Thursday, 1 September 2016

இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை - 3

இரோம் சர்மிளாவை சந்தித்த கதை - 3 மற்றும் நிறைவு பகுதி
வேல்ல்ல்லுப் ப்ப்ப்பிள்ளை பிரப்ப்ப்பாகரன். -நாங்கள் கொடுத்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த படத்தினை கண்டு அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.
உலகின் குறிப்பிடத்தக்க ஒரு சில இரும்பு பெண்மனிகளில் ஒருவர் என வர்ணிக்கப் படும் "இரோம் சானு ஷர்மிளா" எங்களை வாசல் வரை வந்து நின்று வர வேற்பார் என நாங்கள் கனவிலும் கணித்திருக்க வாய்ப்பில்லை! Please come in என்றார், இரு கரம் கூப்பி நின்ற எங்களைப் பார்த்து .
"இவங்க சென்னையில இருந்து உங்களை பார்ப்பதற்க்காகவே வந்துள்ளனர் என ராஜ் குமார் கூறவும். Is it ??? ... - She just little blushing.
உள்ளே வந்து அமருங்கள் என்று ஓர் நாற்காலியை காட்டினார். - நீங்கள் முதலில் அமருங்கள் என்றோம். இரு கட்டில்களில் ஒன்றில் பாதி இடத்தை புத்தகங்கள் அடைத்து விட்டிருந்தது. மீதி சரி பாதியை அவருக்கு வந்திருந்த கடிதங்களில் நிரப்பியிருந்தன! ( கிட்டதட்ட 5500 சொச்சம் என பின்னர் கூறினார். ) மற்றுமோர் கட்டில் அவருக்கான இடம்.
நாங்கள் இருவர் நிற்கின்றோம் ஒரு நாற்காலி தான் இருக்கின்றது என உணர்ந்ததும். நொடியில் அருகில் இருந்த குளியலறை யினுள் இருந்து ஓர் நாற்காலியை இழுக்க ஆரம்பித்திருந்தார். சிறிய இடம் என்பதால் நாற்காலி கதவில் பட்டு சத்தம் எழுப்ப, Please leave it, leave it i will take என்று பதறிய குணாவை கண்டு கொண்டதாக தெரியவில்லை! அந்த Chair ஐ எடுத்து போட்டு என்னை அமர வைத்த பிறகுதான் எதிரில் இருந்த அவருக்கான இடத்தில் அமர்ந்தார் . புகைப் படங்களிலும் காணொளி காட்சிகளிலும் பார்த்தை விட இத்தனை அழகாகவும் மூன்று மடங்கு நிறமாகவும் இருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை! அது வட கிழக்கு மண்ணின் மகிமையா அல்லது பதிநான்கரையாண்டு ஆகாரமின்மையால் வந்த உடல் வெளிர்ப்பா என என்னால் இப்போதும் சரியாக கூறத் தெரியவில்லை! பாரம்பரிய உடை, நீளமாக அதே நேரத்தில் அதிகமாக கொட்டிவிட்டதால் கலகலத்து போயிருந்த கூந்தல், வெட்டப் படாத கால் நகங்கள் என அவரை பார்த்ததும் புரிந்தது, பெண்கள் தனக்காக செய்து கொள்ளும் சிறிய அளவிலான அலங்கார ஒப்பணைகளுக்கு கூட அவர் கொஞ்சமும் ஆர்வம் காட்டுவதில்லை என்று!
எப்படி வந்தீர்கள் ....!
-Yesterday morning we got a flight at chennai and reach here @ 12.25pm itself.
- Did you came here just want to meet me -yes. It's our long time plan but couldn't make it. But now it's finally happened.
அடுத்த சில நொடிகளில் எங்களை பேச விடாமல் அவர் பரபரப்பாக செயல் படத் தொடங்கினார
தனக்கு வந்த கடிதங்களில் ஒரு கத்தையை தனியாக எடுத்து வைத்திருந்தார் அவையனைத்தும் ஓர் தன்னார்வ அமைப்பால் Irome Sharmila பற்றி அமெரிக்காவில் நடந்த ஆதரவு கடித போராட்ட கண்காட்சியில், குழந்தைகளும் தன்னார்வலர்களும் அவருக்கு அனுப்பிய கடிதங்களில் இருந்து அவர் பல முறை திரும்ப திரும்ப படித்தவைகளாக இருக்கலாம்…….. அதில் சில வற்றில்...,
Be strong iron lady
All the best for your movement
Love you Sissy
We want you, please take care of your health
என பல தரப் பட்ட கடிதங்கள். அனைத்தையும் இந்திய அரசு அலசி ஆராய்ந்த பின்னர் தான் இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது!
அந்த கடிதங்களில் ,ஒரே பெண் இரு முறை கடிதம் எழுதியுள்ளார் என்பது வரை மிக நுணுக்கமாக அதே நேரம் ,கவனமாக சேகரித்து வைத்துள்ளார் . அவருக்கு தன் நன்றியை கூறி விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிந்தது . ..! But there is no mail or phone number on that card.
ஸ்கூட்டியில் வரும் போதே ராஜ் குமார் எங்களிடம், சாப் ஆப்கோ பாஞ்ச் மினிட் டைம் தியா, but i will give one more 10 minutes to you . With in 15 minute you have to finished the conversation and come out என்று கூறியிருந்தார். அதே போல எங்களை அறிமுகம் செய்து வைத்து விட்டு அப்போதே அவர் வெளியே சென்றிருந்தார்.
He's my fiancé, ஹீ ஸ் ன் அயர்லான்ட் -ஓர் டெடி பியர் பொம்மை வைக்கப் பட்டிருந்த சிறிய பாலிதின் பெட்டியில் ஒட்டியிருந்த பாஸ்போர்ட் சைஸ் படத்தை காட்டி சொன்னார். What? ???? என இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். Are you serious, is he your fiance -குணா கொஞ்சம் குழம்பி போய் கேட்டார். உங்க காதலரா ?????? - என்றேன் நான். -Yes....yes. - Did you meet him? - Many times. என்றார்.
இது எனக்கு பழைய செய்தி தான் . முன்னமே இதை "ஹைதர் பட இயக்குனர் Vishal Baradhvaj Times now ல் கூறியிருந்தார். " Iron lady heart melted for some special one " என்ற தலைப்பில். - ஷர்மிளா வை சந்தித்ததை இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் எங்களிடம் இதை இத்தனை நம்பிக்கையாக பகிர்ந்து கொள்ளுவார் என சிறிதும் யோசிக்கவில்லை அன்று! ஆனால் ஏனோ அந்த நொடி அவரை எங்கே பார்த்தீர்கள், எப்படி பழக்கம் என்ற கேள்வியெல்லாம் கேட்க தோன்றவில்லை எங்களுக்கு!
Can you write a mail to him என கேட்டவாறே , பதிலுக்கு எதிர் பாராமல் உரிமையாக குணா வின் கையை பிடித்து ஓர் மின் அஞ்சல் முகவரியை எழுதினார். (அந்த கையை இருபது mega pixel camara வில் குறைந்தது இருபத்தியோரு கோணத்திலாவது குணா படம் எடுத்திருப்பார் என்பது தனி கதை)
மின் அஞ்சல் எழுதுவது பற்றி பேச்சு வந்த போது, ஓர் அமெரிக்க ஊடகவியளாலர் தனக்கு எழுதிய கடிதத்தை காட்டி Ask them come and take the interview of mine. And let them spread throuh out the world. எங்கள் மக்களுக்கு ஓர் விடிவு பிறக்கும் என்று நம்புகின்றேன். உங்களை போன்றோர் இதை வெளியில் கொண்டு செல்லுங்கள். என் போராட்டம் இம் மண் விடுதலை பெறும் வரை ஓயாது என்பதை உலகிற்க்கு தெரியப் படுத்துங்கள். - இதை கூறும் போது அவர் கண்களில் ஓர் ஈரமான தீ எட்டி பார்த்ததை நான் உணர்ந்தேன்.
சரி சூழ்நிலை யை இயல்புக்கு கொண்டு வாருவோம் என நானே, உங்களை சந்திப்பதில் மகா .தமிழ். பிராபகரன் பெரிதும் உதவினார் என்றும், அவரின் அஸ்ஸாம்,மணிபூர் பற்றிய குறும் படங்களையும் பற்றி கூறினேன். அப்படியா என்றார். (அவரின் பாதுகாப்பு காரணமாக சில வற்றை தவிற்கின்றேன்.)
நாங்கள் கொண்டு சென்றிருந்த புத்தகத்தை கொடுத்தோம். முதல் பக்கத்தை புரட்டியதும் , தந்தை செல்வா , பிரபாகரன் படங்கள் இருந்தன .! இவரை தெரிகிறதா என படத்தில் கையை வைத்து காண்பித்தேன். பிராபகரன் என கூறு வாரா இல்லை யோசிப்பாரா எனநாங்கள் தயங்கிய போது தான் மிக தெளிவாக முதல் வரியில் நீங்கள் படித்ததை போல அழுத்தம் திருத்த மாக "வேலு பிள்ளை பிராபகரன்" என உச்சரித்தார். Wow you know his full name…..! – Guna
Why not ! I wrote poetry also about him in my earlier days. But he took violence ,that’s only I unable to accepted .
I agree your point. But you have to understand why he took this way. Because this is not just a 10 or 20 years freedom struggle fighting. it’s started from 1954’s. See this picture (தந்தை செல்வாவை காட்டி) we calling him Thanthai Selva means Father.Selva . இவர் முதல் முப்பது ஆண்டுகள் அறவழி போராட்டத்தை மட்டுமே முன் எடுத்தார் . ஆனால் உயிர் பழி அதிகம் ஆனது தான் மிச்சம். உண்மையில் பல யாதர்த்தங்கள் வெளி உலகிற்க்கு மறைக்கப் பட்டு விட்டது . இந்த புத்தகம் நடுநிலையை மட்டுமே பேசும் , உங்களுக்கு தானாக பின்னர் புரியும் என்றேன்.
Definitely I would read என்றார். அது வரை சீராக சென்று கொண்டிருந்த அவரது பேச்சு திடீரென 100 டிகிரி வெப்பம் போல் ஓர் நொடியில் மாறியதை நாங்கள் வாழ் நாளில் மறக்க இயலாது . அது , பேசிக் கொண்டிருக்கும் போதே நான் ஏதோ ஹிந்தியில் கேட்க எத்தனிக்க , I don’t know Hindi. Speak in English என நான் பேசி முடிக்கும் முன்னமே அவரிடம் இருந்து பதில் வந்து விட்டிருந்தது. ! ( I Should accept here ,we just freeze few seconds)
அவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருந்த போது நாங்கள் கேட்காத ஓர் குரல் தோணி அது. இது வரை தனக்கு ஹிந்தி தெரியாது என என்னிடம் சொல்லியவர்களிடம் என் அனுபவத்தில் கேட்காத ஓர் கர்வமான குரல் இது என்பதை உடனே உணர்ந்தேன். இதில் வேறு அர்த்தமே இல்லை என நீங்கள் நினைத்தால் அது என் தவறு அல்ல! இன்னும் நீங்கள் இந்த நாட்டை நம்பி கொண்டு இருக்கின்றீர்கள் என அர்த்தம்.
இதற்கிடையில் ராஜ் குமார் உள்ளே வந்து விட்டார் . கொஞ்சம் இயல்பானோம். புறப்படும் நேரம் ஆகி விட்டதால் . அந்த அமெரிக்க ஊடகவியளாலரின் மின் அஞ்சல் தேவை பட்டதால் அங்கே கிடந்த ஓர் பழைய News Paper ல் ராஜ் குமாரின் அனுமதியுடன் எழுதி வாங்கி கொண்டோம். அவரின் பொழுதுபோக்கே அவர் வளர்க்கும் இரு வெள்ளை எலிகள் தான். They are so lovely என்கிறார் அவைகளை பற்றி பேசும் போது. இதில் எங்களை ஆச்சர்ய்ய படுத்தியது, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஓர் கட்டிலின் அடியில் அவைகள் வளர்வது தான்.
Please write your fiancé name in Block letter. Because we couldn’t understand his name in mail address என்றேன்.
(நாங்கள் உள்ளே நுழையும் போது அனைத்தையும் ராஜ் குமாரிடம் கொடுத்து விட்டு தான் வந்தோம் . ) இவர் தான் பயன் படுத்த வைத்திருந்த பேனாவால் தான் குணா கையில் எழுதினார். இப்போதும் பேனாவால் எழுதுவார் என நினைத்தால் ஒரு கருப்பு மார்க்கரை எடுத்து DESMOND COUTINHO என பெரிதாக எழுதி கொடுத்தார் தன் காதலர் பெயரை. (வீட்டிற்கு வந்த பின் நேற்று குணா தான் நியாபக படுத்தினார். , Bro அவங்க நம்மளை கலாய்ச்சிக்கிராங்கோ ப்ரோ ! நீங்க Block letter (Big letter) nu சொன்னீங்க ள்ல , அவங்க அதான் Black letter ல எழுதி குடுத்துட்டாங்க போல என்றார்.) அடங்கப்பா !
சச்சின்,கலாம், Happy New year 2015 என கலவையாக தன் சுவரை அலங்கரித்திருந்தார். 10க்கு 20 அளவுள்ள ஓர் மருத்துவ மனை அறையை அழகான பூங்கா, நூலகம் என மாற்றியிருந்தார்.
புறப்படும் சமயம் நாங்கள் அளித்த புத்தகத்தில், அவரால் தொடர்பு கொள்ள இயலாது என அறிந்தும் எங்களின் தகவல்களை பதிவு செய்து விட்டு வந்தோம்.
12.25 Pm இப்போ 12.40 க்கு வெளியே வந்திடனும் என்று கூறிதான் உள்ளே அழைத்து சென்றார் ராஜ் குமார் . உண்மையில் வெளியே வந்த போது மணி 01:05 Pm. Thanks to Rajkumar.
நாங்கள் வெளியே வந்து விட்ட பின் அவர் ஞாபகமாக எங்களிடம் இருந்தது, குணாவின் கையில் எழுதப்பட்ட எழுத்தும், மறதியில் நாங்கள் எடுத்து வந்திருந்த அதே அவரின் பேனாவும்.

இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை - 2



பழமை நிரம்பிய கட்டிடங்கள் , மோசமாக பாராமரிக்கப்படும் சாலைகள் இவைதாம் மணிப்பூருடைய அழியா சொத்துக்கள் என தைரியமாக கூறலாம். நாங்கள் தங்கி இருந்த விடுதி முழுமைக்கும் சுற்றி அழுக்கும் வன் பொருள் விற்க்கும் கடையும் தான் இருக்கின்றன. கிட்டதட்ட நம் பேரிஸ் கார்னர் போல என்று சொல்லாம். எங்கு நோக்கிலும் வெறும் சிறப்பு ஆயுதப் படை இராணுவம் தான். அனைவரின் கையிலும் குறைந்தது நான்கு அடி உயரத்தில் அதி நவீன ரக துப்பாக்கியினை காணலாம். அவர்களை படம் எடுக்க தவறவில்லை குணா, கிட்டிய கேப் ல் எல்லாம் கிடா வெட்டினார் ! ஓரளவுக்கு மேல் எங்களுக்கே பயம் வந்து விட்டது ,கரணம் எங்களை தவிற அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் சாதாரணமாகவே இராணுவத்தை எதிர் கொள்வதாகவே தோன்றியது! ஒரு வேளை 20 வருடங்களாக அப்படியே பழகி விட்டதாலோ என்னவோ ! நாங்கள் நகரத்திற்க் குள் நுழையும் போது ,ஓர் இஸ்லாமியரின் கடையில் புகுந்து ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர் இரு இராணுவ வீரர்கள்.
பயண களைப்பில் நன்றாக உறங்கி விட்டிருந்தோம். அந்த ஹோட்டல் தான் பாது காப்பானது என சர்மிளா வின் அண் ணன் பரிந்துரை செய்து இருந்தார். இரவு ஏழு மணி இருக்கும் தூங்கி எழுந்த பின்னர் வெளியில் செல்ல தயார் ஆனோம் . . எங்களின் புறப் படுதல் படலத்தை கண்ட விடுதி மேல் அலுவலர் , . எங்கே செல்கிறீர்கள் என்றார் .....! -வெளிய்ல் சுற்றி விட்டு வருகிறோமே கொஞ்சம்cash எடுத்து கொண்டு வந்து விடுகின்றோம் . - உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் ,கொண்டுவர சொல்கின்றேன். ஆனால் வெளியே செல்ல மட்டும் அனுமதி இல்லை . பணம் நாளை கொடுத்தால் போதும். Here every thing would be closed @ 6.30 pm.
-A.T.M -That too ,if you want to go Military will ask you a question's & make you stay with them. When they will allow you to go .....no one knows. அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்பது மட்டும் புரிந்தது ! நல்ல வேளை நுப்பிலான் நினைவு சின்னம் , 2000 ம் ஆண்டில் 20க்கும் மேற் பட்ட பெண்கள் இராணுவ முகாமிற்க்கு முன்பாக ,உலக அரங்கில் இந்தியா வெட்கி தலை குனிந்து நிற்க செய்த 'இண்டியன் ஆர்மி ரேப் அஸ் 'என்று நடத்திய போராட்ட களம் போன்றவற்றறை மதியமே பார்த்து விட்டோம். (மறு நாள் காலை பிரபா தொலைபேசி யில் கூறிய பிறகு தான் உண்மையிலேயே அந்த போராட்டக்களம் நினைவுக்கு வந்தது ) சர்மிளாவின் அண்ணன் ஏற்கனவே 'நாளை காலை எங்களை எஸ்.பி அலுவலகம் வந்து விடுங்கள் (அதாவது புதன் காலை 10 மணிக்கு ) அவரிடம் பேசி அனுமதி வாங்கலாம் என்று கூறியிருந்தார் . அதனால் நேரமாக எழுந்திருக்க வேண்டும் என்பதாலேயே உறங்க சென்று விட்டோம் ! இதற்கிடையில் , என் கடன் அட்டைக்கு பணம் கட்டியதோடு சரி! அதன் பின் முகநூல் ,டிவிட்டர் இணையதளம் எதுவுமே இயங்க வில்லை ! மறு நாள் அதிகாலை யே பிரபா அழைத்து காவல்துயினரிடம் என்ன பேச வேண்டுமென்று குறிப்பாக உணர்த்தி விட்டிருந்தார் . அடுத்த அரை மணிக்கெல்லாம் சர்மிளாவின் அண்ணன் தொலைபேசி யில் அழைத்துஓர் அவசர வேலை காரணமாக தான் மேற்கு இம்பால் செல்வதால் , எங்களையே நேரடி யாக மத்திய சிறைச் சாலைக்கு சென்று சூப்பிரண்ட் ஆப்போலீஸை ( SP) சந்தித்து பேச சொன்னார் . தெரியாத ஊர் தான் ஆனாலும் வேறு வழி இல்லை என நாங்களே அந்த இடத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஓர் ஆட்டோவிடம் வழியை கேட்டு சென்றடைந்தோம் . மத்திய சிறைக்கு முன்பாக வலப் புறத்தில் எஸ்.பி அலுவலகம் ! பச்சை பசேலென்ற புற்களும் அதற்கு ஈடாக தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையுமாக எம்மை வரவேற்பு அளித்தது . உள்ளே செல்லும் முன்னே வழியிலேயே நின்ற உதவி காவலர் ஒருவரை பார்த்து , நாங்கள் எங்கிருந்து வருகிறோம் ,என்ன விடயம் என்பதை கூறினோம் . காத்திருங்கள் எஸ்.பி வரும் நேரம் தான் என்றார் . அலுவலக வாசலில் மரம் ஒன்றில் 5 வயது குழந்தை ஒன்று ஏறி எதையோ பறித்து கொண்டிருந்தது !அவங்க அம்மா அழைத்ததும் அங்கிருந்து நேராக கீழே விழுந்து ஓடியது . நாங்கள் தான் பதறி விட்டோம் . அக் குழந்தை சிறிதும் அலட்டிக்க இல்லை. மணிப்பூர்il பெண்கள் மட்டுமே வேலைக்கு சென்று , ஆண்களை வீட்டை கவனிக்க வைத்த ஊர் ஆயிற்றே சும்மாவா !!!!
சிறிது நேரத்தில் எஸ்.பி வந்து சேர்ந்தார் . அவரை பார்த்தவுடன் நாங்கள் எழுந்து நின்றோம் . எங்களை பார்த்து ,யார் என்ன வேண்டும் என மணிப்பூரியில் கேட்டார் . நாங்கள் ஆங்கிலத்தில் விடயத்தை கூறினோம் . . ஓஓ............oooo என்ற படியே உள்ளே சென்றார் . அடுத்த நிமிடங்களில் ஓர் வெள்ளை உடை தரித்த நபர் ஒ ருவர் எங்களை அழைத்து சென்று தனியறையில் விசாரணை செய்தார் .
எங்கிருந்து வருகிறீர்கள் - சென்னை ,தமிழ்நாடு -எதற்காக நீங்கள் அவரை பார்க்க வேண்டும் - அவரின் ,விடாமுயற்சி யும் ,15 வருட போராட்டத்திற்கு ம் வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் , நான்
- அவரை பற்றி நிறைய படித்துள்ளோம். We impressed on her sacrifise, இது குணா
-Are you from media?? - No No we are General Public ஹூம்ம்.......ம் அன் பார்ட்ச்சுனேட்லி போன july 25 ம் தேதி ல இருந்து உள்துறை அமைச்சகம் சட்டத்தில் சில திருத்தங்களை செய்துள்ளது ! முன்னெல்லாம் வர்ற போறவங்க எல்லாம் இஷ்டத்துக்கு பார்க்க விட்டு கிட்டு இருந்தாங்க . இப்போ நீங்க பார்க்கணும் னா முப்பது நாள் முன்பே அப்ளே செஞ்சு இருக்கனும். நீங்கள் ஊடகமாக இருந்தால் 1லட்சம் முன் பணமா கேமரா , ஆடியோ பதிப்பு சாதனங்களுக்காக கட்ட வேண்டும் . ஒரு நான்கு பக்க பேப்பரை காட்டி இத்தனை யும் பேசினார். அதை குணா பத்திரமாக போட்டோ எடுத்து கொண்டவர் , Please do something Sir, என விண்ணப்பம் கொடுக்கும் பையனாக மாற ஆரம்பித்திருந்தார். அதற்கு வழி சொல்வது போல அந்த வெள்ள ஜிப்பா நீங்க தலைமை செயலகத்துக்கா போய் பேசி பாருங்களேன் என ஏதேதோ கதை சொன்னார் . we spend with him more then 3 minutes.But nothing happened. நானோ , நீங்கள் எ.ஸ்பியிடம் பேச ஐந்து நிமிடங்கள் அனுமதி வாங்கி தாருங்கள் . we will Convinse him. No,no, Sir is very Strict and this is not easy என்று சொன்னார் . தேங்க்யூ என்று கூறி விட்டு வெளியேறினோம் . ஆனால் ,, நான் இட்ஸ் ஓகே என்று மட்டுமே கூறி விட்டு வந்தேன் . காரணம் நம் வேலை இன்னும் முடிய வில்லைyea . ஒரு மாசம் முன்பே அப்ளே பண்ணனுமாம ..... அடேய் , 10 நாள் விடுமுறைகளை 5 நாளாக குறைத்த பின் தான் எங்கள் மேலாளர் மூஞ்சில சிரிப்பு வந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது. செம கடுப்புல வெளியே வந்தோம். தலைமை செயலகத்தில் உள்ள அந்த நபரை சம்மதிக்க வைத்தால் மட்டுமே காரியம் நடக்கும் என்கிற நிலை ! இருவரும் ஏதோ அத்து வான காட்டில் விடப் பட்டது போல உணர்ந்தோம் . அந்த தலைமை செயலர் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ள செய்வாரா என்பதும் சந்தேகமே ! நான் யோசித்து சரியாக இருந்தது . உடனடி யாக பிரபாவை அழைத்தார் குணா , அவர் தெளிவாக கூறிவிட்டார். இது நீதித் துறையின் கீழ் வரும் . உள் துறைக்கும் இதற்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் அங்கே சென்று அனுமதி மறுக்க பட்டால் அதை வைத்தே இவர்களும் இல்லை என்று கூறி விடுவார்கள். கிட்டத்தட்ட இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை . உடனடியாக சர்மிளாவின் அண்ணன் மற்று ஓர் மாற்று ஏற்பாட்டை செய்ய துவக்கி விட்டார் எங்களுக்காக . குணா ,ப்ரோ முதலில் ஓர் இடத்தில் உட்காருவோம் என ஒரு டீக் கடையை தேடி அமர்த்தினார் 2012 ன்னு ஒரு Film டவந்தது பார்த்திருக்கின்றீர்களா நீங்கள் !!! அதில் விஞ்ஞானி ஒருவர் அந் நாட்டின் தலைவரை பார்க்க செல்வார். அதற்கு அந்த தலைவர் வேகமாக நடந்து கொண்டே , இப்போ உனக்கு நேரம் ஒதுக்க முடியாது நீ அப்பறம் வா என்பார்President. - இந்த பதிலை கேட்க நான் 2000 கி.மீ பயணம் செய்து வர வில்லை என்று கூறுவார். After that president will start to listen his query ! ஏனோ திடீரென இந்த காட்சி மனதில் வந்து போனது . அங்கேயே உட்கார்ந்து விடுவோம் என்று மீண்டும் எஸ்.பி அலுவலகம் நோக்கி நடக்க துவங்கினோம். இந்த முறை ஓர் முடிவோடு தான் உள்ளே சென்றோம் . ஏற்கனவே குணாவிடம் பிரபா கூறியிருந்தார் , நீங்கள் அவர்களுடன் வாக்கு வாதமே அல்லது பிரச்சினை யை எதிர் கொள்ளவோ தாயார் எனில் ஓர் ஊடகவியளாலர் என்ற முறையில் அனைத்து உதவி களும் செய்கின்றேன். என்று ! அதே பெஞ்ச் ல் போய் மீண்டும் அமர்ந்தோம். Now that person not seen who's refused our proposal. His named call Mr. Hooter . அடத் தக்காளி ! என் டிபார்ட்மெண்ட் ல இருந்து பேரை எடுத்து வச்சிக்கிட்டே இப்படி பண்ணா எப்டி டே ! ( In our Fire fighting Department we called one equipment Calling "Hooter" . ) if you staying in apartment you can see near the fire 🔥 protection shafts. 3 Option will be there 😊.From bottom, 1.M CP 2.Hooter 3.Speaker.
மீண்டும் அதே வரவேற்பு பகுதி , வெளியே சென்றிருந்த எஸ்.பி உள்ளே வந்து கொண்டிருந்தார் . இம்முறை அவருடன் வெள்ளை டி.சர்ட் அணிந்த வேறொவர் வந்து கொண்டிருந்தார் . எங்களை பார்த்ததும் அவரிடம் ஏதோ மணிப்பூரியில் சொன்னார் . அதில் சர்மிளா என்பது மட்டுமே புரிந்தது . சிறிது நேரத்தில் அடுத்த காவல்துறை அலுவலர்கள் வந்து எங்களை கண்டு யார் இவர்கள் என வினவினார்கள் . அதற்கு ஒரு உதவியாளர் , ஒவ்வொருவருக்கும் பதில் கூறிக் கொண்டு இருந்தார் . அவர்கள் பேசியதால் எனக்கு ஷர்மிளா ,ஷர்மிளா ,ஷர்மிளா என்பது மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது . பின்னர் ஒருவர் வந்து , Where are you coming from என திரும்ப முதலில் இருந்தே ஆரம்பித்தார் . ஸ்ஸ்ஸ ஸ ஸ ப் ப ப் ப் பா என ஆகி விட்டது . ஆனால் முன்னேற்றம் இருக்கும் என தோன்றியது .
அடுத்த கொஞ்ச நேரத்தில் ,வெள்ளை டி.சர்ட் அதிகாரி இருந்த அறைக்குள் அழைத்து சென்றார்கள் . அவர் எங்களை புன்னகையோடு வரவேற்க , கொஞ்சம் அமைதியாக உணர்ந்தோம் . நாங்கள் யார் எதற்காக வந்துள்ளோம் என அனைத்தும் பொறுமையாக கேட்டறிந்தார். Do you want visit her for what purpose. -Just want to speak with her., She is impressive us very much. 15 years hunger strike don't not easy matter naa ! - What you are doing???? Engineering,medical,police 🚓,business??? I am a Plumbing Engineer. -me I am a Electrical engineer - Guna (இத்தனை நாள்ல Guna, Electrical படிச்சிருக்குறதே அப்போதுதான் எனக்கே தெரியும் . ) Oh !okay 👌 Are you coming here for only purpose of meet Sharmila or Anything else.
-No sir, only want to meet her. And get back to home. We having small amount of holidays only is there. இப்படியே 30 நி மிடங்கள் மேலாக நீண்டது எங்கள் உரையாடல்.
ஒரு கட்டத்தில் நாங்கள் 3000 கி.மீ கடந்து வந்துள்ளோம் , நேற்று ஆகாய மார்க்கம். நாளை தரை வழி பயணம் என்பதெல்லாம் அவரை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
1992-95 தான் ,சென்னை ,வேலூரில் பணியாற்றிய அனுபவம் .தற்போது வேலூரில் ப்ளை ஓவர் போட்டது வரை கேட்டார். நாங்கள் கொண்டு சென்றிருந்த புத்தகத்தையும் (I want English edition book 📚 regarding Tamil Eelam & L.T.TE nu ஒரு பதிவு கூட எழுதினேன் ஞாபகம் இருக்கா ... தோழர்.கொண்டல் அந்த புத்தகத்தை கொடுத்து அனுப்பி இருந்தார் . தோழர்.திரு வும் நல்ல புத்தகம் எடுத்து செல்லுங்கள் என்று கூறியிருந்தார் )எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவரே ஒரு வெள்ளை தாளை கொடுத்து விண்ணப்பம் ஒன்று எழுத சொன்னார் . அவரே பேனாவையும் கொடுத்தார் . எழுதி கையொப்பம் இட்ட பின் அதை எடுத்துக் கொண்டு எ.ஸ்பி யை காண சென்றார் . இவர் பெயர் S.K.Thouthoung ,. D.S.P. என அங்கிருந்த பெயர் பலகையை பார்த்து அறிந்து கொண்டோம். முன்னதாக ,எங்கள் அடையாள அட்டையை கேட்ட போது என் கடவு சீட்டை கொடுத்தேன் . இது இந்தியா தான் பாஸ் போர்ட் எ ல்லாம் தேவையில்லை என சிரித்தார். இறுதியாக எஸ்.பி யிடம் பேசி எங்களுக்காக அனுமதி வாங்கி விட்டார். எங்களை உள்ளே அழைத்தனர். எ.ஸ்பி எங்களிடம் , We stopped all like this visitors, but you came from long distance that's what we allow you to meet her. But you having only 5 minutes. And no photo graphs ,no voice regarding.... I agree sir, when you take this much risk for us we should be honest naa ! Just take all my phone's & cameras, pass port even single pen too. After our exit,you give my things. -Ha...ha...ha no problem. Take your time.but don't cross the laws &rules. பின்னர் நாங்கள் கொண்டு சென்ற புத்தகத்தை புரட்டினார். ஒரு வழியாக எங்கள் பேப்பரில் கையொப்பம் இட்டார். நன்றி கூறி புறப்படும் நேரம். ப்ரோ இவங்க கூட ஒரு போட்டோ .............என்றார் குணா ! அவங்க கூட தான் எடுக்க முடியாது உங்க கூட எடுத்துக்குறோமே என்றோம். கொய் கட் பட் நஹி ஓஹின்னா என்றார் டி.எஸ்.பி Thouthoung சிரித்து கொண்டே ! பாகு பலி தமிழ் வாலி பிலிம் ஹேன்னா - ?????? - எங்களை தன் Scooty-ல் ஷர்மிளா வை காண அழைத்து சென்ற ராஜ் குமார் என்பவர். மணிப்பூர் முழுமைக்கும் ஒரு வாரமாக பெட்ரோல் கிடைப்பதில் சிரமமாம். அதற்கு மட்டும் 100ரூபாய் கொடுத்து விடுங்கள் என்றார் . தாரளமாக என்றேன் நான். மேலும் நாங்கள் மருத்துவமனை யை தேடி அலைய கூடாது என இவரை டி.எஸ்.பி யே எங்களோடு அனுப்பி இருந்தார் .
நல்ல நண்பராக மாறி விட்டார் சிறிது நேரத்தில் . வழியில் ஆர்மி எங்களை மடக்க தன் அடையாள அட்டை காட்டி எங்களை கூட்டி சென்றார் . சில உள்ளூர் சாதி பிரச்சினை காரணமாக பேஸ் புக் ,டிவிட்டர் , இணையதளம் போன்றவற்றை அரசு இரண்டு நாட்களாக முடக்கி வைத்துள்ளதாக கூறினார் . அப்போதுதான் என் FB ,இணையதளம் வேலை செய்யாததின் காரணம் புரிந்தது . 25 நிமிட பயணத்தில் ஷர்மிளா இருக்கும் ஜவஹர் லால் மருத்துவமனையை சென்றடைந்தோம்.
எங்களை நேராக எந்த பரிசோதனையும் இன்றி உள்ளே அழைத்து சென்றார் . கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ பெயர் பலகைகளும் மணிப்பூரியிலேயே இருந்தது ! பெண் காவலர் ஒருவரை பார்த்து விடயத்தை கூறி அனுமதி சீட்டை காட்டினார். அவர் உள்ளே சென்று பேசி விட்டு பக்கத்து அறை செல்லுங்கள் என்று கை காட்டினார் .
இரோம் ஷர்மிளா இருக்கும் அறையை நோக்கி நடந்தோம்.
-தொடரும்

இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை - 1


இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை!
சில மாதம் முன்பு மின்னல் (Hari Haran) என்னை காண கேளம் பாக்கம் வந்திருந்தான்! இருவரும் பேசிக் கொண்டிருந்த போது இமயமலை Bike riding போலாமாண்ணே! என்றான் நானும் சரிடா போலாம், ஆனால் எனக்கு விடுமுறை கிடைப்பது அரிதானதே! கொஞ்சம் யோசிக்கனும் என்றேன்! அட போங்கண்ணே, நீங்க உங்களுக்குள்ளயே ஒரு வட்டம் போட்டு வச்சிருக்கீங்க அதை முதல்ல உடைச்சிக்கிட்டு வெளியே வாங்க, அப்போ தான் இந்த உலகம் எவ்ளோ அழகா இருக்கும்ன்னு தெரியும்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்! நானும் ஏதோ புரிஞ்சா மாதிரி தலையை ஆட்டி அனுப்பிட்டேன்!
ஒரு பத்து நாள் இருக்கும் அன்றைக்கு தஞ்சாவூரில் இருந்து இரவு சென்னை திரும்பி கொண்டிருந்தேன், மின்னல் தொலைபேசியில் அழைத்தான், அண்ணே, நான் காலையில நாலரை மணிக்கு எல்லாம் வண்டலூர் வந்திடுவேன், கேளம் பாக்கம் வந்திட்டு போன் பண்றேன் வந்திடுங்க என்றான் நானும் சரி என்றேன். ஆனால் அவன் எனக்கு முன்பாக வந்திறங்கி அத்தை வீட்டிற்க்கே சென்று விட்டிருந்தான். அன்று மாலை அவன் எங்கோ வெளியூர் செல்வதாக பதிவிட்டிருந்தான். பின்னர் தான் தெரிந்தது பய புள்ளை எங்க கிட்ட ஏதும் சொல்லாமல் கொள்ளாமல் இமயமலை Bike riding கிளம்பி விட்டான் என்பது.........!
அதோட விட்டா பரவாயில்லை,! தினம் தினம் What's app ல Photo அனுப்பி கடுப்பேத்த ஆரம்பிச்சுட்டான்! ஓரளவுக்கு மேல நானும் கடுப்பாகி நம்ம கவிராயர்அரவிந்த்.கே.எஸ் க்கு கூப்பிட்டு, தலைவரே நாம இமயலை போறோம் செப்டம்பர் முதல் வாரம் தயாரா இருந்துக்குங்க என்று கூறி தொலை பேசியை அனைத்து விட்டேன். இரண்டு நாள் கழித்து Guna SanThiru பேசும் போது இமயமலை பயணம் போவது உறுதியா என்று மட்டும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆம், உறுதி தான் என்று கூறி விட்டு "விஜய் சின்தெல்லா " மாம்ஸ்க்கு அழைத்தேன். விடயத்தை கேட்ட உடனே அவரே, மாப்ள என்னைய தயவு செஞ்சு கூப்பிடாதடா!
உங்க அக்கா ஹங்கேரி போறதா இருந்தா அவங்க office ல அதை நான் தான், நாம தனியா போகலாம்! Office மூலமா போனா வேலையெல்லாம் சொல்லுவாங்க, அது இதுன்னு கதை சொல்லி நான் தான் போக விடலை! இப்போ நான் உங்க கூட வர்றேன்னு தெரிஞ்சா நான் தொலைஞ்சேன் மாப்ள! உங்களுக்கு என்ன வேனும்னாலும் கேளுங்க நான் தயார் பண்றேன் .ஆனா என்னை மட்டும் கூப்பிடாதீங்கன்னு அவர் மறுத்து விட்டார். அடுத்த சில நாளில் கவிஞரும் விடுமுறை கிடைக்க வாய்ப்பே இல்லை கழண்டு விட்டார். இறுதியில் மிஞ்சியது நானும் குணாவும் மட்டுமே! ஏற்கனவே ஒரு பிரச்சினையில் என் மேலாளரிடம் சண்டை போடும் போது அடுத்த மாசம் பத்து நாள் நான் லீவு சார் என்று கோபமாக சொல்லியிருந்தது கொஞ்சம் பின்னாளில் கை கொடுத்தது உண்மை! இதற்கிடையில் மின்னல் போன் செய்து September ல் பனி உருக ஆரம்பிக்கும் எனவே சாலையை அடைத்து விடு வார்கள்! எதற்க்கும் விசாரித்து பாருங்க என்றான்! அவன் சொன்னது போலவே ஆகஸ்ட் 10 தேதிக் கெல்லாம் Sri Nagar சாலை மூடப்படலலாம் என மறு நாளே செய்தி பார்த்தேன். ஏற்கனவே இமய மலைக்கு மாற்றாக Haff long என்று ஓர் இடம் இருப்பபதாக மின்னல் கூறியிருந்தான். அஸ்ஸாம் பக்கத்தில்தான் சென்று வாருங்கள் என்றான். அவனுக்கு மாவோயிஸ்ட்டுகள் அதிகம் அங்கு வசிப்பபதால் தயக்கம் என கூறியிருந்தான்.
கிட்டதட்ட அஸ்ஸாமை சுற்றித்தான் நம் பயணம் என்பது முடிவானது! குணாவிடமும் பேசி சம்மதம் வாங்கியாகி விட்டது! இதற்கிடையில் குணாவிற்க்கு திடீரென படப்பிடிப்பு ஏதும் வராது என உறுதி செய்து கொண்டோம். நான் ஏற்கனவே அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்ததால் கொஞ்சமாக சமாளித்தும், நிறைய சண்டை போட்டும் விடுமுறையை உறுதி செய்தோம். ஓர் நாள் இரவு தொலைபேசியில் பேசும் போது Google map ஐ திறக்க சொல்லி அஸ்ஸாம் பக்கத்தில் இருக்கும் இடங்களை படிக்கச் சொன்னேன் குணாவிடம்.
- நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் பூடான் ன்னு காட்டுது Bro - இன்னும் கொஞ்சம் Zoom பண்ணுங்க - Dimapur, Imphal, senapati......... -wait, wait இம்பாலா??? -ஆமாம் Bro இம்பால்ன்னு ஒன்னு காட்டுது என்றார். - இம்பால் To Haff long எவ்ளோ தூரம் காட்டுதுன்னு பாருங்க! - 400KM. -செம, அப்போ ஒரு வேளை செய்வோம், இரோம் சர்மிளா சொந்த ஊரு அதான் அவங்களை போய் பார்ப்போமா!!!
-Bro செம ஐடியா Bro அப்டியே செய்யலாம். நான் தயார் என்றார்!
மறு நாளே Google ல் தேட துவங்கினேன். What is the Residential address for Irome Sharmila??? Where is irome sharmila right now
How to meet Irome sharmila??? என்னெவெல்லாமோ போட்டு பார்த்தும் ஒரு உறுப்படியான தகவலும் கிடைக்கலை!
நாங்கள் ஏதோ குருட்டாம் போக்கில் முடிவு செய்து விட்டோமே தவிர அவரை எப்படி சந்திப்பது யாரை கேட்பது என்று மட்டும் புரிய வில்லை! ஆனால், NDTV 2013 ம் ஆண்டு தன் இணைய பக்கத்தில், சர்மிளாவை பொது மக்கள் சந்திக்க இருந்த தடையை மணிப்பூர் நீதி மன்றம் நீக்கி விட்டது என்ற தகவல் மட்டும் ஆறுதல் அளித்ததது! தற்போது அவர் இருக்கும் மருத்துவமனை யே சிறையாக கையாளப் படுகின்றது என்பதும் கிடைத்தது!
அன்று இரவே தோழர் Kondal Samy க்கு அழைத்து விடயத்தை கூறினேன்! சரி இரவு பத்து மணிக்கு மேல் அழைக்கின்றேன் என்றார்.
அவர் போனை வைத்ததும், வேறு யார் நமக்கு இந்த விடயத்தில் உதவுவார்கள் என யோசிக்க துவங்கினேன். அப்போது தோன்றிய பெயர் தான் திரு. Vijayasankar Ramachandran Frontline ஆங்கில வார இதழின் ஆசிரியர் (மிக்க நன்றி சார் தங்களின் உடனடி பதிலுக்கு) அவருக்கு இன் பாக்ஸ் ல் தகவலை அனுப்பி விட்டு காத்திருந்தேன்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பதில் அனுப்பினார். சற்று கடினம் ஆனால் முயற்ச்சிப்போம் என்றார்.
மறு நாள் காலை கொண்டல் அழைத்தார் அப்போது அவர் தோழர்.Maga Tamizh Prabhagaran சென்ற வாரம் அஸ்ஸாம், மணிப்பூர் சென்று ஷர்மிளாவை சந்தித்து ஆவணப் படம் எடுத்து வந்துள்ளார் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார். குணா விடம் விசயத்தை சொன்ன பிறகு சர சர வென அனைத்தும் நடந்தது!
குணாவின் தோழிகள் ஊடகத் துறையில் இரூந்ததால் பிரபாவின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவரிடம் பேசி நேரில் சந்தித்தும் முழு விபரம் அறிந்து கொண்டோம்! அங்கிருந்து கிளம்பும் இரண்டு நாள் முன்பு இரோம் ஷர்மிளாவின் மூத்த சகோதரர் தொடர்பு எண்ணை வாங்கி கொண்டோம். திங்கட்கிழமை அவரை தொடர்பு கொண்டு பேசினேன். தகவலை சொன்னதும் You, most welcome. Once you reach Here, just call me i will guide you என்றார். மறு நாள் காலை சென்னை to கொல்கத்தா, கொல்கத்தா to இம்பால் க்கு எங்கள் விமானம் பறந்தது! September -1 (Tuesday)
பயணம் முழுக்க குணா, தற்படமாக (Selfiee) எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து நாங்கள் சந்திக்க போகும் இடைஞ்சல்களை அறியாமல் ......,..! சரியாக மதியம் 12:25 க்கு எங்கள் விமானம் மணிப்பூர் தலை நகர் இம்பாலில் தரை இறங்கியது!
ஸ்ஸ்ஸ்ஸ்.....,..ர்ர்ர்ட்ட்.......க்கீரீட்ச்...!.
- தொடரும்