Friday, 6 April 2018

காவிரி யா… கிரிக்கெட்டா… எது தேவை?

IPL -யை தடுக்கலாமா..? காவிரிக்காக இரண்டு ஆண்டுக்கு பிறகு சென்னை அணி வருவதை புறக்கணிக்க முடியாது...,
தண்ணியும் வேண்டும் 2 வருட கண்ணீரும் துடைக்கணும்
போன்ற அரைகுறை வாந்திகளை பரவலாக காண முடிந்தது Twitter - ல் ..!

   சரி..., இது ஒரு பக்கம் இருக்கட்டும் ....!

ஒரு 6 மணி நேரம் கிழக்கில் Queen's Land நோக்கி பயணிப்போம் வாருங்கள் !

Gold Coast - தற்போது நடந்து வரும் Commaon Wealth Games இங்கு தான் நடந்து வருகின்றது !
ஆஸ்திரேலியாவின் Brisban க்கும் New South Wales க்கும் இடைப்பட்ட ஓர் அழகிய கடற்கரை நகரம் தான் கோல்ட் கோஸ்ட்...!
  1788 -ல் ஐரோப்பியர்கள் இங்கே நுழையும் போது 500 க்கும் பக்கமான பழங்குடி இன குழுக்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது !  Torres Strait Islander என்ற தீவு தான் அவர்களின் பூர்வீக பெயர் கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் !

இன்று அவர்கள் 2.8 % மக்கள் மட்டுமே ஆஸ்திரேலியா முழுக்க வாழ்கின்றனர் !
அவர்களின் முக்கியமான இடமாகவும், பூர்வகுடி மண்ணாகவும் இருக்கும் Queen's Land இன்று முற்றிலும் Corporate களாலும் அரச பயங்கர வாதங்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது !
அதில் ஒன்று Adani-யின் Coal Port Point உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..! அந்த மொத்த மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக அழிக்கப் பட்டது !

அதை எதிர்த்து அவர்கள் சில மாதங்கள் முன்பு கடற்கரையில் கூடி Adani Get Out / #StopAdani என்று மனித சங்கிலியாக நின்றது நினைவு இருக்கும் !

நேற்று முன்தினம் 4 ம் தேதி Common Wealth Games நடக்கும் இடத்தை Indigenous Australians என்று அறியப்படும் பூர்வ குடி மக்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி உள்ளனர் !
அவர்கள் முற்றுகையிட்டது England இளவரசரும், ஆஸ்திரேலிய அதிபரும் தங்கி இருந்த விடுதியை..!

இதில் கைது செய்யப் பட்டவர்கள் 3 பேர் .., ஆம் ,மூன்று பேர் மட்டுமே காரணம் அங்கே போராடியது மொத்தமே 10 க்கு குறைவானவர்கள் தான் !

53 நாடுகள் கொண்ட Common Wealth Games யை எதிர்த்து சிறு குழு மட்டுமே போராட முடியும் என்று தெரிந்தும் அவர்கள் செய்வது உலகிற்கு தன் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்.காகத் தான் !

அவர்களுக்கும் அமெரிக்க போல மர்லன் பிரண்ட்டோவும் , Leano டிக்காப்ரியோ -வோ கிடைத்திருந்தால் அவர்களின் துயரமும் துடைக்கப் பட்டு இருக்கும் .,
நம்மை போல அப்துல் கலாமும் , ரஹ்மானும் கிடைத்திருக்கும் போல...!

நம்மிடம் இருக்கும் 8 கோடி  பேரில் 3 கோடி பேராவது IPL க்கு எதிர்ப்பு தெரிவிக்கா விட்டால் ..

நம் பேரன்கள் வெறும் 8 பேர் 2050 களில் நடக்கும் உலக கோப்பை Cricket போட்டியை முற்றுகை இடுவார்கள் தமிழகத்தில் 20 வருடம் முன்பாக நடந்து முடிந்த இனப்படுகொலையை கண்டித்து !

#Aboriginal

#Colonisation_is_not_a_game

#IndiaBetraysTamilNadu
#TNExit.

No comments:

Post a Comment