Tuesday, 21 June 2016

திராவிட நாடு

திராவிட நாடு என்ற கோரிக்கையில் இருந்த ஆந்திரம், கேரளம் மற்றும் மைசூர் ஏன் தமிழகத்தை போல
சுயாட்சி கோர வில்லை???

பதில் இதோ :-

1918 துவக்கத்திலேயே இங்கே மக்களாட்சி துவங்கி விட்டது அதாவது நீதி கட்சி, காங்கிரஸ் போன்றவையும் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும் மக்களுக்கு சுயமரியாதை எண்ணத்தை விதைத்து விட்டனர்.

ஆனால், மற்ற மாகாணாங்கள் திருவிதாங்கூர், மைசூர், விஜயநகரம் என மன்னர் ஆட்சியாகவே இருந்தது! அதாவது முடியாட்சி

அந்த மக்களுக்கு சுயாட்சி என்பதோ , மக்களாட்சியோ,  அனைத்தும் புதியதே!

ஆனால் இங்கே நிலமை வேறு,

    சட்ட புத்தகம் வெளியான உடனேயே இது முற்றிலும் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிரானது முழுக்க இந்துத்துவமும், முதலாளித்துவமும் மட்டுமே பேசுகிறது என சொல்லி முதன் முதலில் அந்த புத்தகத்தை எரித்தவர் பெரியார் தான்!

அந்த புத்தகத்தை எரித்தால் என்ன தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் இந்தியா திண்டாடியது தனி கதை!

அதனால் தான் இன்றும், பார்ப்பனர்களுக்கு பெரியார் பெயரை கேட்டாலே பதறுகின்றது!

இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய இனங்களுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்!

  இன்றும், அவர் பெயரை வட மாநிலங்களிலும்  பல பழ்கலை. மாணவ அமைப்பு சுமந்து உறுதியாக  நிற்க காரணம் இதுவே!

No comments:

Post a Comment