Monday, 23 October 2017

Panama Papers- ம் படுகொலைகளும்

அமிதாப் பச்சான் முதல் Leonal மெஸ்ஸி வரை முறை கேடாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டிய Panama Papers நினைவு இருக்கிறதா ...!

Iceland -ன் அதிபர் மக்கள் புரட்சியால் வெளியேற்ற ப்ட்டத்ற்க்கும் இதே Panama Papers தான் காரணம்!

  அதே வரிசையில் Malta (One of the Europian Country )  நாட்டின்  பிரதமர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் Daphne Caruana Galizia
 (டெப்னே கர்வானா காலிஸீயா ). Malta நாட்டின் முக்கியமான புலனாய்வு ஊட்கவியலாளர்.

தனது Blog-களிலும், பொது வெளியிலும் அந்த நாட்டின் பிரதமரும் அரசின் தலைமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள முறை கேடுகள் பற்றியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது !

மேலும் இதில் நாட்டின் வணிக லாபத்தில் கொழிக்கும் தொழில் அதிபர்கள் சிலரையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என குரல் கொடுத்து இருந்தார்.

இது Panama Papers -ன் தொடர்ச்சி என்பதாலேயே பலரும் உற்று நோக்கி கொண்டு இருந்த ஓர் விடயம் இது !

இந்நிலையில் , கடந்த வாரம் 16/10/17 திங்கள் அன்று மதியம் தன்  வீட்டில் இருந்து காரை தனியே Car-ல் கிளம்பியவர் நடு வழியில் கார்-ல் இருந்த குண்டு வெடித்து உயிர் இழந்தார் !

  இது நாடு முழுதும் பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது !

அவரின் கொலைக்கு காரணம் , Prime Minister - Joshep Muscat தான் என பலரும் உறுதியாக கூறுகின்றனர். பிரதமரின் மனைவி பெயரில் Panama -வில் வாங்கி கணக்கு இருப்பதை வெளிக்கொணர்ந்தது தான் டெப்னே மீது இந்த கொலை நிகழ்த்த பட்டுள்ளது என்பதே பலரின் குற்றச்சாட்டு !

Mafia State - (கொலைகார நாடு ) என மக்களே பேனர் வைக்கும் அளவுக்கு நிலை சென்று விட்டது !

இன்று வரை இதற்கான காரணமாவர்கள் யார் என்று கண்டு பிடிக்காததே பெரும் நெருக்கடிக்கு Mr. Muscat யை தள்ளி உள்ளது ! சென்ற வார இறுதியில் இந்த கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் யூரோ வெகுமதியாக வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார்.

இதனை முற்றிலுமாக மறுத்து உள்ள டெஃப்னே அவர்களின் மகன், PM பதவி விலக வேண்டும் அதற்கு முன்பாக என் அம்மா குற்றம் சாட்டிய அந்த காவல் துறை உயர் அதிகாரியும் , மற்ற ஒருவரின் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

Europe கூட்டமைப்பு உயர் அதிகாரிகள் இதை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். " இது உலக முழுதுமான பேச்சு, எழுத்து சுதந்திரத்திற்காண சவால் என்றே குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் " வியாபம் ஊழல் கொலைகளும் "

அதானி சொத்து குவிப்பை வெளிக்கொணர்ந்ததால் தோழர்.Paranjoy  Guha, "EPW"-வில் இருந்து வெளியேற்ற பட்டதும் உங்களுக்கும் நியாபகம் வந்தால்..............,


நாம் எத்தனை பெரிய எதிரியை எதிர்த்து நிற்கிறோம் என்பதை உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்

No comments:

Post a Comment