Friday, 30 December 2016

கமலும் நுண்ணரசியலும்

நேற்று மதிய உணவை முடித்து விட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம் Dining Hall ல்!
விஸ்வரூபம் படத்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருந்தது!

நண்பர் ஒருவர், அந்த படத்தை பற்றியும் அதன் வேகம் பற்றியும் பேசினார். அடுத்து கமலை புகழத்தான் போகிறார் என நன்றாக தெரிந்து விட்டது!

நான் மெல்ல,
இந்த படத்தோட இரண்டாம் பாகம் எடுத்து ரெண்டு வருசம் ஆச்சு ஏன் வரலைன்னு தெரியுமா???

தெரியலையே ……?

  இந்த படத்தில் கமல் அமெரிக்காவுக்கு தூக்கியிருந்த சொம்பு CIA வே எதிர்பார்க்காத அளவுக்கு!

"பெண்களையும் குழந்தைகளையும் அமெரிக்கர்கள் கொல்ல மாட்டார்கள் " - இப்படி ஓர் வசனம் வரும்!

  இது எந்த அளவு அபத்தம் என உலக நாடுகள் அனைத்திற்கும் நன்றாகவே தெரியும்! 

   வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈழம் தற்போது சிரியா என சாட்சிகள் கண் முன்னாடி ஏராளம்!

   இந்த படம் டி.வியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் கருத்தியல் தளத்தில் குறைந்தது 10 பேராவது  ஒவ்வொரு முறையும் கமலை கழுவி கழுவி ஊற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!

  இந்த லெட்சணத்தில் இரண்டாம் பாகம் வெளி வந்தால் அது எவ்வளவு எதிர்ப்பையும் கெட்ட பெயரையும் சம்பாதித்து கொடுக்கும் எனவும் கூடவே கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் தன் சோஷலிச முகமூடி காற்றில் பறந்து போகும் என்பதை கமல் நன்றாக அறிவார்!

      ஹோ……… இவ்ளோ இருக்கா என்றார் நண்பர்!

  
அவரிடம் சொல்லாத சில கமலின் பச்சோந்தி தனங்கள் :-

    2009 - July -August ல் IIFA Awards என்ற பெயரில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மறைக்க இந்தியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் ஆளாக சம்மதம் தெரிவித்தது "கமல் " தான் அதன் பிறகு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்! 

  நம் தோழர்கள் கமல் வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் சிறீலங்கா போகும் திட்டத்தை கை விடுவதாக அறிவித்தார் கமல்!

அதற்கு ஒரு நாள் முன்பே அமிதாப் வீட்டை மும்பையில்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியல் அவர்கள் இருவரும் செல்ல வில்லை என அறிவித்திருந்தனர்!  மும்பை போராட்டத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் கலந்து கொண்டதும், இயக்குநர் பாரதிராஜா தனக்கு அளிக்கப் பட்ட தேசிய விருதை திருப்பி அனுப்பியதும் நினைவு கூறத்தக்கது!

   கமலுக்கு முட்டு கொடுத்து யாரும் தயவு செய்து வந்து விடாதீர்கள்! காரணம் உங்களை விட வெறித்தமான ரசிகனாக 20 வருடம்  (விவரம் தெரிந்த நாள் முதல்)  இருந்தவன் நான்!

2013 ஜனவரியில் அவரின் விஸ்வரூபம் படத்திற்கு ஜெ. தடை விதித்த போது அவருக்காக அவர் வீட்டு வாசலில் விடியவிடிய அமர்ந்திருந்த பலரோடு நானும் ஒருவனாக இருந்திருப்பேன், ஏனோ அன்று உடன் பணிபுரிந்த நண்பர் வேறு வேலை இருப்பதாக இழுத்து சென்று விட்டார் என்னை!  அன்று அவர் மேல் கோபம் வந்தது! இன்று சுத்தமாக இல்லை! காரணம், அதற்கு அடுத்த மாதமே லயோலா கல்லூரி மாணவர்கள் "ஈழத்திற்காக " உண்ணாவிரதம் அமர்ந்த போது தமிழகத்தின் அனைத்து மாணவ சமுதாயமும் ஒன்றிணைந்தது குரல் குடுத்தது!

  சரியாக 1 மாதம் முன்பு யாருக்காக தமிழகமே ஒன்று திரண்டு குரல் கொடுத்ததோ அதே கமல் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்.
மாணவர்களோடு உண்ணாநோன்பு பந்தலில் அமர்ந்த சிம்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கும் எதிரியாகி போனார். அவரின் அடுத்த படம் வர இரண்டரை ஆண்டுகள் ஆனது! சிம்பு செய்த ஒரே தவறு தமிழினத்துக்காக குரல் கொடுத்தது மட்டுமே!

     இப்போ தெரியுதா யார் யதார்த்த வாதி யார் சந்தர்ப்பவாதி என்று!

திரு.கமல் அவர்களே நீங்கள் 10 வருடம் முன்னோக்கி படம் எடுப்பதாக சொல்லி நுண்ணரசியலை திணித்து யாருக்கு படத்தை எடுத்தீர்ளோ,  அந்த 20 வருடம் பின்னோக்கி யோசிக்கும் என் அப்பா மாமா தலைமுறை படம் பார்ப்பதை நிறுத்தியே பல நாட்கள் ஆகி விட்டது!

   வேணும்னா America ல Release பண்ணுங்களேன் ஆஸ்கார் ஏதும் தருவாய்ங்க The Best Comedy Film ன்னு!


Sunday, 11 December 2016

Rimland - வரலாறும் புவியியலும்! 

சிறு வயதில் உங்களுக்கு பிடிக்காத பாடம் எது என்று கேட்டால் நான் உடனடியாக கணிதம் என்பேன்! இன்றும் அது தான்!
இன்றைய நாட்களில் எனக்கு வரலாறு பிடிக்காது என்று சொல்பவர்கள் கொஞ்சம் அதிகமாகவே காண முடிகிறது! அதையும் ஒரு பெருமையின் வெளிப்பாடாக ! இவர்கள் யாரென்று பாத்தால்  தன்னை மெத்த படித்தவர்களாக காட்டிக் கொள்ளும் So Called, Well paying - White collar பணம் பன்னும் இயந்திரங்கள் தான் அதில் அதிகம்!

நாம் படித்தது அல்லது படிக்க வைக்கப் பட்டது பணம் சம்பாதிக்கவும் அடுத்தவனை எப்படி முந்துவது அல்லது வீழ்த்துவது என்பதுவரை பாடத்திட்டமாவே உள்ளது!

            ஆனால்,  நம் சமூகத்திற்கும் வரலாற்று பதிவுக்கும் மிக முக்கியமாக விளங்கும் ஓர் வார்த்தை (அ) படிப்பு  Geo politics - புவிசார் அரசியல்!

இந்த படிப்பை இன்று பல பல்கலைக்கழகங்கள் முன்னெடுப்பதோ அல்லது அதற்கான விழிப்புணர்வையோ மறந்தும் செய்வதில்லை!

    " அனைத்து புவியியலும் வரலாறு படிக்க வேண்டும் அனைத்து வரலாறும் புவியியல் படிக்க வேண்டும் "
     இது கிரேக்க தத்துவ மேதை ஹீரோடோடஸ் சொன்னது!

  56 லட்சம் வருடங்கள் முன்னதாக ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்கள் இணைந்து Eurasia - என அழைக்க பட்டதாகவும் அப்போது நிலப் பரப்பால் மட்டுமே இவை இணைந்து இருந்ததாக கருதப் படுகின்றது! அதில் தற்போதைய ஆப்ரிக்க, வளைகுடா நாடுகளும் அடக்கம்!
    இதை அடிப்படையாக மனதில் கொண்டு ஓவ்வொரு தேசமும் இன்று சந்திக்கும் பிரச்சனைகளையும் அவற்றை அன்றைய யூரேசியா வின் 60 நாடுகளும் எவ்வாறு பதவி சண்டை, நில, நீர் பங்கீட்டை சமாதானத்துடன் நடைமுறைக்கு கொண்டு வந்தனர் என்பதை அறிக்கையை சமர்பித்தார் பிரிட்ஷ் புவி சார் அரசியல் ஆய்வாளர் Mackinder 1904 ல்!

அவர் தன்  The geographical Pivot of History என்ற புத்தகத்தில் இதை The Heart Land Theory என்றும் குறிப்பிட்டார்!

" அதில் நிலம்,  நீர் எல்லை மற்றும் பதவிக்கான போராட்டம் போட்டியும் தொடரும் போது தான் ஓர் கண்டம் என்பது எந்த இழப்பும் இல்லாமல் நிலைத்து ஒரே வடிவில் இருக்கும் " என்றார்!

     இவர் அவ்வாறு கூறியதன் காரணியாக அவர் முன் வைப்பது ஆசிய ஐரோப்ப நாடுகள் தான் 2/3 ல் பங்கு உலகின் பங்கு நிலத்தை வைத்திருப்பதாகவும்.
   
இங்கே இவர்களுக்குள்ளேயே நடக்கும் போர்களும் (சகோதர யுத்தம் போல் ) பேராசை போட்டிகளும் தான் இக் கண்டங்களை வடிவமும் எல்லையும் மாறாமல் நிலைத்திருக்க வைத்திருப்பதாகவும் , இதனால் வேறு மூன்றாவது மனிதர் உள்ளே வர வாய்ப்பே இல்லை என்றும் முன் வைத்தார்.

இது எவ்வளவு பெரிய அபத்தம் என்று பின்னாளில் Spykman னால் நிரூபிக்கப் பட்டது!

   இதை மறுத்து இதன் பின் விளைவுகளை தோலுரித்து காட்ட முன் வைக்கப் பட்ட ஓர் தத்தும் தான் Rim Land Theory.!

இதைப் பற்றி தான் நாம் இங்கே பார்க்க போகிறோம் :-

1944 - இரண்டாம் உலக போர் உட்சத்தில் இருந்த போது  Spykman என்பவர் தான் எழுதிய The Geography of Peace என்ற புத்ககத்தில் கீழ் வருமாறு கூறிகின்றார்.,
 
      * Heart land theory யின் கீழ் வரும் நாடுகளில் வரும் உள்நாட்டு போர் என்பது குறுகிய கால பதவி போராட்டமே!

* இவை ஓர் நாட்டின் வலுவான தரப்பை சோதிக்கும் பலப்பரீட்சை என்றும் நீர் நில எல்லைகளை வலுப்படுத்தும் செயல் என்றும் கூறுவதும் முற்றிலும் ஏற்க இயலாத ஒன்று!

* இவ்வாறான கோட்பாடுகளை சந்தித்த அல்லது திணிக்கப் பட்ட நாடுகளே Rim Land நாடுகள் என அழைக்கப் படுகின்றன!

* இந்த Theory ல் வராத நாடுகளாக (1944 வரை)  வடக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மேற்கு ஆப்பிரிக்கா போன்றவை ஆகப் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்!

* இப்படி உள் நாட்டு போர் மூளும் போது அதில் இரு நாடுகளே பெரிய அளவில் சட்டாம்பிள்ளை தனமாகவோ அல்லது ஆயுத விற்பராகவோ இருந்துள்ளது அவை :-
                         1. அமெரிக்கா
                         2. ரஷ்யா

* ஆரம்ப (அ)  பண்டைய காலங்களில் யூரேசியா (ஆசியா -EU) நிலப்பரப்பில் உள்ள நாடுகளை தன் Control யார் வைத்திருந்தார்களோ அவர்களே உலகின் வல்லரசாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது!

       இந்த Rim Land தத்துவத்தை தங்களின் முக்கிய துருப்பு சீட்டாக பார்க்கும் ஓர் நாடு அமெரிக்கா!
U.S ன் முன்னாள் அதிபர்கள் Harry S Truman ம் John F Kennedy இருவரும் தான் இதை உலகம் முழுதும் திணிக்க துவங்கினர்!
ரஷ்யா உடனான பனிப்போர் காலங்களில் கம்யூனிச சோஷலிச சித்தாந்த நாடுகளுக்குள் பல உள்நாட்டு போர் மூண்டதை உதாரணமாகவும் அதை தீர்க்க அமெரிக்கா முன் வருவதை போன்ற நிலைப்பாடுகளையும் சர்வதேச தத்தில் உருவாக்கினர்.

    வியட்நாம், ஆப்கானிஸ்தான், வட - தென் கொரிய போர்கள் மேலும் சோவியத்தை உடைத்தது போன்றவை குறிப்பிட தக்கது!

   இதை நம் தமிழர் வரலாற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது இங்கே அவசியமாகிறது!
எப்படி !!!!?

   1947 ல் சுதந்திரத்திற்கு பின் 1950-51 ல் அமெரிக்க உளவு மையம் ஓர் தகவலை வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறது!  அதில், உலகின் மொத்த வர்த்தகத்தில் 70% நீர் வழித்தடம் தான் அதில் 45% தெற்காசியாவின் தமிழ் நாட்டிற்கும் - திரிகோணமலைக்கும் இடை பட்ட பகுதி மிக முக்கியம் என்றும்!

இன்னும் 50 வருடங்கள் கழித்து இந்த பகுதியை அல்லது இந்த பகுதி உள்ளடக்கிய அரசுகளை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனரோ அவர்களே உலகின் வல்லரசாக வலம் வரும் என்று அறிக்கை தருகிறது!

அடுத்தடுத்து மெல்ல பிரச்சனை தலை தூக்குகிறது இலங்கையில்! இனி சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என G.O வலம் வர அதை மாற்றி அமைக்க கோரி தமிழ் அமைப்புகள் ஊர்வலம் செல்ல அதை கலவரமாக மாற்றி இன வெறி முன்னெடுக்கப் படுகிறது!
  அது பல  இனப்படுகொலையில் தான் நிறுத்தியிருக்கிறது! இன்றும் தொடர் கதையாக………
ஆனால், Voice of America வானொலி நிலையத்தை 500 ஏக்கரில் திரிகோணமலையில் அமைத்து விட்டது!

    புலிகள் ஆயுத கொள்முதல் 80 களின் இறுதியில் துவங்கிய காலத்தில் இருந்தே ஓர் குறிப்பிட்ட அளவிலான Seller ஆக அமெரிக்கா மறைமுகமாக செயல் பட்டுள்ளனர்.

அதே நேரம் இரட்டை வேடமும் போட்டது U.S .
       2006-7 கால கட்டத்தில் Floating warehouse எனப்படும் 7 புலிகளின் ஆயுத கப்பல்களை இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் இந்தோனேசியா அருகிலும் அழிக்க அமெரிக்கா உதவியதாக முன்னாள் இலங்கை கடற்படை தளபதி தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதே சாட்சி!

   இந்தியா, பாக். என ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளுக்குள் ஏதேனும் ஓர் மறுக்க முடியாத போர் இருந்து கொண்டே தான் இருக்கும்!  அப்போது தான் அமெரிக்கா தன் வணிக நலன்களை மெல்ல நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்! காஷ்மீர் விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு அடுத்த படியாக பெரிய அளவில் பேசப் பட்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு வராமல் இருப்பதே அமெரிக்கா வுக்கு நல்லது!
அப்போது தான் தன் கைக்குள்ளேயே பாக்.கும்- இந்தியாவும் இருக்கும் என்றே நினைக்கின்றர்.!

இன்று நடக்கும் ஆப்கன், வளைகுடா, சிரியா போர்கள் அனைத்தும் Rim Land ற்குள் அகப் பட்ட தேசங்கள் தான்! UNO -வில் இன்றும் மிகப் பெரிய சர்ச்சையாகவும், மனித உயிர்களை காவு வாங்கும் ஓர் Theory (அ) Ideology யாக பார்க்கப்படுவது Spykman -ன் இந்த Rim Land Theory.  இன்று வரை US யை குற்றவாளியாக கருத்தியல் ரீதியாக நிரூபணம் செய்வதும் இந்த ரிம் லேண்ட் தியரி தான்!

        
    நீங்களும் நானும் சோறு திங்க Computer ம் கணக்கும் தெரிஞ்சா போதும்!  நம் பையன் பேரன் எதிர்காலத்தில் நிம்மதியாக சோறு திங்க இறந்த கால அனுபவங்களை கொண்டே நிகழ்கால அரசியல் நகர்வுகளை கட்டமைப்பது மிகவும் அவசியமாகிறது!

Shadow Economy - இந்தியா பொருளாதாரத்தின் முதுகெலும்பு

500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போது முதலில் கருப்புப் பண ஒழிப்பிற்காக என்று பில்டப் கொடுத்தார்கள் மோடியும் அருண் ஜெட்லியும். பின்னர் கள்ள நோட்டுகளை ஒழித்து தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்போம் என்றார்கள். ஆனால் தற்போது Shadow Economy ஐ ஒழிக்க இந்த தடை என்கிறார்கள். பூனைக்குட்டி கொஞ்சம் மெதுவாகத்தான் வெளியே வந்திருக்கிறது.

Shadow Economy என்றும் Underground Economy என்றும் இவர்கள் சொல்வது எதை? IMF இன் Document இவ்வாறு சொல்கிறது.
“A factory worker has a second job driving an unlicensed taxi at night; a plumber fixes a broken water pipe for a client, gets paid in cash but doesn't declare his earnings to the tax collector;”

ஒரு தொழிற்சாலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளி தன் குடும்ப வருமானத்துக்காக இரவில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணமெல்லாம் கணக்கில் வருவதில்லையாம். இதுபோன்ற கோடிக்கணக்கான மக்கள் செய்கிற சிறு சிறு தொழிலகளைத் தான் இவர்கள் Shadow Economy நிழல் பொருளாதாரம் என்று சொல்கிறார்கள். நிழல் உலக தாதாக்கள் என்பதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். ஒரு தொழிலாளியின் குடும்ப நலனைக் காக்க எந்த முன்னெடுப்பையும் செய்யாத அரசு, அவன் தன் குடும்ப நலனுக்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிப்பதிலிருந்து வரியைப் பிடுங்க நினைக்கிறது.

- Vivekanandan Ramadoss

        ----- - - - - - + - - - - - - - - - -:-

அடேய்,
அப்ரசெண்டிகளா உங்களை எல்லாம் நிதி அமைச்சர், பிரதமர் ன்னு ஆகலைன்னு யார் அழுதா???

Shadow Economy - முறைசாரா பொருளாதாரம் (அ) வெள்ளை பொருளாதாரம் என்பது பண்டையகால முறை மூலம் சிறு குறு தொழில்கள், வளரும் தொழில் முனைவோர் போன்றோர் வருமானம் ஈட்டுவது  ! அதைத் தான் இத்தனை நாள் செய்து வந்தனர்,  செய்து வருகின்றனர்!
பண்டம் மாற்று முறை தான் முதலில் வழக்கமாக இருந்தது. பின் அது தங்கமாக இருந்தது! பின்னர் பணமாக வடிவம் பெற்றது! 

   அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு!
அதற்கான உதாரணம் :-

  சில மாதங்கள் முன்பு Europe நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது E.U வின் பல நாடுகள் 4 % வரை  தன் GDP வளர்ச்சியை இழந்தது!
ஆனால் கிரீஸ் நாடு மட்டும் 0.5% மட்டுமே வீழ்ச்சியையே கண்டது!
அதற்கு காரணம், Shadow Economy எனப்படும் முறை சாரா வர்த்தகமும், தொழிலாளர்களும் தான்!

அவை என்னென்ன ……?

*உள்ளூர் சந்தையில் விற்கப்படும் காய் கறி கள்,

* மீனவர்கள்

* பிளம்பர்

*டைலர்

*தள்ளுவண்டி கடைகள் (உணவு - உடை அனைத்தும்)

* கொத்தனார்

*வெல்டர்

*மளிகை கடை

* பெட்டிக்கடை

* தெருவோர ஹோட்டல்கள்

* Carpenter, Electrician & construction labours etc.,

* டீ கடை

* கை வினை பொருட்கள் தயாரிப்போர்

*நெசவாளர்கள்

* விவசாயிகள்

போன்றோரின் வருமானமே Shadow Economy என சர்வதேசம் குறிப்பிடுகின்றது!

    இன்னும் ஓர் உதாரணம்,

2007-08 ல் உலகம் முழுதும் பொருளாதார முடக்கம் வந்த போது அமெரிக்கா, UK உட்பட பல வல்லரசுகள் நொடித்து போயின ஆனால் இரு நாடுகள் மட்டுமே அதில் ஓரளவுக்கு தப்பித்தன!

1. சீனா
2.இந்தியா

   காரணம்,
இரு நாடுகளின் பாரம்பரிய தொழில் முறைகளும் சேமிப்பு பழக்கமும்!

நிலமை இப்படியே போனால் இந்தியா தானாகவே ஸ்திரமான ஓர் பொருளாதாரத்தை அடுத்த 30 ஆண்டுகள் கழித்தும் ஏறாமலும் இறங்காமலும் நிலைத்திருக்கும்!
ஆனால் அதனால் உலக வல்லரசுகள் என சொல்லிக் கொள்பவர்களுக்கு என்ன லாபம்!
அடுத்த முப்பது ஆண்டுகளில் தற்போதைய Share market,  தள்ளாட்டம் அவர்களை தெருவில் நிறுத்தியிருக்கும்!

ஓர் விடயத்தை கவனித்தீர்களா ……? 

UN சபை ஜெனீவா வில்,  ILC (international Law Commission) ஜெனீவா வில் . ஆனால்,  IMF (International Mandatory Fund)  மட்டும் New York ல். லேசா எங்கயோ  பிசிறடிக்கலை!!!?

So, they want India always being under their control. அதனால் தான் மோடியை வைத்து வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வோடு விளையாடுகிறது IMF ம், WTO வும்!

சீனா வை மேற்குலக நாடுகள் நெருங்குவது அவ்வளவு எளிதல்ல. ஊருக்கு இளைச்சவன் கோவில் மட ஆண்டிங்குற கதை தான் நம் நிலை!

உங்கள் தொழில் முறையை சிதைக்க Debit card / e - pay,  Shopping Mall கலாச்சாரம்.
உங்களுக்கு தெரியமலே உங்களின் சேமிப்பு பழக்கத்தை முடக்க Credit Card லைஃப் ஸ்டைல்!

- பிறை

Tuesday, 29 November 2016

வங்கி மோசடியும் - Demonitaization பொய்யும்

வங்கி ஊழல்களின் முக்கியமான ஒன்று!

    நாங்கள் வங்கிகளை நம்பவில்லை, அவைகள் நியாயமற்றவை! மோசடியானவை என்ற வாதத்தை சில நாட்கள் முன்னர் மே பதினேழு இயக்கம் ஓர் தொலைக்காட்சி விவாதத்தில் முன் வைத்தது!

உடனே, சில மோடி பக்தர்களும் பொய் கணக்கு எழுதும் so called நிதி ஆலோசகர்களும் கீழும் மேலும் குதித்த வண்ணம் உள்ளனர்!  அவர்களின் முகமூடியை கிழிக்கவே கீழ் காணும் தகவல் :-
   

மக்களே, நாம் கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம்!
நாடு செழிப்படையப்போகிறது என்றெல்லாம் சீனை போட்டு சுத்தும் தேச பக்தர்களே உங்களுக்காகவே இந்த கட்டுரை!
        வருகிற டிச. மாத இறுதியோடு நம் பிரச்னைகள் தீரப் போகிறது ! அதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்க பணத்தை எல்லாம் Bank ல போடுங்க!

        - இப்படித் தான் சில படித்த அடிமைகளும் பொருளாதார அடியாட்களும் இரு வாரங்களாக கொஞ்சமும் கூச்சமின்றி வங்கிகளுக்காக முட்டுக் கொடுத்து கொண்டு உள்ளனர்.!

இங்கே, நாம் பார்க்க போவது இந்தியாவின் மாபெரும் வங்கி மோசடிகளில் முதல் இடத்தை பிடித்த சில கேவலமான முறைகேடுகளைத்தான் :-

  சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :-

  2008 - 09  பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியிருந்த சமயம்! 
  பல IT நிறுவனங்கள் முடங்கிய காலம்.  அப்போது நான் பெங்களூரில் ஓர் Apartment Construction -ல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்!
ஒவ்வொரு customer ஆக குடியேறிக் கொண்டிருந்தனர்.! ஓரிருவர் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது காண முடிந்தது!
பின்னர் தான் நண்பன் சொன்னான், இவர்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் -ல் வேலை பார்ப்பவர்கள் இரண்டு மாத சம்பளத்துடன் விடுமுறை என்றும், கூப்பிடும் போது வந்தால் போதும் என்றும் சொல்லப் பட்டதாக கூறினான்!

அடுத்த சில நாட்களில் ராமலிங்க ராஜூ என்ற பெயர் பரவலாக செய்திகளில் அடி பட்டது!

$ 1.47 மில்லியன் அளவுக்கு மோசடியும் கையாடளும் நடந்து விட்டது! இனிமேலும் நிர்வாகத்தை நகர்த்தி செய்ய முடியுமா என தெரியவில்லை!  நான் இப்போது பதவி விலகுகிறேன் மன்னித்து விடுங்கள்!

        - வாய் வலிக்காமல் கூறிவிட்டு இடத்தை காலி செய்தார் ராஜூ!

அடுத்தடுத்து CBI, SFIO (Serious Fraud Investigation office) என பல  விசாரணைகள் நடந்து 2015 ல் அவர் குற்றவாளி என நிரூபணம் ஆனது!

  அதெல்லாம் தெரிந்த கதை!  தெரியாத (அ) கவனிக்கப் படாத சில வற்றை இங்கே பார்க்கப் போகிறோம் : -

  * இவர் கையாடல் செய்த பணம் அமெரிக்க டாலரில் 1.47 மில்லியன்.!    எனில் இதை இந்திய மதிப்பில் பார்த்தால் அது லட்சம் கோடியை தாண்டுகிறது!  ( சரியான கணக்கை நீங்களே போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்)

* இத்தனை லட்சம் கோடியை ஒரே நிறுவனத்தின் பேரிலோ தனி நபர் பேரிலோவா வைக்க முடியும்!     
அதற்காக இவருக்கு சரியான ஆலோசனை வழங்கியது ஓர் Auditing நிறுவனம்!

* அவர்களின் யோசனை பேரில் வெவ்வேறு பெயரில் நிறுவனங்கள் போலியாக உருவாக்கப் பட்டது! அனைத்தும் ராஜூ வின் மனைவி மகள், மற்றும் உறவினர் பெயர்களில்! மொத்தமாக 166 போலி நிறுவனங்கள் . அதில் ஒன்று Maytas எனப்படும் நிறுவனம். இது RR -ன் குடும்ப உறுப்பினர்களின் நேரடி தொடர்பில் இருக்கும் நிறுவனம்!

* இவை மூலமாக பல வங்கி கணக்குகள் துவங்கப் பட்டன! அந்த வங்கிகள் நிறுவனத்தின் உண்மை தன்மையை சிறிதும் சோதித்து பார்க்காமலா இருந்திருக்கும்!???   
எல்லாம் தெரிந்தும் அமைதி காத்தனர். 166 நிறுவனங்கள் எனில் குறைந்தது 1 க்கு பத்து எனில் 16 வங்கிகளாவது தேவைப் படும் ஆனால் இங்கே நிலை வேறு!

* இந்த Account களுக்கு சாதாரணமாக கேட்க்கும் Photo I d - proof கூட பல கணக்குகளுக்கு இவர்கள் கேட்கவில்லை!  அவ்வளவு ஏன் PAN Card எண் இல்லாமலே லட்சங்களில் Transaction நடந்திருக்கின்றன!
( The report says: No photographs have been obtained. No nominees have been named. No PAN has been mentioned. There was no introduction by a person holding an account in the bank.)

2002 ம் ஆண்டு வருமான வரித்துறை சட்ட விதியை கிஞ்சித்தும் இவர்கள் Follow செய்ய வில்லை!

* இவர்கள் கணக்கு துவங்க பயன் படுத்திய பெயர்கள் RR ன் நண்பர்கள் உறவினர்கள் பெயருக்கு பின்னால் ராஜூ என்பதே பெரிய தகுதியாக கருதி விட்டனர் போலும்!
A Bashkar Raju, Mallapa Raju, Janaki Ram Raju இவைகளை மட்டுமே Proof ஆக எண்ணி விட்டனர். அதை விட கொடுமை அனைத்து A/C க்கும் ஒரே முகவரி  :-
Shyamala building, Begumpet, Hyderabad. 

* நீங்களே நானோ SB account திறக்க போனால், "நாம மொதல்ல இந்த ஊர்ல தான் பிறந்தோமான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு கேள்வி கேட்பார்கள் என்பது வேறு கதை!

* எந்த கேள்வியும் கேட்காமல் மனம் போல் A/C open செய்த அந்த அசகாய வங்கிகள் இவை தான்:-
                 1. Vyasa Bank (Banjara Hills, Hyderabad),
                 2. State Bank of Hyderabad (Begumpet),
                 3. UTI Bank (Kakinada),
                 4. HDFC Bank (Vishakhapatnam) and
                 5. Karur Vyasa Bank (Vijayawada).

* பணத்தை வெறும் ரூபாய்களாக மட்டுமே வைக்காமல் பங்கு பத்திரங்களாக மாற்றும் வேலையிலும் இவருக்கு உதவியது சில வங்கிகள்
அவை : -
Citi,
ICICI,
HDFC,
HSBC
    சத்தியம் வெளிநாட்டில் இருந்து வாரா வாரம் கோடிக் கணக்கில் பண பரிவர்த்தனை செய்யும் ஓர் நிறுவனம் என்பதை எல்லோரும் அறிந்ததே!  ஆனால், தாங்கள் நடத்தும் பரிவர்த்தனைகளின் மெய்யியல் தன்மை கூடவா பரிசோதித்து அறிய மாட்டீர்கள் என அப்போதே Reserve Bank கேள்வி எழுப்பி இருந்தது!

   எல்லாத்தையும் விட சில முக்கிய உத்தமர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் :-

அவர்கள் நால்வர் :-
          1. S Gopalakrishna,
          2. Talluri Srinivas,
          3. V Srinivasa,
          4. VS Prabhakara Rao

இவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த தலைமை அமைப்பு  வாழ்நாள் தடை விதித்தது!  அத் துறையின் பெயர் The Institute of Chartered Accountants of India (ICAI) . ஆம், இவர்கள் ஆடிட்டர்கள் தான்.
இவர்கள் Price Water House Coopers என்ற நிறுவனத்தின் மூலம் Sathyam Computers க்கு ஆலோசனை வழங்கி வந்தனர்! இந் நிறுவனம் பெங்களூரில் செயல்படுகிறது.  இதன் பூர்வீகம் U.K!

   மேலே சொன்னது ஒரே ஒரு உதாரணம் தான் இன்னும் பல வங்கி  ஊழல்களை பற்றி அடுத்தடுத்து விரிவாக தோலுரித்துக் காட்டப் படும்!

   இந்த நான்கு Auditor கள் தான் வேறு மனிதர்களாக, வேறு உருவங்களாக, நிதி ஆலோசகர், பொருளாதார வல்லுந‌ர், சமூக ஆர்வலர் என பற்பல பெயர்களில் சிலர் டி.வி விவாதங்களில் பாஜக வுக்கும் WTO & IMF அஜெண்டாவுக்கும் முட்டுக் கொடுத்து கொண்டுள்ளார்கள்!