Friday, 13 January 2017

Facist Hinduthuva Vs Tamil People's

பொன்னார் மன்னிப்பு கேட்டாராம் ………!

யோவ், இதுக்கெல்லாம் இந்த பீஸை எல்லாம் மன்னிச்சு நல்லவரா மாத்தீடாதீங்க!  அந்த மாட்டோட சாணி கூட நம்மளை மன்னிக்காது!

   ஆரியத்துக்கு நேரெதிர் அல்லது அதனின் பொய்யையும் புரட்டையும் முகத்திரையை கிழிக்கும் ஒரே தேசிய இனம் தமிழினம் தான்!
எனவே இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும் தமிழனின் வாழ்வையும் வளத்தையும் சிதைக்கும் வேலையாக மட்டுமே இருக்கும்!

2014 மே  துவங்கி இன்றுவரை எந்த ஓர் நாசக்கார திட்டம் வந்தாலும் அது தமிழகத்துக்கே தள்ளப் பட்டுள்ளது! 
ஒரே நல்ல காரியம் என நினைத்த AIMS மருத்துவமனையையும் பறித்து விட்டனர்! 
      ஒரு பேப்பரை எடுத்து BJP ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்துக்கு செய்த நல்லது என்னென்ன என்று ஒரு பட்டியல் போடுங்களேன் உறுப்படியாக ஒன்னு ரெண்டு கூட தேராது!
  
அதே நேரம் தமிழகத்திற்குள் திணிக்கப் பட்ட, அநீதி இழைக்கப் பட்ட நிகழ்வுகளையும் பட்டியல் போட்டு பாருங்களேன் ……!  அப்போது புரியும் தமிழன் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப் படுகிறான் என்று!

   இவர் மன்னிப்பு கேட்பது ஒன்றும் மனசாட்சி உறுத்தி எல்லாம் இல்லை!

2013 க்கு பிறகு மாணவர்களின் எழுச்சி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது! 

பாஜகவின் சுயரூபத்தை ஒவ்வொரு பேரணியிலும் ஒன்று கூடலிலும் மாணவர்கள் தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்!
   அதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் மன்னிப்பு கேட்பதாக ஜகா வாங்கியிருக்கிறார் ராதா!  இது போன வருசத்துக்கான Script என்பதை மறந்து விட்டார் போல!  வரும் வருடம் (2017) ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் இந்த வருசம் மட்டும் (2016)  சகித்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட அதே வாய் தான் இன்று மன்னிப்பு கேட்பதாக மாற்றி பேசுகிறது!
    
     இவற்றையெல்லாம் தாண்டி நாம் கவனிக்க வேண்டியது! பாதுகாக்க வேண்டியது மாணவர்களின் எழுச்சியைத் தான்!

    ஜல்லிக்கட்டு டன் இந்த எழுச்சி நீர்த்து போகாமல்  விவசாயிகளின் தற்கொலை, மீத்தேன், கெயில், கூடங்குளம், Pepsi, Coke, என அனைத்து சமூக சீரழிவு திட்டங்களிலும் மாணவர்கள் இதே தீவிரத்தை காட்டினால் மட்டுமே நம் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகுவதை தடுக்க இயலும்!

எல்லாவற்றுக்கும் முன்னதாக பாஜக கொண்டு வர துடிக்கும் மாணவ சமுதாயத்தின் வாழ்வை மீண்டும் வர்ணாசிரம அடிப்படைக்கே கொண்டு செல்லும் "புதிய கல்வி கொள்கையை " எதிர்த்து நிற்பது முக்கியமான ஒன்று!

   மேலும்,
2015 ல் டிச.16,17,18&19 தேதிகளில் கென்ய தலைநகர் நைரோபியில் நடந்த WTO வின் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு ஒட்டு மொத்த இந்திய மாணவ சமுதாயத்தின் உயர்கல்வி -யில் மண்ணை போட்டது பாஜக என்பதே இந்த நிமிசம் வரை தமிழக மாணவர்கள் பலருக்கும் தெரியாது!

   இதை எதிர்த்து ஓர் முழு பல்கலைக்கழகமே போராட்டத்தில் அன்றே குதித்ததது!
ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் பட்டது குறிப்பிட்ட தக்கது!
அந்த கல்லூரி டெல்லி JNU ………!

இத்தனை விடயங்களையும் மாணவர்ளிடம் பொது சமூகத்திடமும் கொண்டு போய் சேர்ப்பதே நம் ஒவ்வொருவரின்  கடமை!

2013 ல் எழுந்த மாணவர் எழுச்சியை தேர்தல் அரசியலில் நிறுத்தியதால் தான் அடுத்த வருடமே (2014) ல் ஏன் என்று கேட்க கூட நாதியில்லாமல் வெறும் நூறு பேர் மட்டுமே ஈழத்துக்காக தெருவில் நின்றோம் என்பதை மறவாதீர்கள்! 

போராட்டம் மட்டுமே நமக்கான உரிமையை பெற்றுத் தரும் .! மாறாக எந்த பதவியும் அல்ல! 
பதிவியை வைத்து காரியம் சாதிக்க நாம் ஒன்றும் நமக்கான தனி இறையாண்மையை வாங்கி விட வில்லை என்பதை உணருங்கள்!

No comments:

Post a Comment