அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், கரு.பழனியப்பன் Karu Palaniappan
அவர்களுக்கு பதில் சொல்கிறேன் என பேசிய காணொளி பார்த்தேன், காணொளியின் முதல் பத்து நிமிடம் பற்றி பேசுவோம்!
இரண்டு விடயங்கள் மட்டுமே :-
ஈழ இனப்படுகொலை க்கு பிறகு ராஜபக்ஷேவை சந்தித்து பேசியதாகவும் "நீங்கள் சொன்ன காரணம் / போர் " முடிந்து விட்டதே அம் மக்களுக்கு Federal அமைப்பை உருவாக்கி கொடுங்கள், இல்லையென்றால் 40 வருடம் கழித்து இன்னுமோர் விடுதலை போராட்டம் வரும். - என்றார் கலாம் நான் பக்கத்தில் இருந்தேன்!
அங்கே நடந்தது விடுதலை போராட்டம்,. பிச்சை கேட்கவில்லை! இலங்கையோடு அவர்களின் பொம்மை அரசாக ஒத்து வாழ நினைத்திருந்தால் "இந்திரா காந்தி " காலத்திலேயே தேசிய தலைவர் .பிரபாகரன் வடக்கு பகுதியின் முதல்வர் ஆகியிருப்பார்!
(இடையில பிரபாகரனை புகழ்ந்து பேசினார் கலாம் என உணர்ச்சி கொந்தளிப்பு வேறு!)
- அது சரி, தமிழன் உணர்ச்சி தூண்டலுக்கு அடிமை என்பதை நீங்களும் தெரிந்து கொண்டீர்கள் போல!
கலாம் பேசியதாக நீங்கள் கூறியதைத்தான்,
கனிமொழியும் - TR பாலு வும் ராஜபக்ஷே விடம் சிரித்த வண்ணம் பரிசு வாங்கி கொண்டே சொன்னதாக நம்மிடம் சொன்னார்கள்!
அதையே மீண்டும் சொல்ல எங்களுக்கு நீங்கள் எதற்கு!
நாங்கள் கேட்பது அங்கே போருக்கு முன் நடந்த பொது மக்களின் மீதான கொத்து குண்டுகள் வீச்சை பற்றி ஏன் கலாம் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை!
2006 ல் செஞ்சோலை மாணவர்கள் இல்லம் மீது நடந்த தாக்குதலுக்கு இங்கிலாந்தில் இருக்கும் The Guardian பத்திரிக்கை வெளிப்படுத்திய கொந்தளிப்பை கொஞ்சம் எடுத்து பாருங்கள்!
அதில் 1% கூட பேச கலாம் க்கு வாய் வரவில்லையே ஏன்?
போரு க்கு பின்னரான இன அழிப்பு குறித்து ஏதேனும் பேசி உள்ளாரா???
தமிழன் என்பதற்காகவே கொல்லப் பட்ட பாலச்சந்திரனை பற்றியும் 'இசைப் பிரியா ' பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளாரா?
அவரை ஊர் ஊராக போய் மக்களிடம் பேச சொல்லவில்லை!
ஒரே ஓர் கண்டன அறிக்கை கூட தனிப் பட்ட முறையில் கொடுக்கவில்லையே என்பது தான் எங்களின் கோபம்!
"உயிர் போகும் போது தண்ணீர் கேட்டால் தராமல் கருமாதிக்கு பால் ஊற்றுவதால் என்ன பயன்?
அடுத்தது :-
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு,
Solar light for boat,
Solar light for schools
Solar light for houses
கலாம் சார்பில் கொடுத்ததாக கூறினார்!
Sir, இது NGO வேலை!
ஓர் அரசியல் பதவி வகித்தவர் ………… „ மக்களுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்பவர் செய்திருக்க வேண்டியது இதை அல்ல!
கூடங்குளம் வந்தால் தான் தமிழகத்திற்கு மின்சாரம் என் பொய் பிரச்சாரத்தை உடைத்து மாற்று வழி மின் உற்பத்தியை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அது தான் 'மக்களுக்கான தலைவரின் " எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்!
மக்கள் இயக்கம் என்றால்,
JK போல,
அம்பேத்கர் போல,
பெரியார் போல,
மக்களுக்கு எது நல்லதோ அதை முன்னிருத்தி அரசே எதிர்த்தாலும் மக்களை திரட்டி சாதித்து காட்டியிருக்க வேண்டும்!
அப்போது தான் அவர் மக்கள் தலைவர்!
ஆழ் கடல் மீன் பிடிப்பை ஊக்குவித்தால் தமிழக - சிலோன் மீனவர்கள் பிரச்சனை தீரும் என்று 2005 ம் ஆண்டு அறிவுரை சொன்னதாகவும் Iceland நாட்டின் மாதிரியை அடியொற்றி நடந்தால் நன்மை பயக்கும் என்றும் கலாம் கூறியதாகவும் அதற்கான மாதிரி வரை பட / திட்டத்தை தான் தயாரித்ததாகவும் பொன்ராஜ் கூறுகிறார்!
Iceland ன் மொத்த மக்கள் தொகையே 3.3 லட்சம் தான் (2015 ன் படி) நாகப்பட்டினம் துவங்கி இராமேஸ்வரம் வரை மீனவர்கள் மட்டுமே 3 லட்சம் பேர் இருப்பார்கள்!
ஆழ்கடல் மீன் பிடிப்பு என்பதே Corporate களுக்கு மொத்தமாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை தாரை வார்ப்பதற்கு சமமானது! அவர்கள் சிறிய அளவிலான கப்பலில் வந்து மீன் பிடிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள்!
நம் மீனவன் 30-40 ஆயிரம் கடன் வாங்கி டீசல் கொண்டு சென்று 6-8 பேருடன் இரண்டு நாள் கடலிலேயே தங்கி மீன் பிடிப்பவன்!
நீங்க போட்ட Plan யை இப்போ யார் Execute பண்ண காத்திருக்கிறார்கள் தெரியுமா?
Relince Fresh,
more. - Adithya Birla
&
Tata
ஆக, corporate க்காக தான் வருசம் பூரா வேலை பார்த்திருக்கீங்க ரெண்டு பேரும் எங்க காசுல..!
மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் - மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தால் பிரச்சனை தீரும் என்று கலாம் பரிந்துரை செய்ததாகவும்,
உனக்கு என்ன தெரியும் சாதாரண இயக்குனர் தானே நீ என கேட்டிருக்கிறார் திரு பொன்ராஜ்!
இங்கே மீன்வளம் மட்டுமே பிரச்சனை இல்லை! 2004 முதல் 2014 க்குள் எல்லை தாண்டினாலே சுட்டுக் கொல்லப் பட்ட மீனவனுக்கான நீதி யை குறித்தும் தான்!
இதற்கான எந்த அறிக்கையை அல்லது கண்டனத்தை மீனவ குடும்பத்தில் பிறந்த கலாம் பதிவு செய்தார்???
இதை கேட்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ்.W.புஷ் ஷாக இருந்திருக்க வேண்டும் என்பதில்லை தான் நம்பிய ஒரு தலைவனை தன்னை இந்தியன் என பெருமை படு என சூடேற்றிய மனிதரை பார்த்து தான் கேட்கிறோம்!
அந்த சூடு உங்களுக்கு ஏன் வரவில்லை என்று!?
Diplomatic aa வேலை செய்தாராம் கலாம்,.
எது?
600 க்கும் மேற்பட்ட மீனவன் கொல்லப் பட்ட பிறகும், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு "கனவு காணுங்கள் "ன்னு கதை விட்டாரே அது தான் Diplomatic aa,,.
80 ஆயிரம், விதவைகளும் ஒன்னே முக்கால் லட்சம் உயிர்களும் கொல்லப் பட்ட போதும் அமைதி காத்தாரே அது Diplomatic aa?
திரும்பவும் சொல்றோம்! He's a good Rocket Engineer & very bad politician ,,
That's it,.
No comments:
Post a Comment