Tuesday, 14 February 2017

Tamils_vs_Hinduthuva 14-2-17

Is that end of Diravidan Legacy - இது தான் வட இந்திய ஊடகங்களால் வலுகட்டாயமாக திணிக்கப் பட்ட விவாதம் ஜெ. இறந்த அன்று!

பார்ப்பனியமும் ஆரியமும்  எப்போது நாம் சிறிது அசறுவோம் என்றே பார்த்துக் கொண்டிருக்கிறது நம்மை வீழ்த்த!   அது,   இன்று வரை சாத்தியப் பட வில்லை அவர்களால் இதோ இன்றைய சசிகலா சிறைச்சாலை செல்லும் போதும் கூட!

  காரணம் திராவிடம் என்பது பதவி சுகத்தை அனுவிக்க உருவாக்கப் படவில்லை!  ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழனின் தனித்துவம் ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதே!

     அதில் முரண் பட்டு தேர்தலில் நுழைந்தவர்கள் தான் திமுக அதன் கிளைகளாக அதிமுக, மதிமுக! 

இவர்கள் இன்னும் ஐந்தோ - பத்தோ வருடங்கள் இருக்கலாம் அல்லது மறைந்து போகலாம்!

ஆனால், திராவிட சித்தாந்தம் மறையாது!
ஆரியம் ஒழிந்தால் தான் திராவிடத்தின் தேவை குறையும்!

   எத்தனை இந்திய கை கூலிகள் பெரியாரை வசை பாடினாலும், சிதைத்தாலும் மீண்டும் மீண்டும் அவரின் சித்தாத்தங்களும் வழிகாட்டுதல்களுமே திமிறாக நிமிர்ந்து நிற்கிறது!

    ஜெ. செத்தாச்சு, சசி ஜெயிலுக்கு போயாச்சு 10 வருசத்துல ஸ்டாலின் ரிடையர்டு ஆகிடுவாறு என்று எல்லாம் சில கட்டுரைகளை பார்க்க நேர்ந்தது!  உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வந்தது!

  இவர்கள் கூறுவது போல் கலைஞர் செத்தால் ஜெ. செத்தால் ஆரியம் தமிழகத்தின் உள்ளே வந்து விட முடியும் எனில், அவர்கள் பெரியார் செத்த போதே வந்திருக்க வேண்டும்! எம் ஜி ஆர் செத்த போதே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்க வேண்டும்!

    ஏன் சாத்தியம் ஆகவில்லை,???
காரணம் பெரியார் ஒவ்வொருவரையும் சிந்திக்க சொன்னார் . எதையும் கேள்விக்கு உட்படுத்து என்றார்!  நானே சொன்னாலும் நம்பாதே அதை ஆய்வுக்கு உட்படுத்து என்றார்!

இவர்களோ  தாங்கள் பேசுவதை கேட்டால் போதும் என்றார்கள்!  தங்களின் சொல் படி நடக்க சொன்னார்கள் . தலைவன் சொன்னால் எல்லாமே சரி என நம்பி ஆட்டு மந்தைகள் பின்னால் போனார்கள்! ஆள் மட்டுமே மாறியது அய்யா, அம்மா, அண்ணன், தளபதி என வேறு வேறு பெயரில்!  செயல் பாடு ஒன்றே!
இவர்கள் போனதும் அடுத்து மேடையில் பேச ஆள் தேடினார்கள் .! பதவியை பிடிக்கத்தான் சண்டை போட்டார்கள்!  இப்போதும் போட்டுக் கொண்டு கொள்ளையை காற்றில் விட்டார்கள்!

ஆனால், பெரியார் போன பின்னர் ஒவ்வொருவரும் அவரை பேசிக் கொண்டிருக்கிறோம்!  

ஓட்டுக் கட்சிகளும் ஓட்டு பொறுக்குபவர்களும் மறைந்து போகலாம்!
சித்தாந்தங்கள் என்றுமே மறையாது!

    பெரியாருக்கு பின் தலை எடுத்த தமிழ் தேசியத்தை நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்!

   தமிழரசனின் 'தமிழ்நாடு விடுதலை படை '! மறைமலை அடிகளாருக்கு பின் தமிழ் தேசியத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத ஒருவர்!
     புலவர்.கலியபெருமாள், தோழர்.ஜெயக்குமார் போன்றவர்களை ஓர் தமிழ் தேசிய வாதியாக நாம் என்றுமே மறக்க இயலாதவர்கள்!

    அந்த தோழர்கள் ஆயுதம் தாங்கி நின்றதால்  நீண்ட காலம் நிலைக்க முடியாமல் போனது மிகப் பெரிய வருத்தம்! இந்தியத்தால் படுகொலை செய்யப் பட்டனர்!
   இதையே சித்தாந்தமாக மாற்றி மக்கள் இயக்கமாக நகர்த்தியிருந்தால் மிகப் பரவலாக தமிழ் தேசியம் இன்று நிறைந்திருக்கும்!

  

    சரி,
   இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன???

புள்ளை குட்டிகளை படிக்க வைங்கய்யா ………!

   உண்மையிலேயே தான் சொல்றேன் குழந்தைகளை பெரியாரையும், தமிழ் தேசியத்தையும் படிக்க வையுங்கள்!

(யாரும் பெரியாரை தானே தமிழ் தேசியம் எதிர்க்குதேன்னு கேட்டு வந்துடாதீங்க! 
எனக்கு பதில் சொல்ல எல்லாம் நேரம் இல்லை .
என்னை பொறுத்த வரை அவர்களும் மேற் சொன்ன பதவிக்கு அலையும் கூட்டங்களில் ஒன்று தான்)

  புள்ளை குட்டிகளை படிக்க வைங்க!
    அதைத் தான் இந்துத்துவா செய்து வருகிறது!

இந்தியம் எனும் பெயரில் இந்துத்துவா எனும் விசத்தை மெல்ல மெல்ல ஊட்டி பார்ப்பனிய கூட்டத்தை மட்டுமே இன்று intellectual என காட்டி நிறுத்தியிருக்கிறார்கள்! 

உ.தா : - பாண்டே, குருமூர்த்தி, பானு கோம்ஸ், சுமந்த்.சி. ராமன், பத்ரி , விஜய சங்கர்,  தி ஹிந்து ராம், என பலரும் உண்டு!  அங்கே,  அர்ணாப் கோஸ்வாமி, ராஜீவ் சுக்லா என நம்மை சுற்றி வலை பின்னப் பட்டே வந்துள்ளது!

       அதே செய்தியை உருவாக்க கூடிய தளத்தில் தமிழர்கள் எத்தனை பேர்  இருக்கிறார்களா என்றால்  
    திருமாவேலன், செந்தில் வேல், பனி மலர், ஜென் ராம்,  குணா என மிகவும் சொற்பமே கிடைக்கிறார்கள்!

இன்னும் நம்மை எதிர்த்து எழுதுவதை மட்டுமே வேலையாக கொண்ட சில பத்திரிகைகளை பார்ப்போம்!

   The Week

     Front line

      EPW

       THE Hindu

The Times of India.,

   

தமிழில்,

தினமலர்,  தினமணி   போன்ற நாளிதழ்கள்!

இவை மட்டுமா, 

காலச்சுவடு,  தீராநதி போன்ற பதிப்பகங்களும் தான்!

Engineer க்கும் Doctors க்கும் குழந்தைகளை படிக்க வைத்தது போதும்!

Visual Media, Journalism, Psychology, Law என அனைத்து துறையிலும் படர வைப்பது அவசியமாகிறது! 

     இன்றே ஆரிய பார்ப்பன குழு முடிவு செய்திருக்கும் நாம் செய்ய வேண்டும் என நாம் அவர்களை விட வேகமாக செயல் பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம்!

Wednesday, 1 February 2017

சாமானியன் தேச துரோகி நிர்மலா சீதாராமன்

மோடியை எதிர்த்து பேசினாலோ கேள்வி கேட்டாலோ தேச துரோகியாம்!
யார்றா சொல்றதுன்னு பார்த்தா விவசாயத்தை வருங்காலத்துல துண்டு துண்டா நாசம் பண்ண கூடிய WTO வின் Trade Facilitation Agreement ல கையெழுத்து போட்ட நிர்மலா சீதாராமன் தான்.

World Trade Organization - இது மேற்குலக நாடுகளால் வர்த்தகம் உலகம் முழுதும் சீராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப் பட்ட ஓர் அமைப்பே WTO.!  - இவ்வாறு சொல்லப் படுவது மட்டுமே!  உண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகத்தை வலுப் படுத்த கீழ்த்திசை நாடுகளை சுரண்டுவதும் கொள்ளை அடிப்பதுமே இவர்களின் முதற் குறிக்கோள்!

அவ்வகையில் 1991 -ல் இந்தியாவிற்குள் அந்நிய முதலீடு உட்புகுத்தப் பட்டது குறிப்பிட தக்கது!
துவக்கத்தில், IT மற்றும் Motor துறையில் நுழைந்தவர்கள், குளிர்பானம், உணவு, உடை,  அத்தியாவசிய பொருட்கள் என Toothpaste முதல் கால் செருப்பு வரை அந்நியச்செலாவணி முதலீடுகள் புகுத்தப் பட்டது!

அவர்களால் தொட முடியாத ஓர் விடயம் விவசாயம்! காரணம், நாட்டின் 75% கிராமங்களும் அதன் சார்ந்த விவசாய உற்பத்தியும் தான்!

அதில் கை வைக்கும் வேலையாக 2001 ல் கொண்டு வரப் பட்ட ஒன்று தான் DDA -Dhoa Development Agreement.! 

அதில் அவர்கள் கொண்டு வந்த நிபந்தனைகள் :-

1.விவசாயத்தில் 100% அந்நிய முதலீட்டை அனுமதித்தல்.

2.விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும்!

3.தாங்கள் கொண்டு வரும் அல்லது இறக்குமதி செய்யும் அந்நிய பொருட்களுக்கான விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை வேண்டும்!

4. விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தே ஆக வேண்டும் எனில், ரேசன் -ல் கொடுக்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு க்கு பதிலாக அதை பணமாக வழங்க வேண்டும்!

5.முக்கியமாக உணவை சேமிக்கும் கிடங்குகளை மூட வேண்டும்!

     இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு நீங்கள் உலக நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியில் சில வரி விலக்குகள் அளிப்போம்!

    இது தான் ஒட்டு மொத்த ஒப்பந்தத்தின் எளிமையாக புரிந்து கொள்ள கூடிய சாராம்சம்!

     2001 -ல் இது கொண்டு வரப் பட்ட போது பல நாடுகளின் எதிர்ப்பை இது சம்பாதித்தது!

எனவே சில பெயர் மாற்றங்களோடு 2004-ல்  Bali ஒப்பந்தம் என கொண்டு வந்தனர். ஆனால் அதே நிபந்தனைகளோடு ……!

அதுவரை பல நாடுகளின் முன்னேற்ற பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த வல்லாதிக்க நாடுகள்!  சரி தொலையட்டும் என மன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், அவரை மிகப் பெரிய பொருளாதார நிபுணர் என நம்பி 161 நாடுகள் மேற்கண்ட Bali ஒப்பந்தத்தின் மேல் முடிவு எடுக்கும் உரிமையை இந்தியாவிடம் வழங்கியது!

இதெயெல்லாம் முழுதாக தெரிந்து கொண்ட மன் மோகன், இச் சட்டம் வந்தால்  விவசாயிகளிடம் பெரிய வெறுப்பை சம்பாதிக்க நேரும் என பயந்து மெல்ல மெல்ல நாட்களை நகர்த்தினார் அதற்கு மாற்றாக, பல SEZ (சிறப்பு பொருளாதார மண்டலம்)  FDI ல் அதிக முதலீடு என பல கதவுகளையும் திறந்து விட்டு மேற்குலகை சமாளித்து வந்தார்!

ஒப்பந்தமும் பெயர் மாறி மாறி, TFA -Trade Facilitation Agreement என வந்து நின்றது!

மன் மோகன் தன் ஆட்சி முடியும் 10 வது வருட தருவாயில் ஓர் முறை 'விவசாயிகள் வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் ' என சொன்னது ஞாபகம் இருக்கிறதா?? ?  அது இதை மனதில் வைத்து தான்!

2014 -ல் பாஜக ஆட்சிக்கு வந்தது! 

நிர்மலா சீதாராமன் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனார், .

இந்த ஒப்பந்தம் குறித்து விவாதம் வந்த போது பாராளுமன்றத்தில்,  WTO வில் Trade Facilitation Agreement ல் இந்தியா கையொப்பம் இடாது!  அதற்கு முன் ஏற்றுமதியில் நமக்கான சலுகையை பெற்று விட்டு மேலும், ஒப்பந்தத்தில் சில நமக்கு பாதகம் வராத மாற்றங்களை செய்வோம் என அழுத்தமாக பேசிவிடுகிறார்.  இது 2014 ஆகஸ்ட்ல்!

அதற்கு அடுத்த வாரமே மோடி க்கு ஒபாமாவிடம் இருந்து அழைப்பு வருகிறது அமெரிக்கா வரச் சொல்லி!

அடுத்த சில நாட்களிலேயே என்ன மாயம் நடந்ததோ சத்தமே இல்லாமல் ஜெனீவா வில் வைத்து இந்தியா TFA - Food Facilitated Agenda வில் கையொப்பம் இட்டது ! 
அதற்கு மறுநாள் WTO வின் Director General அமெரிக்க - இந்தியா இடையே கையொப்பமான Bali ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது என அறிக்கை வெளியிட்டார்! 
அதன் பிறகு தான் இதன் விடயமே வெளி உலகுக்கு தெரிய வந்தது

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா முடிவு எடுக்க ஒரு மனதாக  அனுமதி அளித்த நாடுகளான சீனா, பிரேசில், அர்ஜெண்டினா போன்ற வற்றிடம் எதை பற்றியுமே கலந்தாலோசிக்காமல் ஜெனீவா வில் வைத்து கையொப்பம் இடுகிறார் நம் போன்ற எளியோரின் துரோகியான நிர்மலா சீதாராமன்!  எப்போதூமே மோடி No.1 டுபாகூர்,  ஆனால் இந்த விடயத்தில் இவர் தான் No.1 டுபாகூர் மோடியே அடுத்து தான்!

   இதெல்லாம் நடந்து முடிந்தது பலருக்கு தெரியவே இல்லை!  நமக்கு இதன் முழு விபரம் தெரிய வந்ததே 2016 மே மாதத்தில் தான்! 

இதனை விளக்கமாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என மே 17 இயக்கம் சார்பில், செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது!  அதில் தெளிவாக தோழர்கள் பிரச்சனையை புரியும் படி கூறி ஊடகங்கள் மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தோம்!
ஆனால், அது தேர்தல் காலம் என்பதால் பெரிதாக கண்டு கொள்ளப் பட வில்லை!

தோழர்கள் விடாமல், பிரச்சனையின் தீவிரம் கருதி இரண்டாம் முறையும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்! 
அது நடந்து முடியவும் அதற்கு மறு நாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டமும் அறிவித்து இருந்தோம்! 
அதற்குள் தோழர்கள் ரேசன் கடை மூடப் படப் போகிறது என பேட்டி அளித்த காணொளி தமிழகத்தை விட வட இந்தியாவில் பெரிய தாக்கத்தை இரண்டே நாட்களில் அது ஏற்படுத்த ……… ! 
அலறி அடித்துக் கொண்டு, மே 17 இயக்கம் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறது அதை யாரும் நம்ப வேண்டாம் என கடிதம் வெளியிட்டார் நிர்மலா. !  அதை அன்று மாலையே தமிழில் மொழி பெயர்த்து பாஜக வின் எஸ்.ஆர். சேகர் வெளியிட்டார் ! 
இவையனைத்தும் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் முதல் நாள் அவசர அசரமாக இந்திய அரசால் செய்யப் பட்டது!  காரணம்,  நாட்டிலேயே முதன் முறையாக நாம் தான் இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வந்தோம்! 

அன்று மாலையே என் inbox யை முற்றுகை இட்ட பாஜக பாய்ஸ் எல்லாம் இங்க தான் சுத்தி கிட்டு இருக்குதுங்க!

ஒரு பாஜக நண்பர் அப்படி ஏதும் மேற்கண்ட சம்பவம் நடந்தால் பாஜக வை விட்டு மே 17 ல் வந்து சேர்ந்து விடுகிறேன் என சவால் எல்லாம் விட்டார்!

இன்னும் சில comedy எல்லாம் வேற நடந்துச்சு!

இதுல May 17 - முகநூல் பக்கத்துல,  பூட்டின வீட்டுகுள்ள உட்கார்ந்து sound குடுக்குற ஜந்து  ஒன்னு Twitter ல நிர்மலா சீதாராமன் கிட்ட மே 17 இயக்கம் மன்னிப்பு கேட்கனும்ன்னு எல்லாம் சொல்லுச்சி ! 
" பன்னி குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுற கொடுமையை  " நேர்ல அப்போ தான் பார்த்தேன்!

    அடுத்த சில நாட்கள்லயே நிர்மலா சீதாராமன் பண்ண பித்தலாட்டங்களை எல்லாம் ஆதாரத்தோட வைச்சி அவங்களுக்கே கடிதம் எழுதினோம்!  அதுக்கு இப்போ வரை பதில் இல்லை!

  ( தொடர்ந்து படிக்கும் முன் மேலே உள்ள 5 ஒப்பந்த  நிபந்தனைகளையும் ஒருமுறை படித்து விடுங்கள் !  அப்போது தான் பாஜக எவ்வளவு பெரிய தேச துரோகி என்பதை நீங்கள் உணர்வது எளிதாகும்)

அதன் பிறகு நடந்த சில சிறு சிறு விடயங்களை கவனிக்க பலர் தவறி விட்டோம்!

1. ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் 5 மாவட்டங்களில் மண்ணெண்னை விநியோகத்தை நிறுத்தி அதற்கு பதிலாக பணமாக கொடுப்போம் நீங்களே வெளியில் வாங்கி கொள்ளலாம்!  என ஜெட்லி கடந்த செப்  - அக்டோபர் ல் அறிவித்தார்!  ( கெரசின் விலையை நிர்ணயிக்கும் உரிமை தனியாருக்கு) 

2.அனைவரும் வங்கி கணக்கும், ஆதார் அட்டையும் வைத்திருக்க வற்புறுத்தப் பட்டனர்.  ( இதன் மூலம் உங்களுக்கான ரேசன் செலவை பணமாக செலுத்தி விடுவார்கள்,! நீங்கள் பொருளை தனியாரிடம் அவன் சொல்லும் விளைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப் படுவீர் .!

3. De monitaization சமயம் ஓர் நாள் திடீரென ஓர் பரபரப்பு அதை பற்றி அன்று நாம் வெளியிட்ட பதிவில் தெளிவாக தோழர்கள் கூறியிருந்தனர் அது அப்படியே இங்கே : -

இன்று (29 -11-2016)  பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் இந்த விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி விட்டு ஏமாற்றி மக்களை கூட்டம் கூட்டமாக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

எதற்காக இந்த படிவம் கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் ஆதார் அட்டைகளை Xerox எடுக்க மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து ஆதார் கார்டு எண்களையும் வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படிவத்தில் Bullet Mark ல் இருக்கிற இரண்டாவது Point ன் படி,
"Have the Aadhar Number mapped with my bank account at NPCI to enable me to Receieve Direct Benefit Transfer from Govt Of India/ State Government through my account subject to eligibility."

அதாவது Direct Benefit Transfer ன் மூலமாக இந்திய அரசு/மாநில அரசு பணத்தை நேரடியாக என் வங்கிக் கணக்கில் அளிக்குமாறு கோரி மக்களே எழுதிக் கொடுப்பது.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்தியாவின் ஏராளமான மக்களை பசியிலிருந்து காத்து வருவது நியாய விலைக் கடைகள்தான்.

Direct Benefit Transfer என்பது ரேசன் கடையில் வழங்கப்படும் அந்த நியாய விலைப் பொருட்களை நிறுத்தி விட்டு, அந்த பொருட்களுக்கான மானியத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம். பொருட்களை நீங்கள் வெளிச் சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது.

இன்னும் சில காலத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு எந்த பொருளையும் வழங்காது. நம்மிடமிருந்து நாம் பயன்படுத்துகிற அனைத்துப் பொருட்களுக்கும் வரியைப் பிடுங்கிற அரசு, இந்த அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கியாக வேண்டும் என்பது நமது உரிமை. நமது உரிமையை சலுகையாக பார்க்கிற மனநிலைக்கு அரசு நம்மை தள்ளியுள்ளது.

         இத்தனை பொய் பித்தலாட்டங்களையும் நாம் வெளி கொணர்ந்த காரணத்தால் தான், இந்திய அயோக்கிய அரசின்  முகமூடியை சமரசமின்றி அவ்வப்போது நாம் கிழித்து தொங்க விடுவதால் தான் மே 17 இயகத்தின் மீது சமூக விரோதிகள் எனவும் மெரினா போராட்டத்தில் பிரிவினை வாதம் பேசினோம் எனவும் வழக்கு போடுவதாக கூவிக் கொண்டு இருக்கிறா ர்கள் அரை வேக்காட்டு RSS கள்!

அப்போ சொன்னது தான் இப்போதும், எத்தனை தடைகள் வந்தாலும் மே 17 இயக்கம் அதை உடைத் தெறிந்து முன்னேறும்!

நாம் தமிழர் தோழர்களுக்கு ......

சென்ற வருடம் 2016 மே 18 ம் தேதி நான் எழுதியது!

            ஈழ படுகொலைக்கு பின்னர் அதன் அரசியலை கொண்டு துவங்கப் பட்ட கட்சி நாம் தமிழர்.

   1. இதுவரை நாம் தமிழர் கட்சி ஈழ விடுதலைக்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க நடத்திய போராட்டங்கள் எத்தனை???

2. அமெரிக்கா வும், ஐ.நா வும் இனப்படுகொலை க்கு துணை நின்றது என்று ஆதாரத்துடன் நாங்கள் அம்பலப் படுத்தியும் எனக்கு தெரிந்து ஓர் சிறு போராட்டம் கூட நடத்தியது இல்லை அக் கட்சி!

3. March 2013 ல் தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தெருவில் இறங்கிய போது, அதே தீர்மானத்தை ஆதரித்து இரண்டு ஆர்பாட்டங்களை நடத்தி முடித்து இருந்தது நாம் தமிழர் கட்சி!
       அதன் பின் மாணவர்களின் எழுச்சிக்கு பின் தெற்காசியாவுக்கான அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் "இந்த தீர்மானம் இந்தியா சொல்லி தான் கொண்டு வந்தோம் " எனவே எங்கள் மேல் மாணவர்கள் கோபம் கொள்ள வேண்டாம் எனவும்.
  இத் தீர்மானத்தில் திருத்தம் செய்து மீண்டும் சமர்பிக்கிறோம் எனவும் அறிவித்தார்.

    இப்போ சொல்லுங்கள் ஈழத்தில் கொலை செய்யப் பட்டவன் பெயரை வைத்து கட்சி துவங்கி விட்டு அவனுக்கே துரோகம் செய்வது யார்??

4. LYCA வை உள்ளே விட்டது :-

       2006 ஏப்ரலில்  ல் EU நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப் படுகிறது.  அதே ஆண்டு அக்டோபர் -06 ல்  Lyca வுக்கு இங்கிலாந்தில் தொழில் தொடங்க அரசு அனுமதி அளிக்கிறது!

    சீமான் சொல்வது போல் அது, புலி ஆதரவு நிறுவனமாக இருப்பின் இங்கிலாந்து எப்படி தொழில் துவங்க அனுமதி தரும்!??

5. விடுதலை புலிகள் மேல் சர்வதேசம் வைக்கும் முதற் குற்றச்சாட்டே குழந்தை போராளிகளை பயன் படுத்தினர் என்பது தன்.
அதை ஆமோதிக்கும் வண்ணம் எடுக்கப் பட்ட புலி பார்வை படத்தின் வெளியீட்டு விழாவில் முதல் ஆளாக அமர்ந்தது "புலிகள் பெயரையும் பிரபாகரன் படத்தையும் " வைத்து கட்சி நடத்தும் சீமான். இதற்க்கு பெயர் துரோகம் அல்லாமல் வேறென்ன,?????

6.அவ்வளவு ஏன்,
2015 செப் 28 அன்று அமெரிக்கா ஈழத்திற்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறது என கூறி அமெரிக்க தூதரக முற்றுகையை நாங்கள் நடத்தினோம்.
நான் தனிப் பட்ட முறையில் பல நாம் தமிழர் தோழர்களிடம் பேசி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டினேன். தோழர். @மாணிக்கவாசகம் சீனி. மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து எழுதி இருந்தார். வேறு ஒன்றும் நடக்கவில்லை!
நாங்கள் முற்றுகை நடத்திய மறு நாள் கோவை யில் ஓர் நாம் தமிழர் தோழர் அமெரிக்காவை எதிர்த்து அந் நாட்டு கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதற்க்கு மறு நாளை போராட்டத்தை தொடர வேண்டாம் என கூறி கட்சி தலைமை அவரை கண்டித்ததை அறிவீர்களா??!?

7.நாங்கள் இந்தியாவையோ, அமெரிக்காவையோ எதிர்த்து எந்த செயற்பாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் போதெல்லாம் மக்களை திசை திருப்பவும் பிரபாகரன் மீது மற்றவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணவும் அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.
      அ)  . திராவிடம் தமிழனை வஞ்சித்து விட்டது எனக் கூறி ஈழ விடுதலை போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் பெரியாரிய தோழர்களை வசை பாடுவது.
     ஆ) . தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல எனக் கூறி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசி பல - நாட்கள் சிறையில் இருந்த வைகோ, கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்களை தவறாக சித்தரிப்பது!

இ.) சரி இவை கூட பரவாயில்லை, "கண்டி நாயக்கர் " என ஆவணப் படம் எடுத்து சிங்களவன் நல்லவன் தமிழனை கொன்றது தெலுங்கன் என பச்சை பொய்யை சொல்லியதை எள் அளவும் ஏற்க முடியாது, .

     கடைசியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பல தெலுங்கு பேசும் தோழர்களை பற்றியாவது உங்களுக்கு தெரியுமா,???

    உருது பேசுபவன் தமிழன் இல்லை என்பதெல்லாம் எந்த வகை அரசியல்???

      தமிழனை சாதி, மதமாக துண்டு துண்டாக உடைக்கும் இவரா ஈழ விடுதலையை வாங்கி தருவார்???