Wednesday, 21 February 2018

எதிர்பார்த்த கமல், எட்டியே நில் என்ற மம்தா தீதி

பலர் கவனிக்காதது தான் நமக்கு பட்டுன்னு கவனத்துக்கு வரும்!
   அதான் நாம் பயின்ற அரசியலின் ஆழம்!

டெல்லியில் இருக்கும் வங்காளிகள் அனைவரும் AAP க்கு வாக்களியுங்கள்!
  -
  இது மம்தா தீதி 2015 டெல்லி தேர்தலுக்கு முந்தைய நாள் பதிந்த ட்வீட்!

   பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அவர்களின் நோக்கத்தை விரைவாக புரிந்து கொண்டவர்களில் முக்கியமானவர் மம்மா பேனர்ஜி!
   அதனால் தான் மிக வேகமாக கெஜ்ரிவாலை அப்போது ஆதரித்தார்!

கமல் கடந்த சில நாட்களாக, பினராயி விஜயன் தொடங்கி அர்விந்த் கெஜ்ரிவால் வரை ஒவ்வொருவராக பார்த்து விட்டு தன்னை மீடியா வெளிச்சத்திலேயே  வைத்திருந்தார்!
அதில் ஒரு பகுதியாக மம்தா அவர்களையும் சந்திப்பதாக கூறினார்!

  அவர் கேட்ட நேரத்தை கடைசி வரை ஒதுக்கவேயில்லை மம்தா தீதி!

அதற்கு காரணமாக நான் பார்ப்பது, கமலின் எத்தனை மறைத்தாலும் வெளியே தள்ளிக் கொண்டு வந்து எட்டிப் பார்க்கும் அந்த RSS / பாஜக கொண்டை தான்!

  * Demonitaization யை ஆதரித்தது

  * 150 நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகள் பற்றி வாயே திறக்காதது!

  * மக்களை இத்தனை வேதனையில் தள்ளிய மோடி க்கு முட்டு கொடுப்பது!

  * GST யை ஆதரித்தது - மாபெரும் பண மதிப்பிழப்பை பார்த்த பிறகும் கூட……

எல்லாவற்றையும் விட தன் சொந்த மாநிலத்துக்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் எதிர்க்க தயார் என்று சொன்னவர் மம்தா!

தமிழக மக்களின் மீது நெருக்கப்படும் இத்தனை பிரச்சனைகளை பற்றி வாயே திறக்காதவர் கமல்!

அதை தெளிவாகவும் மதவெறி பணியா கும்பலின்  முற்போக்குவாத முகமூடி அணிந்த கைக் கூலிகளில் கமலும் ஒருவர் என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார் மம்தா!

அதனால் தான் கமலை மதிக்கவும் இல்லை, நேரம் ஒதுக்கவும் இல்லை!

அடுத்த சில நாட்களில் மே.வங்க அரசு நடத்திய சினிமா தொடர்பான விழா ஒன்றில் முதல்வர் என்ற காரணத்தால் கலந்து கொண்ட மம்தா அவர்களோடு ஒட்டி நின்று Photo எடுத்துக் கொண்டார் கமல்!

அதையே மம்தா - கமல் அரசியல் சந்திப்பாக ஊடகங்கள் Marketing செய்கின்றனர் 😂😂

அதற்கு அடுத்து,
  கட்சி துவங்கும் போது மம்தா வருவார் அல்லது வீடியோ அனுப்புவார் என்றெல்லாம் "விகடன் " னை வைத்து  You Tube ல் கதை  விட்டார்கள்!

கடைசில புஸ்ஸு………

சரி, வீடியோ தான் அனுப்பலை Tweet ஏதும் போட்ருக்காரான்னு தேடி பார்த்தேன்!

😂😂😂 அப்டியெல்லாம் ஒரு சம்பவமே நடக்கலை!

தமிழக மக்களே………,

ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்திலேயே " தமிழக தலைமைச் செயலகத்தில் " IT யும் துணை இராணுவமும் நுழைந்த போது நமக்கான உரிமைக்குரலாக
  முதலில் சீறிப் பாய்ந்தது " மம்தா " வின் குரல் தான்!
  என்பதை எந்த அரசியல் அமைப்பு அறிந்த தமிழனும் மறக்க மாட்டான்! 

  அவர் ஒருவரை நிராகரிப்பு செய்கிறார் என்று சொன்னால்,  தமிழக மக்களுக்கு அது தேவையில்லாத ஜடம் என்பதை அறிக…!

   "சிலிப்பர் "செருப்போடு மட்டுமே மக்களை      
                      சந்தித்து மக்களை வென்றவர்க்கு தெரியும்

"சிலீப்பர் செல்ஸ் " களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என்பது!

No comments:

Post a Comment