Friday, 6 July 2018

நெய்மரும் 8 வழிச் சாலையும்!

நெய்மர் துடிப்பதை நடிப்பு எனும் உலகளாவிய ஊடகங்கள், கொலம்பிய Player முள் ஷூ-வால் நெய்மர் காலை மிதித்ததை கிஞ்சித்தும் பேசியதாக தெரிய வில்லை!

சர்வதேச ஊடகங்களிடம் நேர்மை தெரியவில்லை.! நெய்மர் மீது இருக்கும் பொறாமை வன்மமாகவே  வெளிப்படுகிறது!

   8 வழிச்சாலை க்கு போராடும மக்களிடம்  நம்ம ஊர் நீதி மன்றம் சொன்னுச்சே…… "புரிஞ்சிக்கோங்க" யாரோ சொல்றாங்க-ன்னு
திட்டத்தை எதிர்க்காதீங்கன்னு!
 
மேல சொன்ன அதே Category தான்!

  தமிழ்நாட்டு மக்கள் மேல இந்தியாவுக்கு எந்த அக்கறை ம** கிடையாது!
நாம போராடும் போதெல்லாம், ஏம்ப்பா சும்மா…… போராட்டம் போராட்டம்னு எதையாவது தூக்கிட்டு வந்திடுறீங்கன்னு சில Elite சமூக ஆர்வலர்களும், Corporate அரசியல் விமர்சகர்களும் பினாத்துவதை பார்க்கலாம்!

   இந்த எட்டு வழிச்சாலையை ஆதரிக்கும் மைலாப்பூர், தாம்பரம், ஃபோர்ட் கிளப் வாசிகள் கிட்ட உங்க வீட்டு Compound Wall யை கொஞ்சமா இடிச்சிக்குறோமே……
ரெண்டு பக்கமும் ஒரு மீட்டர் மட்டும் அகலப் படுத்துறோம் சாலையை-ன்னு!
       அலறி அடிச்சி கிட்டு ஓடி வந்திடுவாங்க., அத்தனை பேரும்! மொத்த டீ.வி யும் அவங்களுக்கு 24 மணி நேர நேரலை ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்திருக்கும்!

   இங்கு, இருப்பவனுக்கு ஒன்னு  இல்லாதவனுக்கு ஒன்னு என்பது மாறி ………,
  அதிகார வர்க்கத்திற்கும் So called உயர் சாதிகளுக்குமே அனைத்தும் அசைகிறது!

   ஜல்லிக்கட்டு போராட்டத்திற்-க்கு முன்பு இங்கு நடந்த போராட்டங்களை தமிழ்ச் சமூகம் எப்படி அனுகியது என்பது முக்கியமானது…………

    முல்லைப் பெரியாறு க்காக சென்னையில் பேரணி!

  ஈழ விடுதலை போராட்டம்!

அப்பாவி தமிழர்கள் மூவர் தூக்கினை தடுத்து நிறுத்தி ஜெ. வை-யே தீர்மானம் போட வைத்த அமைதி வழிப் போராட்டங்கள் என எத்தனையோ நிகழ்ந்துள்ளது!

  2013 - மார்ச் -ல்  மாணவர் போராட்டம் இன்று வரை இந்திய உளவுத்துறை  மறக்க முடியாத ஓர் தொடர் போராட்டம்!

இவை எல்லாம் அத்தனை பெரிய அளவில் Paid செய்தி நிறுவனங்களால் கொச்சைப் படுத்தும் வேலையை செய்ய முயன்றதில்லை! செய்தாலும் உடனடியாக முற்போக்கு ஊடகவியலாளர்களே வேகமான பதிலால்  அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!

  ஆனால், தற்போது போராடும் மக்களை சமூக விரோதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவதற்கு என்றே…… நாளிதழ்கள் முதல் நடிகர்கள் வரை ஆட்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்!

நெய்மர் வலியால் துடித்தாரா…… அல்லது அதையும் தாண்டி நடித்தாரே என்பதை தாண்டி, காலை காயப் படுத்திய கொலம்பிய வீரரை பற்றி யாருமே பேசாததும் ஓர் அரசியலே!

தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்..,
அது போலவே…… 40 ஆயிரம் வீடுகளை இழக்கப் போகும் மக்களின் வலி  வீட்டு வேலைக்கு கூட ஆட்களை அரசு செலவில் வைத்திருக்கும் நீதிபதிகளுக்கு மக்களின் வலி தெரிய வாய்ப்பில்லை தான்!

போராடுவோம்………, அதைத் தவிர்த்து வேறு எதுவுமே வாய்ப்பாக நம் முன் இல்லை நம்மிடம்!
நாம் போராடுவதை கை விடுவதும் நம் அடுத்த தலைமுறையை சவக் குழி-யில் தள்ளி விடுவதும் ஒன்றே………!

No comments:

Post a Comment