரியும்!

விடுதலை புலிகளை மறைமுகமாக எதிர்க்க  துவங்கி தமிழ் தேசிய, மார்க்சிய லெனினிய போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் ஈழ இனப்படுகொலையை மறைக்க RAW கொழும்பில்  நடத்திய IIFA அவார்டுக்கு போக முதல் ஆளாய் 2009 -ல் தயார் ஆனதையும் நன்றாகவே அறிந்துள்ளோம்!

அதே போல் ரஜினி 1995-96 ல் சென்னை (DD)  தொலைக்காட்சி க்கு அளித்த நேர்காணலை என் ஊரில் தெருவை அடைத்து மேசை போட்டு கலர் டிவி-யில் ஒளிபரப்பு செய்து புழங்காகிதம் அடைந்த திமுகவினருக்கு சிறிதும் குறைவில்லாதது பாஜக வினரின் இன்றைய "ஆன்மிக அரசியல் '' நாடகம்!

   மு.க - ஜெ. வுக்கு பிறகு நாத்திக இடத்தில் கமலையும் ஆத்திக இடத்தில் ரஜினியையும் எப்படியாவது பொருத்தி விட முடியாதா என்று தான் இந்துத்துவா ஏதேதோ சர்கஸ் செய்து பார்க்கின்றது!

 
   ஆனால்,
அவர்கள் இருவருமே Ball point பேனாவில் சொருக முயற்சிக்கும் Ink Pen மூடி-யை போல  நினைக்கவே கண்றாவியாக இருக்கிறது அந்த  Combination.

    தன்னை ஓர் ஆன்மீகம் செறிந்த அப்பாவியாக காட்ட நினைக்கும் ரஜினி -க்கு வாயிலயே வாஸ்து சரியில்லை!

    * கொள்கை என்ன வென்று கேட்டால் தலை சுற்றுவது!

* போராடுறதுக்கும் அறிக்கை விடறதுக்கும் வேற கூட்டம் இருக்கு!

* Assembly Election வரைக்கும் அரசியல் பேச வேண்டாம்!

   என்பது போன்ற தத்துவ முத்துக்களை உதிர்த்து தான் அடுத்தவனுக்கு கைக் கூலியா தான் இருக்கேன் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிப்பது!
   ஒரு புறம் என்றால் …….,

கமல் தன்னை Intellectual ஆக காட்டுவதாக நினைத்து ட்விட்டரில் மட்டுமே கம்பு சுத்தி கொஞ்ச நாள் சீன் போட்டார் அதையும் சில்லு சில்லாக உடைத்து விட்டார்கள் நெட்டிசன்கள்!

*  தமிழகம் ஊழலில் திளைக்கிறது எல்லோரும் அமைச்சர்களுக்கு இணைய வழியே புகார் அனுப்புங்கள்.

* டீமானிடைசேஷன் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது என்பார்!  ஆனால், FICCI ன் ஊடகத்துறை Chairman என பெருமை பட்டுக்கொள்வார்!

*  தமிழகத்தில் டெங்கு மரணங்களுக்கு காரணமே சுகாதாரமின்மை தான் என மாநில அரசை கண்டித்து ட்விட் போடுவார் கமல்.,
   சுவச் பாரத் -க்கு 0.5% வரியை ஒவ்வொரு தமிழனுக்கு இந்தியாவுக்கு கட்டுகிறான்! இதில் இந்தியாவுக்கு இருக்கும் பங்கை பற்றி பேசவே வாய் வராது கமலுக்கு! இதில் பெரிய வேடிக்கையே தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர் கமல்.!

* தலித் படுகொலைகள், மாட்டின் பெயரில் படுகொலைகள்., GST என எதையும் எதிர்த்து பேசவே நெஞ்சம் நடுங்குவதை தமிழன் கண் கூடாக பலமுறை பார்த்துவிட்டான்!

* NEET -ல் அனிதா படுகொலைக்கு "திருமாவளவன் " தெருவில் இறங்கி போராட வேண்டும் என்பார்!
   ஜெ. வை கொன்ற பிறகு NEET தமிழகத்தில் திணித்த இந்துத்துவா பற்றி கேள்வியே எழுப்பாதவர்.,
   அனிதா கொலைக்கு முக்கியமான காரண கர்த்தாவான "நிர்மலா சீதாராமன் " பற்றி வாயே திறக்க விட வில்லை போல அவரின் 'நூல் பாசம்'

  இப்படி பட்ட தமிழின துரோகிகளை கண்டுணர்ந்து தூரமாக விலக்கி வைப்பதையே முந்தைய தமிழர்களின் வரலாறு!
அதையே தான் நாமும் இப்போது செய்யப் போகிறோம் ………!