Saturday, 21 July 2018

Rosa Parks

8 வழி சாலை க்காக எத்தனை கைதுகள்...? எத்தனை அடக்குமுறைகள்..? அரச பயங்கர வாதங்கள்!

இன்னொரு பக்கம்,
பொய் பிரச்சாரங்கள்.!?  எத்தனை Digital
பொய் புரட்டு காணொளிகள் ..?  அதன் உண்மை தன்மையை  ஓரிரு நாளில் தோலுரித்துக் காட்டிவிடலாம் !

  ஆனால், போராட்டம் எப்படி நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதே நம் இன்றைய அவசியமான ஒன்று!

அதைப் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்!

  1955 டிச-1 அலபாமா மாகாணத்தின்     Montgomery  வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர்  அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்.? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து விட்டு தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை, நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை  அதனால் நகர வேண்டும் என்கிறார்! அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!

அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!
  இத்தனைக்கும் அந்த டிரைவரே ஓர் கருப்பர் தான்!

அவர் டிரைவர் வேலைக்கு வந்ததற்கே 1953 ல் நடந்த Baton Rouge bus boycott போராட்டம் தான் காரணம், என்பது வேறு கதை!

ரோஸா ஓட்டுனரின் பேச்சையும் வெள்ளையர்களையும் அவ மதித்ததாக கைது செய்யப் பட்டு மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்!

  அதே ஆண்டு March 2 -ல் 15 வயது சிறுமி -யும்
இதே போல் பேருந்தில் இருந்து வலுக் கட்டாயமாக இறக்கி விடப் படுகிறார்! கையில் காப்பு மாட்டி கைது செய்யப் பட்டார்!  வெள்ளை நிறத்தவருக்கு இடம் தரவில்லை என்பதால்..!
அவர் NAAP - யின் உறுப்பினர்!
   NAAP - National Association for the Advancement of Colored People's. 
  இது, 1909 ல் Maryland மாகாணத்தில் துவங்கப் பட்ட கருப்பின மக்களின் உரிமைக்கான அமைப்பு!
   அதே அமைப்பின் ஆலோசகராக இருப்பவர் ரோஸா பார்க்கர்!

   அதன் கோபம் தான் ரோஸா எழவே முடியாது என்று உறுதியாக இருந்து!

விடயம் மெது மெதுவாக மக்களிடம் பரவியது!

5 - டிச. குற்றவாளி என்று கூறி $ 10 அபராதமும், $4 நீதி மன்ற நேரத்தை வீணடித்ததாகவும் தண்டனை வழங்கப் பட்டது ரோஸா வுக்கு!

அன்று இரவே,
அனைத்து கருப்பின நல அமைப்புகளும் இடது சாரி  இயக்கங்களும் ஒன்றிணைந்து துண்டறிக்கை தயாரித்து வீதி வீதியாக வழங்கினர்!

  ஆங்காங்கே பணியில் இருக்கும் கறுப்பினத்தவர் வேலை நிறுத்தம் செய்யும், ஒத்துழையாமை-யை கடைபிடிக்கவும் வலியுறுத்தல் செய்தது அந்த துண்டறிக்கை!

NAAP-யின் தலைவராக இருந்த E.D.NIXON அனைத்து தேர்தல் சாராத அமைப்புகளின் தலைவர்களையும் கூட்டினார்!
  கூட்டத்தில்

Montgomery Improvement Association என்ற பெயரில் போராட்டம் நடத்துவது எனவும் King என்பவர் அதனை வழி நடத்துபவராகவும் இருந்தார்!

  மக்களிடம் வேகமாக செய்தி பரவியது!
*   Dec-8 முதல், அனைத்து கருப்பின Taxi Driver களும் 10 சென்ட் (பேருந்து கட்டண விலை) க்கே கருப்பின மக்களை அழைத்துச் செல்ல முடிவு செய்து., போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர்!

  *  குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருமே பேருந்தில் ஏறக் கூடாது என்று உறுதியாக நின்றனர்!

* தேவையான இடத்தில், தனியார் Car -களை பங்களித்தனர்!
Car Pooling அங்கு தான் பிரபலமானது!

* பலர் நடந்தே சென்றனர்!

* குதிரை, மாட்டு வண்டி என அனைத்தையும் பயன் படுத்தினார்கள்!

* கணிசமானோர் வெள்ளை நிறத்தவர்களுக்காக உழைப்பதை நிறுத்தினர்!

* மக்கள் கூடும் பொது இடங்களில் நிதி திரட்டப் பட்டது!., நடப்பவர்களுக்கு செருப்பு, போராட்டத்தால் வேலை இழந்தோருக்கு நிதி உதவி என அனைவரும் போராட்டத்தை தாங்கி பிடித்தனர்!

   பிற்காலத்தில் இதை மார்டின் லூதர் கிங் Jr. இவ்வாறு வியந்து எழுதுகிறார்!
   " அது கண் முன்னே நிகழ்ந்த வரலாற்று மாற்றம்!
பல வெள்ளை நிற சீமாட்டிகளே காரை ஓட்டி வந்ததை பார்த்தேன்! "
  ஓர் நூற்றாண்டு கால அடிமைத்தனம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது! "

போராட்டம் ஓரிரு நாள் இன்றி மாதக் கணக்கில் தொடர்ந்தது!
நாடு முழுதும் Civil Rights குறித்தான Pressure அதிகரித்ததும் , மாவட்ட நீதி மன்றத்திற்கு வழக்கு வந்தது!
நீதிபதிகளில், 3 -ல் 2 பேர் பேருந்தில் நடத்தப்படும் இன பாகுபாடு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்!  

   ஆனால் அதை ஏற்காத அலபாமா நீதி மன்றம் Supreme Court of US க்கு போனது! அத்தனை அளவுக்கு வெள்ளையர்கள் Domination இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று!

இந்த இடைப் பட்ட காலத்தில் ஓர் நாள் கூட போராட்டத்தை மக்கள் நிறுத்தவேயில்லை!

இந்த அழுத்தம் நீதி மன்றத்தையும் நெருக்கியது! ஆனாலும் கால தாமதமாகவே டிச., 17 ம் தேதி அலபாமா அரசு செய்த மேல் முறையீட்டை நிராகரிப்பு செய்தும், மக்கள் அனைவரும் சமமே!
  பேருந்தில் எந்த பாகுபாடும் கூடாது என்று உத்தரவிட்டது!

டிச., 20 மாகாண அரசு  நீதிமன்ற உத்தரவை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வந்தது!

அன்று தான் மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்!
மறு நாள் 21 -டிச 1956 ரோஸா பார்க்கர் முதல் பக்க இருக்கையில் அமர்ந்து பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார்!

அப்போராட்டம் நடந்தது மொத்தம் 381 நாட்கள்!  அமெரிக்கா வை புரட்டி போட்ட முக்கியமான ஒன்று!

    நாம் ஓர் போராட்டத்தை தமிழ் நாடு முழுதாக தொடர்ந்து நடத்த வேண்டியது எத்தனை அவசியம் என்பதை உணருங்கள்!

நாம் போராடாமல், நமக்கான உரிமை தானாக கையில் வந்து விழாது!

Sunday, 8 July 2018

தமிழகம் ஏன் எப்போதுமே இந்துத்துவா கருத்தியலை எதிர்க்கிறது?

தமிழகம் எப்போதுமே ஓர் முற்போக்கு தன்மையோடு தான் இயங்கி வருகின்றது!

   அது இந்தியாவிடம் இருந்து முற்றிலுமாக விலகி விட்டது என்று சொன்னால் அது மிகைப் படுத்தலே……!

  யாரை எப்படி கையாள வேண்டும் என்பது உலகின் முதல் இனத்திற்கு நன்றாகவே தெரியும்!

   சென்ற முறை மோடி சென்னை வந்த போது #GoBackModi என்ற வாசகம் உலகின் ஒவ்வொரு மூலையையும் அசைத்துப் பார்த்தது என்பதை யாருமே மறுக்க முடியாது!
   தமிழகத்தில் நடக்ககும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக வும், இந்துத்துவா கருத்தியலும் தான் காரணம் என்பதை நாம் சொல்லாமலே மக்கள் உணரத் தொடங்கி பல மாதங்கள் ஆகின்றன!
    காவிரிக்காக பேசாத பிரதமர், மக்கள் போராடுவதை பற்றிக் கவலைப் படாத பிரதமர்………
  ஏகப் பட்ட ஊழல் முறைகேடுகளுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் பாதுகாப்புத்துறை கண்காட்சியை திறக்க வருகிறார் என்றதும் ஒட்டுமொத்த தமிழகமே தன்னெழுச்சியாக திரண்டு நின்றது தான் தமிழர்களின் தனித்துவமான இயல்பை நமக்கு காட்டியது!

   இன்று அமித்ஷா வரப் போகிறார் என்றதும் அதே அளவில் #GoBackAmitShah என்று Twitter உலகம் தயாராவதை உளவுத்துறையோ, அரசோ, ஊடகங்களோ கவனிக்கிறதா என்பதே கேள்வி!

   எந்த பதவியிலும் இல்லாமல் ஒரு கட்சி தலைவரை தமிழர்கள் ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழும்..,
   மிக எளிதாக இதை புரிந்து கொள்ளலாம்..,, இந்தியா முழுதும் மனித குலத்தின் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு பாஜக தான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை!
  எத்தனை கொலைகள், எத்தனை மிரட்டல்கள், எத்தனை எத்தனை பதவி மாற்றங்கள்..!
   எந்த ஆட்சியும் செய்யாத ஒன்று தான் நீதி மன்றத்தை தனக்கு இசைவாக பாஜக வளைத்தது!

   இலங்கை-யில் ராஜபக்க்ஷே கையாண்ட அதே வழி முறை!
   இதுவரை மணிப்பூர், கோவா என்று அவர்கள் செய்த ஜனநாயக படுகொலைகளை கர்நாடகா-வில் செய்ய முடியாமல் போனதில்…… நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை!
  காங்.,ம் இதை முன்னாளில் செய்துள்ளதே!

   ஆனால், தமிழகத்தை ஆள்வதே பாஜக என்பதில் தமிழனுக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை!

13 பேர் படுகொலை,

போராடுபவன் தேச துரோகி……

கேள்வி கேட்டால்…… குண்டாஸ்,

போராடினால் NSA

  இப்படி நடக்கும் அனைத்து அரச பயங்கர வாதங்களும் பாஜக வின் கண் அசைவில் தான் நடக்கிறது என்று நன்றாகவே தமிழகம் உணர்ந்து விட்டது!

அதன் வெளிப்பாடு தான் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலை மட்டுமே மனதில் வைத்து தமிழகம் வரும் அமித்ஷா வை விரட்டும் #GoBackAmitShah எனும் அம்புகளும், ஈட்டிகளும்!

   இது வெறும் அமித்ஷா வுக்கானது அல்ல ஒட்டு மொத்த மதெவெறி சக்திகளுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கை!

 

Friday, 6 July 2018

நெய்மரும் 8 வழிச் சாலையும்!

நெய்மர் துடிப்பதை நடிப்பு எனும் உலகளாவிய ஊடகங்கள், கொலம்பிய Player முள் ஷூ-வால் நெய்மர் காலை மிதித்ததை கிஞ்சித்தும் பேசியதாக தெரிய வில்லை!

சர்வதேச ஊடகங்களிடம் நேர்மை தெரியவில்லை.! நெய்மர் மீது இருக்கும் பொறாமை வன்மமாகவே  வெளிப்படுகிறது!

   8 வழிச்சாலை க்கு போராடும மக்களிடம்  நம்ம ஊர் நீதி மன்றம் சொன்னுச்சே…… "புரிஞ்சிக்கோங்க" யாரோ சொல்றாங்க-ன்னு
திட்டத்தை எதிர்க்காதீங்கன்னு!
 
மேல சொன்ன அதே Category தான்!

  தமிழ்நாட்டு மக்கள் மேல இந்தியாவுக்கு எந்த அக்கறை ம** கிடையாது!
நாம போராடும் போதெல்லாம், ஏம்ப்பா சும்மா…… போராட்டம் போராட்டம்னு எதையாவது தூக்கிட்டு வந்திடுறீங்கன்னு சில Elite சமூக ஆர்வலர்களும், Corporate அரசியல் விமர்சகர்களும் பினாத்துவதை பார்க்கலாம்!

   இந்த எட்டு வழிச்சாலையை ஆதரிக்கும் மைலாப்பூர், தாம்பரம், ஃபோர்ட் கிளப் வாசிகள் கிட்ட உங்க வீட்டு Compound Wall யை கொஞ்சமா இடிச்சிக்குறோமே……
ரெண்டு பக்கமும் ஒரு மீட்டர் மட்டும் அகலப் படுத்துறோம் சாலையை-ன்னு!
       அலறி அடிச்சி கிட்டு ஓடி வந்திடுவாங்க., அத்தனை பேரும்! மொத்த டீ.வி யும் அவங்களுக்கு 24 மணி நேர நேரலை ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்திருக்கும்!

   இங்கு, இருப்பவனுக்கு ஒன்னு  இல்லாதவனுக்கு ஒன்னு என்பது மாறி ………,
  அதிகார வர்க்கத்திற்கும் So called உயர் சாதிகளுக்குமே அனைத்தும் அசைகிறது!

   ஜல்லிக்கட்டு போராட்டத்திற்-க்கு முன்பு இங்கு நடந்த போராட்டங்களை தமிழ்ச் சமூகம் எப்படி அனுகியது என்பது முக்கியமானது…………

    முல்லைப் பெரியாறு க்காக சென்னையில் பேரணி!

  ஈழ விடுதலை போராட்டம்!

அப்பாவி தமிழர்கள் மூவர் தூக்கினை தடுத்து நிறுத்தி ஜெ. வை-யே தீர்மானம் போட வைத்த அமைதி வழிப் போராட்டங்கள் என எத்தனையோ நிகழ்ந்துள்ளது!

  2013 - மார்ச் -ல்  மாணவர் போராட்டம் இன்று வரை இந்திய உளவுத்துறை  மறக்க முடியாத ஓர் தொடர் போராட்டம்!

இவை எல்லாம் அத்தனை பெரிய அளவில் Paid செய்தி நிறுவனங்களால் கொச்சைப் படுத்தும் வேலையை செய்ய முயன்றதில்லை! செய்தாலும் உடனடியாக முற்போக்கு ஊடகவியலாளர்களே வேகமான பதிலால்  அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!

  ஆனால், தற்போது போராடும் மக்களை சமூக விரோதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவதற்கு என்றே…… நாளிதழ்கள் முதல் நடிகர்கள் வரை ஆட்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்!

நெய்மர் வலியால் துடித்தாரா…… அல்லது அதையும் தாண்டி நடித்தாரே என்பதை தாண்டி, காலை காயப் படுத்திய கொலம்பிய வீரரை பற்றி யாருமே பேசாததும் ஓர் அரசியலே!

தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்..,
அது போலவே…… 40 ஆயிரம் வீடுகளை இழக்கப் போகும் மக்களின் வலி  வீட்டு வேலைக்கு கூட ஆட்களை அரசு செலவில் வைத்திருக்கும் நீதிபதிகளுக்கு மக்களின் வலி தெரிய வாய்ப்பில்லை தான்!

போராடுவோம்………, அதைத் தவிர்த்து வேறு எதுவுமே வாய்ப்பாக நம் முன் இல்லை நம்மிடம்!
நாம் போராடுவதை கை விடுவதும் நம் அடுத்த தலைமுறையை சவக் குழி-யில் தள்ளி விடுவதும் ஒன்றே………!