Tuesday, 29 November 2016

வங்கி மோசடியும் - Demonitaization பொய்யும்

வங்கி ஊழல்களின் முக்கியமான ஒன்று!

    நாங்கள் வங்கிகளை நம்பவில்லை, அவைகள் நியாயமற்றவை! மோசடியானவை என்ற வாதத்தை சில நாட்கள் முன்னர் மே பதினேழு இயக்கம் ஓர் தொலைக்காட்சி விவாதத்தில் முன் வைத்தது!

உடனே, சில மோடி பக்தர்களும் பொய் கணக்கு எழுதும் so called நிதி ஆலோசகர்களும் கீழும் மேலும் குதித்த வண்ணம் உள்ளனர்!  அவர்களின் முகமூடியை கிழிக்கவே கீழ் காணும் தகவல் :-
   

மக்களே, நாம் கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம்!
நாடு செழிப்படையப்போகிறது என்றெல்லாம் சீனை போட்டு சுத்தும் தேச பக்தர்களே உங்களுக்காகவே இந்த கட்டுரை!
        வருகிற டிச. மாத இறுதியோடு நம் பிரச்னைகள் தீரப் போகிறது ! அதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்க பணத்தை எல்லாம் Bank ல போடுங்க!

        - இப்படித் தான் சில படித்த அடிமைகளும் பொருளாதார அடியாட்களும் இரு வாரங்களாக கொஞ்சமும் கூச்சமின்றி வங்கிகளுக்காக முட்டுக் கொடுத்து கொண்டு உள்ளனர்.!

இங்கே, நாம் பார்க்க போவது இந்தியாவின் மாபெரும் வங்கி மோசடிகளில் முதல் இடத்தை பிடித்த சில கேவலமான முறைகேடுகளைத்தான் :-

  சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :-

  2008 - 09  பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியிருந்த சமயம்! 
  பல IT நிறுவனங்கள் முடங்கிய காலம்.  அப்போது நான் பெங்களூரில் ஓர் Apartment Construction -ல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்!
ஒவ்வொரு customer ஆக குடியேறிக் கொண்டிருந்தனர்.! ஓரிருவர் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது காண முடிந்தது!
பின்னர் தான் நண்பன் சொன்னான், இவர்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் -ல் வேலை பார்ப்பவர்கள் இரண்டு மாத சம்பளத்துடன் விடுமுறை என்றும், கூப்பிடும் போது வந்தால் போதும் என்றும் சொல்லப் பட்டதாக கூறினான்!

அடுத்த சில நாட்களில் ராமலிங்க ராஜூ என்ற பெயர் பரவலாக செய்திகளில் அடி பட்டது!

$ 1.47 மில்லியன் அளவுக்கு மோசடியும் கையாடளும் நடந்து விட்டது! இனிமேலும் நிர்வாகத்தை நகர்த்தி செய்ய முடியுமா என தெரியவில்லை!  நான் இப்போது பதவி விலகுகிறேன் மன்னித்து விடுங்கள்!

        - வாய் வலிக்காமல் கூறிவிட்டு இடத்தை காலி செய்தார் ராஜூ!

அடுத்தடுத்து CBI, SFIO (Serious Fraud Investigation office) என பல  விசாரணைகள் நடந்து 2015 ல் அவர் குற்றவாளி என நிரூபணம் ஆனது!

  அதெல்லாம் தெரிந்த கதை!  தெரியாத (அ) கவனிக்கப் படாத சில வற்றை இங்கே பார்க்கப் போகிறோம் : -

  * இவர் கையாடல் செய்த பணம் அமெரிக்க டாலரில் 1.47 மில்லியன்.!    எனில் இதை இந்திய மதிப்பில் பார்த்தால் அது லட்சம் கோடியை தாண்டுகிறது!  ( சரியான கணக்கை நீங்களே போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்)

* இத்தனை லட்சம் கோடியை ஒரே நிறுவனத்தின் பேரிலோ தனி நபர் பேரிலோவா வைக்க முடியும்!     
அதற்காக இவருக்கு சரியான ஆலோசனை வழங்கியது ஓர் Auditing நிறுவனம்!

* அவர்களின் யோசனை பேரில் வெவ்வேறு பெயரில் நிறுவனங்கள் போலியாக உருவாக்கப் பட்டது! அனைத்தும் ராஜூ வின் மனைவி மகள், மற்றும் உறவினர் பெயர்களில்! மொத்தமாக 166 போலி நிறுவனங்கள் . அதில் ஒன்று Maytas எனப்படும் நிறுவனம். இது RR -ன் குடும்ப உறுப்பினர்களின் நேரடி தொடர்பில் இருக்கும் நிறுவனம்!

* இவை மூலமாக பல வங்கி கணக்குகள் துவங்கப் பட்டன! அந்த வங்கிகள் நிறுவனத்தின் உண்மை தன்மையை சிறிதும் சோதித்து பார்க்காமலா இருந்திருக்கும்!???   
எல்லாம் தெரிந்தும் அமைதி காத்தனர். 166 நிறுவனங்கள் எனில் குறைந்தது 1 க்கு பத்து எனில் 16 வங்கிகளாவது தேவைப் படும் ஆனால் இங்கே நிலை வேறு!

* இந்த Account களுக்கு சாதாரணமாக கேட்க்கும் Photo I d - proof கூட பல கணக்குகளுக்கு இவர்கள் கேட்கவில்லை!  அவ்வளவு ஏன் PAN Card எண் இல்லாமலே லட்சங்களில் Transaction நடந்திருக்கின்றன!
( The report says: No photographs have been obtained. No nominees have been named. No PAN has been mentioned. There was no introduction by a person holding an account in the bank.)

2002 ம் ஆண்டு வருமான வரித்துறை சட்ட விதியை கிஞ்சித்தும் இவர்கள் Follow செய்ய வில்லை!

* இவர்கள் கணக்கு துவங்க பயன் படுத்திய பெயர்கள் RR ன் நண்பர்கள் உறவினர்கள் பெயருக்கு பின்னால் ராஜூ என்பதே பெரிய தகுதியாக கருதி விட்டனர் போலும்!
A Bashkar Raju, Mallapa Raju, Janaki Ram Raju இவைகளை மட்டுமே Proof ஆக எண்ணி விட்டனர். அதை விட கொடுமை அனைத்து A/C க்கும் ஒரே முகவரி  :-
Shyamala building, Begumpet, Hyderabad. 

* நீங்களே நானோ SB account திறக்க போனால், "நாம மொதல்ல இந்த ஊர்ல தான் பிறந்தோமான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு கேள்வி கேட்பார்கள் என்பது வேறு கதை!

* எந்த கேள்வியும் கேட்காமல் மனம் போல் A/C open செய்த அந்த அசகாய வங்கிகள் இவை தான்:-
                 1. Vyasa Bank (Banjara Hills, Hyderabad),
                 2. State Bank of Hyderabad (Begumpet),
                 3. UTI Bank (Kakinada),
                 4. HDFC Bank (Vishakhapatnam) and
                 5. Karur Vyasa Bank (Vijayawada).

* பணத்தை வெறும் ரூபாய்களாக மட்டுமே வைக்காமல் பங்கு பத்திரங்களாக மாற்றும் வேலையிலும் இவருக்கு உதவியது சில வங்கிகள்
அவை : -
Citi,
ICICI,
HDFC,
HSBC
    சத்தியம் வெளிநாட்டில் இருந்து வாரா வாரம் கோடிக் கணக்கில் பண பரிவர்த்தனை செய்யும் ஓர் நிறுவனம் என்பதை எல்லோரும் அறிந்ததே!  ஆனால், தாங்கள் நடத்தும் பரிவர்த்தனைகளின் மெய்யியல் தன்மை கூடவா பரிசோதித்து அறிய மாட்டீர்கள் என அப்போதே Reserve Bank கேள்வி எழுப்பி இருந்தது!

   எல்லாத்தையும் விட சில முக்கிய உத்தமர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் :-

அவர்கள் நால்வர் :-
          1. S Gopalakrishna,
          2. Talluri Srinivas,
          3. V Srinivasa,
          4. VS Prabhakara Rao

இவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த தலைமை அமைப்பு  வாழ்நாள் தடை விதித்தது!  அத் துறையின் பெயர் The Institute of Chartered Accountants of India (ICAI) . ஆம், இவர்கள் ஆடிட்டர்கள் தான்.
இவர்கள் Price Water House Coopers என்ற நிறுவனத்தின் மூலம் Sathyam Computers க்கு ஆலோசனை வழங்கி வந்தனர்! இந் நிறுவனம் பெங்களூரில் செயல்படுகிறது.  இதன் பூர்வீகம் U.K!

   மேலே சொன்னது ஒரே ஒரு உதாரணம் தான் இன்னும் பல வங்கி  ஊழல்களை பற்றி அடுத்தடுத்து விரிவாக தோலுரித்துக் காட்டப் படும்!

   இந்த நான்கு Auditor கள் தான் வேறு மனிதர்களாக, வேறு உருவங்களாக, நிதி ஆலோசகர், பொருளாதார வல்லுந‌ர், சமூக ஆர்வலர் என பற்பல பெயர்களில் சிலர் டி.வி விவாதங்களில் பாஜக வுக்கும் WTO & IMF அஜெண்டாவுக்கும் முட்டுக் கொடுத்து கொண்டுள்ளார்கள்!

  

Saturday, 26 November 2016

ஈழமும் - கியூபாவும்!

பிடல் காஸ்ட்ரோ ஈழப் இனப்படுகொலையில் ஐ.நா. வில் துரோகம் இழைத்து விட்டதாக சில பதிவுகளை காண முடிகிறது!
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து விட்டனர் எனவே நாங்கள் பிடலை எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள்!

இது சரியான புரிதல் இல்லாததாலும் தவறான அரசியல் பார்வையும் கற்பிக்கப் பட்டதால் வந்த வினை!

1.2008 வரை தான் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில் இருந்தார்.

2.LTTE மீது பல நாடுகள் தடை கொண்டு வந்த போது லத்தீன் நாடுகள் கியூபா உட்பட யாரும் தடை கொண்டு வர வில்லை!

3.ஐ.நா. வில் விசாரணை வந்தது 2010 -ல் தான்!
2013 -ல் அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதாக கூறி கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே LLRC - அறிக்கையாக இலங்கை ஏற்கனவே வெளியிட்டு இருந்ததை தான் அமெரிக்கா தன் தீர்மானத்தை கொண்டு வந்தது!
        அப்படி பட்ட கேவலமான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து பேரணி நடத்தியவர்கள் பட்டியலே இருக்கிறது! 

(பேச வைக்காதீர்கள் நண்பர்களே, மனக் கசப்பு தான் வரும்)

4. தீர்மானத்தில் ஈழம் என்ற வார்த்தையோ, சர்வதேச விசாரணை என்ற எழுத்தோ மறந்தும் கூட இடம் பெற வில்லை!

5.தீர்மானம் இலங்கையை காப்பாற்றுவதாகவே இருக்கிறது, அதை நிராகரிப்பு செய்து இந்தியா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் லயோலா மாணவர்கள் 2013 பிப்ரவரி-யில் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.!
   
   அதன் பின்பு நடந்த மார்ச் மாணவர் போராட்டம் நாம் அறிந்ததே!

6. உலகிற்கே தெரியும் கியூபா எப்போதுமே அமெரிக்கா வுக்கு எதிரானது என்று! அதன் அடிப்படையில் தான் கண்ணை மூடி எதிர் பக்கம் நிற்கிறது கியூபா (எதிரே நிற்பது இலங்கை)

7. இந்த விடயத்தில், கியூபா வுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி இருக்க வேண்டியவர்களில் புலம் பெயர் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது!

இனப் படுகொலையின் சாட்சியங்களாக பல்லாயிரம் மக்கள் உலகெங்கும் உள்ளனர்!
அவர்களின் சாட்சியங்களை,

* காணொளி யாக,
* ஒலி வடிவமாக,
* புத்தகங்களாக,
* ஆவணப் படங்களாக,
* திரைப்படமாக,
* மேடை நாடகங்களாக
மாற்றி குறைந்தது ஆயிரம் பக்க ஆவணமாக மாற்றியிருக்க வேண்டாமா??? இந்த ஏழு ஆண்டுகளில்!

  பேராசிரியர்கள், கலைஞர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இல்லையா புலம் பெயர் ஈழத் தமிழர்களின் நடுவே!

       இந்த   7 ஆண்டுகளில் இதை முதல் 3 ஆண்டுகளில் செய்து முடித்து இருந்தால் இந் நேரம் கியூபா உள்ளிட்ட நடுநிலை நாடுகளை ஓர் குழுவாக சென்று சந்தித்து இருந்தால் கிட்ட தட்ட 50 நாடுகளின் ஆதரவை நாம் பெற்றிருக்க முடியும்!

இதற்கு ஆகும் செலவு என்பது  தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு என நீங்கள் செய்த நிதி உதவியில் பாதியளவு மட்டுமே ஆகியிருக்கும்!
   
     இதைத் தான் பல நாட்களாக தொடர்ந்து புலம் பெயர் மக்களிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம்.

இப்போதேனும் விழித்துக் கொள்ளுங்கள் வரும் மார்ச் மாதம் தான் சர்வதேச அளவில் ஈழ இனப்படுகொலை பற்றி பேசப் பபோகும் கடைசி ஐ.நா. கூட்டத் தொடர்!

     தமிழக முதல்வர் பதவி கிடைத்தால் ஈழம் கிடைக்கும் என்று நம்பிய உங்களுக்கு,
நடந்தது இனப்படுகொலை தான்  என நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களிடம் சொல்லாமல் மறைத்தவர்கள் யார் என்பதை முதலில் கண்டறியுங்கள்! பின்னர் காஸ்ட்ரோ வை குறை சொல்லலாம்!

   வருடாவருடம் தலைவரின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து கூறி செல்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை!

கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை!  யதார்த்தம்!

பி.கு :- LLRC / அமெரிக்க தீர்மானத்தில் வரும் மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் நிறுவனம் LYCA

#Tamil_Eelam
#Fidel_Castro
#Hbd_TamilTiger

Monday, 21 November 2016

Demonitaization ம் நாணய வீழ்ச்சியும்

அடுத்த ஆறு மாதம் இந்தியாவின் மிக மோசமான நாட்களாக இருக்கப் போகின்றது!

  ஆம், இதை ஓர் தமிழ் தேசியவாதியாக நான் மட்டும் சொல்ல வில்லை!  மோடி பக்தகர்கள் என தங்களை இத்தனை நாள் சொல்லிக் கொண்ட சில முக்கிய பொருளாதார அல்லக்கைகளே சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!

8 நவ. அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.33 பைசா. 18 ம் தேதி சரியாக Demonitization அறிவித்த பத்தாவது நாள் ₹ 68.16 என வீழ்ந்துள்ளது!
 
   இதை யாருமே பெரிதாக கவனிக்க வில்லை! ஆனால், இத் துறையில் இருக்கும் நண்பர்கள் இது குறித்து நான்கு நாட்கள் முன்பு பேசும் போது பெரும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்!

இன்னும் ஒரு வாரம் இதே பணத் தேக்கம் நீடித்தால் ₹ 70 ரூபாயை தாண்டினாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை!

இதுரை மிகப் பெரிய நாணய வீழ்ச்சியாக நாம் சந்தித்தது ₹68.85 தான் September - 2013 ல் .
இதே நிலை தொடர்ந்தால் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை நாம் காண நேரிடலாம்!

  இவ்வளவு நெருக்கமாக பண வீழ்ச்சி வந்தும் வடக்கு ஊடகங்கள் மோடிக்கு காவடி தூக்குவதில் மட்டுமே குறியாக உள்ளது மிகப் பெரிய கேவலம்!
  
   இந் நேரம் அவர்கள் தான் விவாதத்தை துவக்கி இருக்க வேண்டும் .ஆனால் அவர்கள் விலை போய் பல நாட்கள் ஆகிறது!

கடந்த சில வருடங்களாக தமிழகம் அறிவு சார் தளத்தில் சுதந்திரமான கருத்தியல் ரீதியான விவாதங்களை மையப் புள்ளிக்கு நகர்த்தியுள்ளோம்!

அதே போல் பொருளாதாரம் எனும் இதையும் விவாத களத்திற்கு நகர்த்துவது நம் தலையாய கடமையாகிது!

சரி, வாருங்கள் வரப் போகும் இடர் பாடுகளை பார்ப்போம் ………!

   பண பரிவர்த்தனையில் 87% ₹500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எனில் கிட்டதட்ட 14 லட்சம் கோடியை நடமுறையில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார்கள்.

இது நீங்கள் பயணிக்கும் பேருந்தில் தேவையான 100 லிட்டர் Petrol க்கு பதில் 20 லிட்டர் மட்டுமே கொடுத்து விட்டு போகும் வழியில் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்க்கும் 5 லிட்டர் தருவோம் அதை கொண்டே பயணத்தை சிறப்பாக நீங்கள் முடிக்கலாம் என்றால் எப்படி உங்கள் மனநிலை இருக்கும் என்பதை உணருங்கள் !
அதையேதான் இங்கேயும் செய்திருக்கிறார்கள் .

இதனால் அடுத்ததடுத்து இந்தியா சந்திக்க போகும் விபரீதங்களையே நாம் இங்கே பார்க்க போகிறோம் :-

     நவ. 8 க்கு பிறகு கிராம புற உற்பத்தி (விவசாயம்) என்பது மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது .
    இது நாட்டின் GDP வளர்ச்சியில் 16 %  பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது!

ஆனால், நாட்டின் Corporate (Reliance fresh, Adithya Birla) போன்ற   நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலாக அனைத்து காய் கறி விளை பொருட்களை வாங்கி விடுவதாலும் நேரடி ஏற்றுமதி செய்வதாலும்! 10% சதவிகிதம் எவ் விதத்திலும் பாதிக்க வில்லை இந்த காலாண்டுக்கான GDP யில் மீதி 6% என்ன பாதிப்பை உண்டாக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

   ஆனால், நடுத்தர வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு காய்கறி தட்டுப்பாடு தானாக உருவாகும் என்பதை எந்த ஊடகமும் சொல்ல மறுக்கிறது!

எதிர்வரும் வாரங்களில் நாம் சந்திக்க போகும் அதே நேரம் எந்த ஊடகமும் பேச தயங்கும் சில விடயங்கள் :-

a)  Two Wheeler தயாரிப்பு நிறுவனங்கள் டிச. முதல் தன் உற்பத்தியை பாதியாக குறைக்க போகின்றன!

b) கிராமப்புற ( அ) பேரூராட்சி வேலைவாய்ப்பு என்பது கேள்க்குறியாகும்!  கிட்ட தட்ட 20 லட்சம் பேர் நாடு முழுதும் மறைமுகமாக வேலை இழப்பார்கள்

c) Construction field - கட்டுமான துறை பெரிய அளவில் வீழ்ச்சியையும் கட்டுமான பொருட்களும், வீடுகளும் விலை குறையும்!
இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாகவும் Civil Engineer 's க்கு பெரும் இடியாகவும் இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்!

d) அனைத்து தொழிற்சாலை மற்றும் உற்பத்தி துறையும் 50% தன் அன்றாட பணிகளை நிறுத்தி வைக்கும் என்பதே நிதர்சனம்!

e)  Money flow எனப்படும் பணப் புழக்கம் கிராம புறங்களில் 10% கூட சீர் செய்யப் படாத நிலையில் May 2017 வரை அவர்களிடம் வளர்ச்சி விகிதத்தை நாடு கிஞ்சித்தும் எதிர் நோக்க இயலாது!

f)  மொத்த GDP (The Gross Domestic Product) விகிதமானது மொத்தமாக 0.5 % வீழ்ச்சி அடையும் எனவும்,  சென்ற ஆறு மாத சராசரியான 6.4 % ல் இருந்து இந்த ஆறு மாத நிதியாண்டு 5.9 முதல் 5.7 % வரை செல்லும் என்பதே மிகப் பெரிய கவலையாக பொருளியல் துறை வல்லுந‌ர்கள் கூறுகிறார்கள்.

    இதில் பெரிய கொடுமையே மும்பையை சேர்ந்த ஓர் பங்குச்சந்தை நிறுவனம் அடுத்த ஆறு மாத Estimate யை (-) மைனஸ் ல் தான் வரும் என பகிரங்கமாக அறிவித்தே விட்டனர்!

NDTV profit, Bloomberg போன்ற Economics தொலைக்காட்சிகள் எதிர் வரும் கால பண வீக்கம் குறித்து தெளிவாக அறிக்கை தயார் செய்து விட்டனர்.
அரசின் அடக்குமுறைக்கு பயந்து மௌனம் காக்கின்றனர் வெளியிடாமல்!

இன்று 1 USD = 68.11 ₹ என்ற நிலையில் நாம் தள்ளாடி கொண்டிருக்கிறோம்!  ₹ 69 - 70₹ க்கு தள்ளப்படும் போது மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் அறிக்கை சாட்டையை சுழற்றும் என எதிர் பார்க்கலாம்!

   இன்று (21 நவ.) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு நாட்டின் அனைத்து Banks, ATM களும் செயல் பட்டால் ஒழிய நாம் மீள வாய்ப்பில்லை!
   அப்படியே செய்தாலும் நிலமை சீராக மார்ச் - 2017 ஆகும் என்பதே உண்மை!

  இதெல்லாம் தெரியாம யாராவது பக்தாஸ் சொம்பு தூக்கி கிட்டு வந்து காறித் துப்பி விரட்டி விடுங்க!

Modi is just Broker for Corporate's!  He never realize our issues (or) problems.

#ModiResignNow
#Modi_4_Corporate
#Economic
 

Saturday, 19 November 2016

அமெரிக்க தேர்தல் 7 &8 November 16

  US ELECTION, Hilary, Trump

    இந்த கருமத்தை தவிர வேற News channel ல காட்ட ஒன்மே இல்லையா!!!!?!?

அரசியல் அரிச்சுவடி படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை மூன்று  அமெரிக்க தேர்தல்களை பார்த்துள்ளேன்.

அல்கோர் - ஜார்ஜ்.W.புஷ் இடையிலான போட்டி (2000. -01 என ஞாபகம் ) முடிவுகளின் சர்ச்சை தான் நாங்க தொழில்நுட்பத்துல வளர்ந்தவய்ங்கன்னு காலரை தூக்கி விட்டு சுத்திய வல்லரசை தலையிலயே 'பொளிச்'ன்னு போட்டு தம்பி ஓராமா போய் உட்காருப்பான்னு காலம் காறித்துப்பிய தேர்தல் அது!

  சாதாரணமாக மேற்குலக நாடுகளில் தேர்தல் முடிந்து ஆறு அல்லது தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றே அறிந்திருந்தோம்!

ஆனால் அந்த தேர்தல் முடிவுகள் மட்டும் இதோ அதோ, காலையில், மாலையில் என இழுத்து ஒரு வழியாக ஆக முடிவு தெரியும் முன் வாரப் பத்திரிக்கைகள் முதல் பாதி கட்டுரை வெளியிட்டு அடுத்த வார Cover story க்கு தயார் ஆனாது பக்கங்கள்!

பின்னர் நடந்தது வரலாறு ……!

சரி நடப்பு தேர்தலுக்கு வருவோம்!
மோனிகா லெவென்ஸ்கி - பில் கிளிண்டன் சர்ச்சை தான் பெரிய விடயமாக பார்க்க பட்ட  காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது!

(ஆனால், அந்த நாடகமே KLA வுக்கு ஆயுதம் கொடுத்ததை திசை திருப்பதான் என்பது தனி கதை) .

ஹிலாரியும், டிரம்ப் ம் மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளூம் போதும் Twitter ல் கழுவி கழுவி ஊத்திக் கொள்ளும் போதும்  எனக்கு, இவிங்க இன்னும் எத்தனை இனப்படுகொலையை மறைக்க இந்த நாடகம் போடுறானுகளோன்னு தான் உள்ளே குடையுது!

சில அதிமுகவினர் ஹிலாரி அம்மாவோட தோழி அதுனால அவங்க ஜெயிச்சா நமக்கு நல்லதுன்னு வேற சுத்திக்கிட்டு இருக்கானுக!
அதைத் தான் ஜீரணிக்கவே முடியல!

ஒரு கீழ் திசை நாட்டின் கடை கோடி மாகாண முதல்வரை, உலக வல்லரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lift புடிச்சி 2nd floor வந்து பார்க்க அவ்ளோ அவசியம் என்னன்னு யோசிச்சீங்களா!!!?

  Let's go to small and important Flash Back :-

   98 -ல் தங்கள் திரிகோணமலை  பகுதியில் தாது மணல் திருடும் ஓர் கப்பலை தடுத்து திருப்பி போக சொல்கிறார்கள் விடுதலை புலிகள்.! ஆனால் கேட்கவில்லை!
ஓர் அளவுக்கு மேல் பொறுமை இழந்து ஆயுதங்களை உபயோகித்து ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர் புலிகள்!

அது, அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல்!

அப்போது தான் விடுதலை புலிகள் மேல் முதன் முறையாக அமெரிக்கா தடை கொண்டு வருகிறது-!

   உலக வல்லரசான அமெரிக்காவின் கப்பலை ஓர் சாதாரண தீவில் இருக்கும் ஓர் ஆயுத போராட்ட குழு விரட்டி அடிப்பதா!!!??? என இதை கௌரவ விடயமாக பார்க்கத் துவங்கியது U.S.

   அதற்கு அடுத்த நகர்வாக அமெரிக்கா செய்த கருத்தியல் ரீதியான நரித்தனம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று!
2001 ல் நடந்த உலக வங்கி மாநாட்டில் அதன் துணை தலைவர் பேசும் பொழுது, தெற்காசியாவின் எழில் கொஞ்சும் அழகான இலங்கையை உலக வியாபார மையம் ஆக்க வல்லரசு நாடுகள் உதவ வேண்டும்!

அங்கே நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்த அவர்களுக்கு உதவுங்கள் என அறிக்கை விடுத்தார்.

அதன் பின் தான் தமிழின அழிப்பு சூடு பிடித்தது!

2001 - 02 ல் ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போது  சுமூக தீர்வு ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டது அமெரிக்கா!  எந்த அளவுக்கு என்றால் ………… சந்திரிகா, ரணில் புலிகளின் கோரிக்கையை ஒத்துக்கொண்டாலும் அதை உடைத்து எதிரான தீர்வை தமிழர்களை நோக்கி எடுக்க வைக்கும் அளவுக்கு!

ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில், 
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது!
அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடமே மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!

எனவே இந்த திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் விய்ப்புள்ளது!
அப்போது இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!

    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்தியது!
நார்வே யின் முகமூடியில் அமெரிக்கா இருந்ததை தேசிய தலைவர் அன்றே சுட்டி காட்டினார்.
" அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல்,  அமைதி முகம் நார்வே " என்று!

2001 ல் பெண்டகனும், WTO வும் விமான தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றது!
   
   அன்று இரவே 'War on Terrorism ' திட்டத்தை ஆரம்பிக்கிறது CIA வும் FBI யும்.

   அதில் ஒரு பகுதியாக தடை செய்யப் பட்ட இயக்கங்கள் பட்டியல் வெளியிடப் பட்டது!

அதில் விடுதலை புலிகள் பெயரை இணைத்ததில் முக்கிய பங்கு Hilary க்கு உண்டு!

இதை மறைக்க இன்னும் அமெரிக்க காலை நக்கி பிழைக்கும் சில தமிழக NGO க்களும் கட்சிகளும் அமெரிக்க வாழ் தமிழர்களில் சில அமைப்பும் "ஹிலாரி புலிகளை பெருமையாக பேசினார் என வருசத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கதையை விடுவதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!

  2002 இரண்டில் LTTE க்கு எதிரான தன் ' பிளான் பீக்கான் ' என்ற திட்டத்தை செயல் படுத்த துவங்கின மேற்குலக நாடுகள்!

அதில் ஒரு பகுதி தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை புலிகளின் பெரும் பலமாக கருதி அதை தடுக்கும் முயற்சியில் கொண்டு வரப் பட்டது தான் ' தடா ' சட்டம்.

அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சரியாக கை கொடுத்தவர் ஜெ.  தான்.!

அதில் சிக்கி 500 நாட்களுக்கு மேல் சிறை சென்றவர்களை எல்லாம் நாம் அறிவோம்!

      அந்த நன்றியை நேரில் தெரிவிக்கத் தான் பல ஆண்டுகள் பின்னர் ஜெ. முதல்வராக இருக்கும் போது இரண்டு மாடி ஏறி வந்து சந்தித்தார் ஹிலாரி!   தனக்கான மரியாதை தாமதம் ஆனதை அவர் அமர்ந்திருக்கும் 'கெத்து ' லயே காட்டியிருப்பார் ஜெ.!
   
     இப்போ புரியுதா,  ஹிலாரி ங்குற நரி திராட்சை தோட்டம் பக்கம் ஏன் ஒதுங்கிச்சின்னு!

     இதுல அம்மா சொன்னா  ஹிலாரிக்கு ஓட்டு கேட்பானுங்களாம்!

மீத்தேன்

நியூட்ரினோ

கெயில்

Mecdonals

Pizza - உடல் பருமனை அதிகரித்தது!

Oats - உடல் எடையை காட்டுப் படுத்த!

Pepsi

Coke

  இதில் ஏதாவது ஒன்னு நம் வாழ்வாதாரத்தை காக்குமா???

சொல்லுங்க, எல்லாமே US companies தான்!

     அமெரிக்காவில் எவன்(ள்) ஆட்சிக்கு வந்தாலூம் 3ஆம் உலக நாடுகளில் சுரண்டுவதையும், கொள்ளையடிப்பதையும் நிறுத்த மாட்டார்கள்!  அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

  24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் நடிகர் சங்க தேர்தலை எப்படி மிக அதி முக்கிய செய்தியாக காட்டினார்களோ அதே போலத்தான் US தேர்தலையும் நான் பார்க்கின்றேன்!

    டேய் திருந்துங்கடே!